Wednesday 12 March 2014

தல ரசிகர் சூப்பர்ஸ்டார் பக்கம் போனதன் பின்ன்னி...!



கோச்சடையான் படத்தின் டீஸர் யூடியூபில் வெளியிடப்பட்டு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.


இந்திய திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த கோச்சடையான் திரைப்படத்தின் டீஸர் உற்சாகமான விமர்சனங்களை பெற்றுள்ளது.


சௌந்தர்யாவின் டிவிட்டர் பக்கத்தில் திரையுலகினர் வாழ்த்துக்களையும், அவர்களது கடின முயற்சிக்கும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


சிம்பு ஆர்வமுடன் கோச்சடையான் விஷ்வல் மற்றும் டிரெய்லரை பார்த்துவிட்டு “Thalaivar is back” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் லதா ரஜினிகாந்த் பாடிய பாடலுக்கு பாராட்டுகளையும் சௌந்தர்யாவின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் சிம்பு.


சிம்புவின் இந்த பாராட்டுகளுக்கு, உடனடியாக “Thank you:-) tc” என்று சௌந்தர்யா பதில் அளித்துள்ளார்.

மார்ச் 21 - ரிலீசுக்கு தயாரானது தல அஜித், படம்...!



தல அஜித், தமன்னா மற்றும் பலர் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த வீரம் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் வருகிற மார்ச் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


சிறுத்தை சிவா இயக்கத்தில், விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்தது வீரம் திரைப்படம். இளைய தளபதி விஜயின் ஜில்லா


திரைப்படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோதிய இப்படம் மெஹா ஹிட்டாக அமைந்தது.


தமிழில் வெளியான ஜனவரி 10 ஆம் தேதியன்றே தெலுங்கிலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், சிற்சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது


தற்பொழுது இப்படத்தின் டப்பிங் வேலைகள் அனைத்தும் நிறைவடைந்திருப்பதால் இப்படத்தினை மார்ச் 21ல் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


வீரம் திரைப்படத்திற்குப் பிறகு தல அஜித் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் சன்னிலியோன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கலாம் என்று கிசுகிசுக்கப்பட்டுவருகிறது. இப்படத்தில் தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹீரோயினை அவமானப்படுத்திய வில்லன் நடிகர்...!



சட்டக்கல்லூரி மாணவர் பியாஸ்வர் ரகுமான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய வஞ்சகம் குறும் பட வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் ராதாரவி பங்கேற்று பேசியதாவது:–


தமிழ் படங்களில் நடிப்பதற்கு இந்தி நடிகைகளை விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கிறார்கள்.

 அவர்கள் வெறும் உதட்டை மட்டும் இப்படியும், அப்படியும் அசைக்கிறார்கள்.

 இதனால் வசன உச்சரிப்புகள் உயிரோட்டமாக இருப்பது இல்லை. இவர்களால் தமிழ் படங்கள் திணறுகிறது.

 இந்த நடிகைகளுக்கு பல லட்சங்கள் சம்பளமாகவும் கொடுக்கப்படுகிறது. உதட்டை மட்டும் ஆட்டுகிற இத்தகு நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளத்தை அதிகம் கொடுக்க கூடாது. குறைக்க வேண்டும்.


இந்தி தெரியாதவர்களை இந்திப் படங்களில் அங்குள்ளவர்கள் நடிக்க வைப்பது இல்லை.

 அது போல் இங்குள்ளவர்கள் தமிழ் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ‘வஞ்சகம்’ குறும்படத்தை டைரக்டர் பியாஸ்வர் ரகுமான் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார்.

சிறந்த நகைச்சுவை நடிகராகவும் அவர் கிடைத்துள்ளார்.


இவ்வாறு அவர் பேசினார்.

தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, டி.சிவா, கலைக்கோட்டுதயம், கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க தலைவர் காயல் இளவரசு, நடிகர்கள் விதார்த், விஷ்ணு, பிரியன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றனர்.

நடிகர் பற்றி அவதூறு பேச்சு..பகீரங்க மன்னிப்பு கேட்டார் ரம்யா...!



சீனியர் நடிகர் அம்பரிஷ் பற்றி தவறாக விமர்சித்ததாக ரம்யா மீது புகார் கூறப்பட்டது. அதற்கு அம்பரிஷ் ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது மூத்த நடிகர் அம்பரிஷ் பற்றி தவறான கருத்தை வெளியிட்டார் ரம்யா.


இதற்கு நடிகர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதுடன், ரசிகர்களும் சரமாரியாக விமர்சித்திருந்தனர். அம்பரிஷை அரசியலுக்கு கொண்டு வந்ததே எனது தந்தை மற்றும் எஸ்.எம்.கிருஷ்ணாதான் என்று ரம்யா சொல்லியிருந்தார்.


இதற்குத்தான் இத்தனை எதிர்ப்பும். இது குறித்து ரம்யா கூறுகையில், அம்பரிஷ் ஏற்கெனவே ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்தார். அங்கிருந்து விலகிய பிறகு அவரை காங்கிரசில் சேர்த்துவிட்டது  கிருஷ்ணாவும், எனது தந்தையும் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.


இதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். என்னை விமர்சிக்கும் சிலர் கட்சிக்குள்ளேயே இருக்கின்றனர். அது பற்றி நான் கவலைப்படவில்லை. எனது கவனம் எல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே உள்ளது.


தேர்தல் முடியும் வரை எதைப்பற்றியும் யோசிக்கப்போவதில்லை. வரும் 17ம் தேதி முதல் மாண்டியா தொகுதியில் பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார். 

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!



மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்குதூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது....

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரகளுக்கு பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்தவதால் உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

அப்பாவுக்கும் எனக்கும் சண்டையா...? அதிர்ச்சியில் யுவன்...!



தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபம் என்ற தகவலால் பதற்றம் அடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா.


சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனால் இளையராஜாவுக்கும், அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.


இதையறிந்து பதற்றம் அடைந்த யுவன் தனது இணைய பக்கத்தில் கூறுகையில், நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன்.

அதற்காக பெருமைப்படுகிறேன். இந்த முடிவுக்கு என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளனர்.


எனக்கும் என் அப்பா இளையராஜாவுக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை என¢றார்.

யுவன் பற்றி அவரது நண்பர்கள் கூறும்போது,யுவன் தனது தாய் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்.


அவர் இறந்ததை பெரிய இழப்பாக எண்ணினார். பிறகு சமய குரு ஒருவரை சந்தித்தார். ஆனால் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறியதற்கான சரியான காரணம் தெரியவில்லை.


 இந்த விஷயத்தில் அவர் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை.

கடந்த ஒரு வருடமாக அவர் இஸ்லாத்தை பின்பற்றி வருகிறார். ஒவ்வொரு நாளும் தினமும் 5 வேளை தொழுகை செய்கிறார்.


ஸ்டுடியோவில் இருக்கும்போதும் இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி பிரார்த்தனை செய்கிறார்.

 விரைவில் தனது பெயரையும் அவர் மாற்றிக்கொள்ள உள்ளார்.  இது அவருடைய சொந்த விருப்பம்.

இதை அவரது குடும்ப உறுப்பினர்கள் மதிக்கிறார்கள் என்றனர்.

சிவகார்த்திக்கேயனுக்கு போட்டியாக சன் டி.வி களமிறக்கும் ஹீரோ...!



மியூசிக் சேனலில் நேயர்களுடன் உரையாடி அவர்களுக்கு பிடித்த பாட்டை போட்டுக் கொண்டிருந்த தொகுப்பாளர் சுரேஷ் ரவி, சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.


 படம் அதிமேதாவிகள். அப்சலுட் பிக்சர்ஸ் சார்பில் பெர்லிசிங் தயாரிக்கிறார். சுரேசுக்கு ஜோடியாக நடிக்கிறார் இஷாரா. கலாபவன்மணி, தம்பி ராமையா, ரேணுகா, நடிக்கிறார்கள்.


கே.பாக்யராஜ் உதவியாளர் ரஞ்சித் மணிகண்டன் இயக்குகிறார்.

"கல்லூரி மாணவர்கள் சிலர், தங்களை அதிமேதாவிகளாக நினைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு எதையாவது செய்து மாட்டிக் கொள்வார்கள்.


அதன் பிறகு அதிலிருந்து வெளி வரமுடியாமல் தவிப்பார்கள். அப்படி தவிக்கிற ஒரு மாணவனும், அவனை காப்பாற்றுகிற ஒரு அதிமேதாவியின் கதை.


சீரியசான விஷயங்களை ஜாலியாக சொல்றோம்" என்கிறார் இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன்.

சம்பளத்தைவிட மற்ற செலவுதான் அதிகம்... - தயாரிப்பாளரும், ஹீரோயினும் மோதல்



பிரியாமணியின் காஸ்டியூம் டிசைனர் கேட்ட சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் மறுத்தார். இதனால் அந்த படத்திலிருந்து வெளியேறினார் பிரியாமணி.

பூமிகா நடித்து தெலுங்கில் வெளியான மிஸ்ஸம்மா படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.

 பூமிகா ஏற்ற வேடத்தில் பிரியாமணி நடிக்க ஒப்பந்தம் ஆனார். படப்பிடிப்பிலும் கலந்துகொண்டார்.

இதற்கிடையில் அதிக சம்பளம் மற்றும் காஸ்டியூம் செலவு போன்றவற்றில் தயாரிப்பாளருக்கும், பிரியாமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து அப்படத்திலிருந்து பிரியாமணி விலகினார்.

இதுபற்றி தயாரிப்பாளர் தரப்பில் கூறும்போது, இப்படத்துக்காக காஸ்டியூம் மற்றும் நகை போன்றவற்றுக்கான செலவை அதிகளவில் பிரியாமணி ஏற்றிக்கேட்டார்.

அதை தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டு வேடத்துக்காக கவரிங் நகைகளுக்கு பதிலாக தங்க நகைகளையே வாங்கிக் கொள்ளவும், எதிர்காலத்தில் அது பயன்படும் எண்ணத்திலும் ஒப்புக்கொண்டார்.

 ஆனால் மும்பையை சேர்ந்த அவரது டிசைனரை குறிப்பிட்டு அவரிடம்தான் நகை மற்றும் காஸ்டியூம் டிசைன் செய்ய வேண்டும் என்றார்.

அவரோ எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய தொகையை சம்பளமாக கேட்கிறார்.

அதை ஏற்க தயாரிப்பாளர் முன் வரவில்லை. இதனால் கோபப்பட்டு படத்திலிருந்து பிரியாமணி விலகிவிட்டார் என்றனர்.

இதுபற்றி பிரியாமணி தரப்பில் கேட்டபோது, சில கருத்துவேறுபாடு காரணமாக படத்திலிருந்து விலகிவிட்டார் என்று பதில் வந்தது.

 அவருக்கு பதிலாக ராகினி திவேதி நடிக்க உள்ளார். 

காருக்குள் ஒரு ‘அதிர வைக்கும் மறைவிடம்’...!



ஸ்பெயின் நாட்டுக்குள் திருட்டுத்தனமாக செல்ல முயலும் ஆட்கள் எல்லை காவல்படை மற்றும் குடிவரவு அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. 60 சதவீதமானவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள்,

40 சதவீதமானவர்கள் தப்பி உள்ளே சென்றுவிடுகிறார்கள் என்று ஒரு கணக்கு சொல்கிறார்கள்.


தற்போது மொரக்கோவில் இருந்து ஸ்பெயினுக்குள் எல்லை வழியாக செல்ல முயன்ற ஒருவரை எல்லை காவல்படையினர் பிடித்திருக்கின்றனர். இவர் எப்படி செல்ல முயன்றார் என்பதுதான், காவல்படையினரை அதிர வைத்திருக்கிறது.


ஸ்பெயின் நாட்டின் பெனி-என்ஸார் எல்லையில், ரெனால்டு-7 கார் கார் ஒன்று வந்தது. அதில் இரு மொராக்கோ நாட்டவர் இருந்தனர். இருவரிடமும் ஒழுங்கான பாஸ்போர்ட், விசா எல்லாம் இருந்தன. காருக்குள் வேறு யாரும் இல்லை. அத்துடன் போக விட்டிருக்க வேண்டும்.


ஆனால், ஏதோ சந்தேகம் ஏற்பட்டதில், காரை சோதனை போட்டதில், மூன்றாவது நபர் ஒருவர், காருக்குள் அதிர வைக்கும் மறைவிடம் ஒன்றில் இருந்தது தெரிந்தது.
‘அதிர வைக்கும் மறைவிடம்’ எது தெரியுமா? காரின் சீட்!

ஆம். முன் சீட்டுக்கு உள்ளே (சீட்டுக்கு அடியே அல்ல) ஒரு நபர் இருந்தார்.


முன் சீட்டுக்குள் உள்ள குஷன்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு, அதன் ஃபிரேமுக்குள் ஒரு நபரை அமர வைத்து, அதற்குமேல் சீட்டில் மேல் பகுதியை பொருத்தியிருந்தார்கள். சந்தேகம் ஏற்படாமல், அந்த சீட்டில் ஒரு நபர் அமர்ந்து பயணம் செய்திருந்தார்!

கீழேயுள்ள போட்டோவில், சீட்டுக்குள் உள்ள குஷன்கள் அனைத்தையும் எடுத்துவிட்ட, நிலையில் அதன் ஃபிரேம் மட்டும் இருப்பதை பாருங்கள். இதற்குள் ஒரு நபர் எப்படி மறைந்திருந்தார் என்பதை அடுத்த போட்டோவில் பாருங்கள்.


எல்லைக்காவல் அதிகாரிகள் இந்த நபர் சீட் பிரேமுக்கு வெளியே வருவதற்கு உதவி செய்தபின் அவரை கைது செய்தனர். இவரை காரில் மறைத்து வைத்து அழைத்து வந்த இரு மொராக்கோ நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவரை பிடித்த அதிகாரி, “யாராலும் ஊகிக்க முடியாக மறைவிடத்தில் இருந்து பயணம் செய்திருக்கிறார். ஆனால், அவரது துரதிஷ்டம் எனக்கு சந்தேகம் ஏற்பட்டபோது சீட்டை அமுக்கி பார்த்தேன்.

அப்போதுகூட சீட்டுக்குள் கடத்தல் பொருட்கள் ஏதாவது மறைத்து வைத்திருக்கலாம் என்றுதான் சந்தேகித்தேன். உள்ளே முழுசாக ஒரு ஆள் இருப்பார் என கனவிலும் எண்ணவில்லை” என்றார்.


பறக்கும் எச்சரிக்கையால் பயந்த போன காமெடி புயல்...!



காமெடி புயல் வடிவேலு சில அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு பிரச்சனையில் இருந்தார். அதனால் சினிமா வாழ்க்கையை இரண்டு வருடங்களாக நிறுத்தி வைத்திருந்தார்.


இப்போது மறுபடியும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என்ற சரித்திர காமெடி படத்தில் நடித்திருக்கிறார்.அந்தப்  படங்களில்  வடிவேலுவின்  முகபாவங்களைப்  பார்க்கும் போதே     சிரிப்பு  தானாக வருகிறது.


இந்நிலையில் தற்போது  படப்பிடிப்பை  முடித்து விட்டு  இறுதிகட்ட  பணிகளில் பிசியாகியுள்ளனர். படத்தை சித்திரை  மாதம் வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.


இதையடுத்து,  கோடை  விடுமுறையில்  கோச்சடையான்,  விஸ்வரூபம்-2,  நான் சிகப்பு மனிதன்,  மான்கராத்தே  போன்ற  மெகா  படங்களும் திரைக்கு வருவதால், வடிவேலு  படத்துக்காகவும்  தியேட்டர்களை  கைப்பற்றும் வேலைகள்  நடக்கிறது.


ஆனால் இந்தப் படத்தை திரையிட இருந்த சில தியேட்டர்களுக்கு எச்சரிக்கை வருகிறதாம்.

இயக்குநர் பாண்டிராஜின் ஃப்ளாஷ்பேக் - காணாமல் போன பக்கங்கள்..!






 இது தேர்வுகளின் காலம். அழிக்கவே முடியாத நினைவுகளின் இங்க் நம் விரல்களின் ரேகைகளில் நிரந்தரமாய் படிந்திருக்கிறது.


ஸ்லேட் குச்சி, பென்சில் என பரிணாம வளர்ச்சி யடைந்து இங்க் பேனாவால் எழுதப்போகும் நாட்களுக்காகக் காத்திருப்போம். கண்டிப்பாக நம் முதல் இங்க் பேனாவை ரொம்ப வருடங்களுக்கு பத்திரமாய் வைத்திருப்போம். இன்றும் கூட சிலர் வைத்திருக்கலாம்.


பேனாக்களை வாங்கப் போவதே ஒரு சுகம். கடைக்கு சென்று இங்க் பேனா என்றதும் இரண்டு, மூன்று பாக்சை திறந்து வைப்பார்கள். கலர் கலராக நம்மை பார்த்து சிரிக்கும் பேனாக்களில் இருந்து, எதை தேர்ந்தெடுப்பதென முழிப்போம்,


இறுதியாக, நமக்கு ராசியான நிற பேனாவை எடுத்து, நிப்பை இங்கில் நனைத்து பிடித்த பெயரையோ, பிள்ளையார் சுழியையோ எழுதிப் பார்ப்போம். முதல் எழுத்து எழுதும் போதே மனசு சொல்லும், “டேய்.. இவ உனக் கானவடா... இனிமே உன் பாக்கெட்ல இருந்து இதயத்தை உரசிக்கிட்டிருக்க போறா!!!”.


என் பேனாவை வேறு யாராவது எடுத்து எழுதினால் பிடிக்கவே பிடிக்காது. விடாப்பிடி யாக “ஒரு நிமிஷம் பேனா கொடேன்... எழுதிட்டு தர்றேன்” என யார் கேட்டாலும் மூடியை கழற்றிக்கொண்டுதான் கொடுப்பேன். அப்போதுதான் பேனா திரும்ப வரும். பேனாவிற்கு இங்க் போட, இன்று காருக்கு பெட்ரோல் போடுவதை விட அதிக கவனம் எடுத்த நாட்கள் அவை.


 துரை கடையில் தான் சுத்தமான, கெட்டியான ப்ரில் இங்க் கிடைக்கும். ஆர்.பி. கடையில், அப்போதே கலப்பட இங்க்தான். கேம்லின் இங்கில் தண்ணீர் கலந்து விற்பார்கள். எழுதினால் வெளுத்தது போல இருக்கும்.


சில நேரம் நண்பர்களிடம் ஐந்து சொட்டு, பத்து சொட்டு இங்க் கடன் வாங்க வேண்டிய நிலைமையும் வரும். சிலர் ஐந்து சொட்டுக்கு மேல் கடன் கொடுக்க மாட்டார் கள். ஊத்தும்போது ஒரு சொட்டு கீழே விழுந்துவிட்டாலும், அதுவும் நம்ம கணக்குதான். அதிலும், காதலிப்பவர்கள் காதலியிடம் இங்க் கடன் வாங்குவதற்காகவே ‘இங்க்’கை கீழே ஊற்றிவிட்டு கடன் கேட்பார்கள்.


அவள் பேனாவில் இருந்து அவன் பேனாவுக்கு, சொட்டு சொட்டாக இங்க் இறங்குவது இதயம் துடிப்பது போலவும், இளையராஜா மெட்டு போடுவது போலவும் இருக்கும். மேலும் பேனா மூடியால் விசிலடித்து காதலியை திரும்பிப் பார்க்க வைப்பதிலும் அவ்வளவு சந்தோஷம்.

வகுப்பில் ஒருவன் உஜாலா சொட்டு நீலம் போட்ட வெள்ளை சட்டையோடு வந்துவிடக் கூடாது. எப்படித்தான் இங்க் அடிப்பார்களோ, வீட்டுக்குப் போகும் போது ஒரு மாடர்ன் ஆர்ட் கண்டிப்பாய் அவன் சட்டையில் இருக்கும். நமக்கு பின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் நட்பு எதிரிகள் வேறு எச்சரித்துக்கொண்டே இருப்பார்கள், “இங்க பாருடி.. பேனாவை திறந்தே வச்சிருக்கோம்.. யாராவது பெஞ்சில சாஞ்சீங்க.. அம்புட்டுதான் சட்டை...” என, ஏவுகணைகளாக பேனாக்கள் பின் பெஞ்சில் வரிசை கட்டியிருக்கும்.

இந்த இங்க் பேனாக்களில் பலவகை உண்டு. இங்க் எவ்ளோ இருக்கிறதென தெரியும் கண்ணாடி பேனா, மர பேனா, குட்டி பேனா, குண்டு பேனா, ஒல்லி பேனா, என அப்பப்போ பேனாக்கள் ரிலீஸ் ஆகி கலக்கும். கேமல், லக்சர் என உள்நாட்டு பேனாக்களின் காலத்தில்தான் திடீர் என்ட்ரி கொடுத்தார் ஹீரோ. அதுவும் தங்க நிற மூடியோடு. அவ்வளவுதான், ஹீரோ பேனா வைத்திருப்பவன்தான் ஹீரோ. எனக்கும் முத்து மச்சான் அந்தமான்ல இருந்து ஹீரோ பேனா கொண்டுவந்து கொடுத்தார்.


அதை சட்டையில் சொருகிக்கொண்டு சுற்றும் போது, ஏதோ தங்க மெடலை சொருகியிருப்பது போல பெருமை பொங்கும். என்னுடன் படித்த ‘சாரி’ சங்கர், பள்ளிக்கூடத்திலேயே எல்லோருக்கும் வட்டிக்கு விடுவான். ஒரு ரூபாய்க்கு பத்து பைசா பிடித்துக்கொண்டு தொண்ணூறு பைசா தருவான்.


வாங்கி தின்பதற்காக அவனிடம் இரண்டு ரூபாய் வட்டிக்கு வாங்கினேன். சொன்னபடி திருப்பி தரமுடியாததால், என் ஹீரோ பேனாவை ஜப்தி செய்துவிட்டான். வட்டியும் முதலுமாக திருப்பி அடைத்து அதை மீட்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இங்க் பேனாக்களை நமக்கு வசமாக பழக்குவதே ஒரு கலை. ஒரே கோணத்தில் பிடித்து சாய்வாக எழுதி, நிப்பை கண்ணாடியில் தேய்த்து, பிளேடால் கீறி, சீர்படுத்துவோம். இப்படி, தயாராகும் பேனாவை களவாண்டு போகவே ஒரு கூட்டம் இருக்கும். நம் மேல் இருக்கும் பகையில் பேனாவின் நிப்பை உடைத்தோ, வளைத்தோ வைத்து விடுவார் கள். இவர்களிடம் இருந்து பேனாவை காப்பாற்றுவதற்காக எப்போதும் பேனாவை பாக்கெட்டில் சொருகியபடியே சுற்றவேண்டும்.


தேர்வுக்கு முதல்நாள் பேனாவை கழற்றி, அலசி, காயவைத்து, புது இங்க் நிரப்புவதே தனி சுகம். இதையெல்லாம் பார்த்துவிட்டு நம் வீட்டிலோ, “படிக்கிறத தவிர மத்ததெல்லாம் நல்லா பண்ணு...” என பாராட்டு பத்திரம் வாசிப்பார்கள். பரீட்சை எழுத இரண்டு, மூன்று பேனாவுடன் வருபவர்கள் மத்தியில், சிலர் இங்க் பாட்டிலோடு வருவார்கள். அவ்வளவு முன்ஜாக்கிரதையாம்.


கடைசியில் பரிட்சை முடிந்ததும், இங்க் அடித்து கொண்டாடினால்தான் ஒரு முழுமையே அடைவோம். இப்படி சந்தோஷங்களில் மட்டு மல்ல, சண்டைகளின் காயங்களிலும் இங்க் இருக்கும். கீழே விழுந்தாலும், கட்டி புரண்டு சண்டை போட்டாலும், தீப்புண் ஏற்பட்டாலும் காயங்களின் மேல் இங்க்கையே தடவுவோம். அதுதான் எங்களின் சர்வரோக நிவாரணி.


இப்படி இங்க் பேனாக்கள் தனிக்காட்டு ராஜாவாக ஆண்ட காலகட்டத்தில்தான் வெள்ளை நிற ரெனால்ட்ஸ் பால் பேனாக்கள், படையெடுக்கத் தொடங்கின. முழுபரிட்சை யெழுத பால் பேனாக்களுக்கு சில ஆசிரியர்க ளின் ஆதரவும், பலரின் எதிர்ப்பும் நிலவ எங்களுக்கோ பயங்கர குழப்பம். பிறகு தலைமையாசிரியரிடம் இருந்து பால் பேனாவை உபயோகிக்கலாம் என்று சர்க்குலர் வந்தது நினைவிருக்கிறது.

இன்றும் கம்ப்யூட்டரில், ஸ்கிரிப்ட்டை டைப் செய்து பிரிண்ட்அவுட் எடுத்துக்கொண்டு ஷூட்டிங் போனாலும், முதலில் அந்த காட்சி களை பேனா பிடித்து அடித்து, திருத்தி, கோடு போட்டு எழுதுவதில் இருக்கும், ஆத்ம திருப்தி வேறு எதிலும் கிடைப்பதே இல்லை.


இப்படி என் வாழ்வில் என்னுடன் ஏராள மான, ‘பென்’கள் பயணித்திருந்தாலும் (பெண்கள் அல்ல, பேனாக்கள்!) இன்றும் நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பேனா, ‘வம்சம்’ படத்தின்போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர், எனக்கு கொடுத்த பேனா. தனது வாழ்வின் பெரும்பகுதியில், எழுதிக்கொண்டே இருந்தவர், இருப்பவர் கலைஞர் அவர்கள். இன்றும் அவர் எழுதிப்பார்த்து கொடுத்த பேனாவை பொக்கிஷமாய் வைத்திருக்கிறேன்.


நாம் கைத்தட்டி ரசித்த டூரிங் டாக்கீஸ், அழுது சிரித்து எழுதிய கடிதங்கள், ஸ்டாம்ப் ஒட்டாமல் அனுப்பிய பொங்கல் வாழ்த்து அட்டைகள், மக்கிய மட்டை கொஞ்சம், கோழி எச்சம் கொஞ்சம், செங்கல் தூள் கொஞ்சம் வைத்து, அரைத்து பூசி அழகு பார்த்த மருதாணிகள், இவையெல்லாம் மெல்ல மெல்ல காணாமல் போனது போல, ‘இங்க்’ பேனாவும் மெல்ல மெல்ல நம்மை விட்டு காணாமல் போய்க்கொண்டிருக்கிறதே! 

வித்தியாசமான சுவையில் காபி வேணுமா? இத ட்ரை பண்ணுங்க..!



பொதுவாக காபி என்றதும் அனைவரும் பாலை கொதிக்க வைத்து, அதில் காபி தூளைப் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்போம். இல்லையெனில் கடைகளில் விற்கும் இன்ஸ்டன்ட் காபி பொடியை வாங்கி, கொதிக்க வைத்த பாலில் சேர்த்து, கலந்து குடிப்போம். இத்தகைய ஒவ்வொரு முறையிலும் ஒவ்வொரு சுவையானது கிடைக்கும்.

ஆனால் நல்ல மணத்துடன், அருமையான சுவையில் ஒரு காபி குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், அதற்கு இப்போது சொல்லக்கூடிய முறையானது சரியாக இருக்கும். சரி, அந்த முறை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...


தேவையான பொருட்கள்:

காபி பொடி - 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - தேவையான அளவு

பால் - 1/2 கப்

கொதிக்கும் நீர் - 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் காபி பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து, நன்கு ஸ்பூன் வைத்து, முட்டையை எப்படி அடிப்போமோ, அதேப்போல் தொடர்ந்து 4-5 நிமிடம், நன்கு நிறம் மாறி பேஸ்ட் ஆகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம், ஒரு பாத்திரத்தில் பால் மற்றும தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இறக்கியதும், அந்த பாலை அடித்து வைத்துள்ள காபி தூளுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

இப்போது அந்த காபியைக் குடித்தால், அது வித்தியாசமான சுவையில் இருக்கும்.

என்ன வற்புறுத்தாதிர்கள் ப்ளீஸ்... - சூப்பர்ஸ்டார் வேண்டுகோள்...!



ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். புது கூட்டணிகள் உருவாகவும் காரணமாக இருந்தார்.


சமீபகாலமாக அரசியல் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார்.


ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களில் ஒரு பிரிவினரின் விருப்பமாக இருக்கிறது. சமீபத்தில் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டி வேள்வி யாகம் நடத்தினார்கள்.


 சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தியும் பேசினர். அரசியலுக்கு வரும்படி வேண்டி ரஜினிக்கு எல்லோரும் கையெழுத்திட்ட கடிதங்களை கொடுப்பது என்றும் முடிவு செய்தனர்.


ஆனால் ரஜினி அரசியல் பற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார். பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. பாரதீய ஜனதா தலைவர்கள் ரஜினி ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


 இந்த நிலையில் கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா முடிந்த பிறகு ரஜினி தனது அரசியல் முடிவு பற்றி அறிவிப்பு வெளியிட்டார்.


பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கா, ஆம் ஆத்மி கட்சிக்கா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் அரசியலே வேண்டாம் என்று கூறினார்.


இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவரது மகள் ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார்.

அவர் கூறும் போது எனது தந்தை ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என்று நினைக்கிறேன். அவர் அமைதியாக வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருக்கிறது.


 ரஜினி ‘கிங்’காக இருக்க வேண்டாம். கிங்மேக்கராக இருந்தால் போதுமானது. தனுஷ் என் தந்தை போல இருக்கிறார். அதனால் தானோ என்னவோ அவரை மணந்தேன்.

3 படத்தில் தனுசை கதாநாயகனாக நடிக்க வைத்து எடுத்தேன். எனது அடுத்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்றார்.

போராடி வெற்றி பெற்றார் சமுத்திரக்கனி ...!



இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் வாசன் விஷூவல் வெஞ்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த நிமிர்ந்து நில் திரைப்படத்தின் வெளியீட்டில்


தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்னையாக உருவாகிவந்தது. இரண்டு மூன்று முறைகள் இப்படத்தின் வெளியீட்டுத்தேதி தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக கடந்த மார்ச் 8 ஆம் தேதி வெளியானது.


ஜெயம் ரவி, அமலா பால்,சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு


சமூகத்திற்கு அட்டகாசமான ஒரு கருத்தினையும் எடுத்துக் கூறுவதாக உருவாக்கப்பட்டிருக்கிறது.


லஞ்சம், ஊழல் போன்ற குற்றங்களை மையப்படுத்தி உருவானதாலோ என்னவோ இப்படத்தின் வெளியீட்டில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தது.


ஆனால் படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பு படக்குழுவிற்கு மாபெரும் உந்து சக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


ஜெயம் ரவி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இப்படம் அமையும் என்றும் ரசிகர்கள் கருத்துத்
தெரிவித்துவருகின்றனர்.