Thursday 13 March 2014

போங்கயா நீங்களும் உங்க போலீசும் - கடுப்பாகும் ''காக்க காக்க'' அன்புச்செல்வன்...!



இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் திரைப்படத்தின் நடித்துவரும் சூர்யா, இப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில்
நடிக்கவுள்ளார்.

வெங்கட் பிரபு படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் படத்திற்குக் கதை சொல்லும் இயக்குனர்கள் பெரும்பாலும் சிங்கம் படத்தின் பாணியிலேயே கதை
சொல்வதாகவும், அப்படம் மாதிரியான கதைகளைத் தன்னிடம் கூற வேண்டாம் என்று சொல்லிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சூர்யாவின் கேரியரில் சிங்கம் மற்றும் சிங்கம்-2 ஆகிய படங்கள் மிக முக்கியமான பங்களிப்பினைச் செய்துள்ள படங்களாகும்.

குறிப்பாக சிங்கம்-2 படம் ஆந்திராவில் சக்கைப்போடு போட்டு, தெலுங்கு ரசிகர்களையும் இவருக்குப் பெற்றுத்தந்தது.

ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்பதால் சூர்யா இந்த முடிவிற்கு வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

தற்பொழுது சூர்யா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புக்கள் நிறைவடைந்துள்ளன.

இதுவரை படம்பிடிக்கப்பட்டுள்ள காட்சிகளால் சூர்யா மிகவும் திருப்தியாக இருப்பதாக் கூறப்படுகிறது.

வருகிற ஆகஸ்ட்டில் இப்படத்தினை வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது.

அஞ்சான் திரைப்படத்தில் முதல் முறையாக சூர்யா- சமந்தா ஜோடி சேர்ந்துள்ளனர்.

விஷாலால் வருத்தப்படும் விஷ்ணு - விக்ராந்த்



நான் சிகப்பு மனிதன் ஆடியோ வெளியீட்டில் வைத்து விஷ்ணுவும், விஷாலும். ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டனர்


விஷ்ணு ஆடியோ விழாவில் பேசுகையில் பாண்டிய நாடு செண்டிமெண்டாக அடுத்த படத்திலும் லஷ்மிமேனனோடு நடிக்கும் விஷால் ஏன் விக்ராந்தையும் அப்படத்தில் அழைக்கவில்லை என்று கேட்டார்.


விஷ்ணு ஆடியோ விழாவில் பேசுகையில் பாண்டிய நாடு செண்டிமெண்டாக அடுத்த படத்திலும் லஷ்மிமேனனோடு நடிக்கும் விஷால் ஏன் விக்ராந்தையும் அப்படத்தில் அழைக்கவில்லை என்று கேட்டார்.


அதேபோல்  ஷூட்டிங்கிற்கு வந்து லஷ்மிமேனனை சந்திக்கலாம் என நினைத்த விஷ்ணுவை பலமுறை திசை திருப்பியிருக்குறாராம் விஷால்.


ஏன் இப்படி லஷ்மிமேனனை விஷால் பாதுகாக்க வேண்டும் என மேடையில் வைத்து மக்களே நீங்களே இதை கேளுங்கள் என மக்களிடம் விஷாலை கோத்துவிட்டுவிட்டார் விஷ்ணு.


மேடையில் அதற்கு பதில் அளித்த விஷால் லஷ்மிமேனன் 17 வயது பெண் நான் லஷ்மிமேனனை பாதுகாக்கவில்லை உன்னை தான் பாதுகாத்தேன் பிற்காலத்தில் உன்னை உன் அப்பா கைது செய்யும் நிலை வந்து விட கூடாது என்று தான் உன்னை தள்ளி வைத்தேன் என்று காமெடியாக பதிலளித்தார்.


இதில் உன்மையிலே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிருக்காரா இல்ல மழுப்பியிருக்கிறாரா விஷால் என்பது தான் கேள்வி??????????

மானாட மயிலாட அவர் முன்னாடி நான் ஆட இப்போ அரசியலில் ஆடப்போறேன் மச்சான்...!



நடிகை நமீதா தேர்தலில் போட்டியிடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நமீதா அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

அவருக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.

இது குறித்து நமீதா கூறியதாவது:–

நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். 3 கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளன. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிட எனக்கு விருப்பம் உள்ளது. எந்த தொகுதியில் நிற்பேன் என்பதை இப்போது சொல்ல முடியாது.

அரசியல் கட்சியில் இணைந்த பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அதை விரைவில் எதிர் பார்க்கலாம்.

நான் அரசியலில் ஈடுபடுவதால் சினிமா வாழ்க்கை பாதிக்குமா என்ற கேள்விக்கு இடமில்லை.

காரணம் இப்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டு இருக்கவில்லை. நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் நடிப்பேன்.

தமிழக மக்கள் என் மீது நிறைய அன்பு வைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதேனும் திருப்பி செய்யும் நோக்கில் தான் அரசியலுக்கு வருகிறேன்.

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. தமிழக அரசியலில் தான் ஈடுபடுவேன். மக்களிடம் நிறைய அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த தேர்தலில் நிறைய ஓட்டுகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு நமீதா கூறினார்.

நானும் ஒரு பெண்தானே - கடுப்பேத்தறாங்க மை லார்ட்..!



பொம்மலாட்டம் படத்தில் நடிக்கத் தொடங்கிய காஜல்அகர்வால், அதன்பிறகு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வந்தார்.

அப்போதெல்லாம் அவரைப்பற்றி எந்த கிசுகிசுக்களும் பரவவில்லை. ஆனால், தெலுங்கு படங்களில் நடிக்க அவர் ஐதராபாத்தில் முகாம் போட்ட பிறகுதான் அங்குள்ள ஒரு பிரபல தொழிலதிபருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.அந்த செய்தி காட்டுத்தீயாய் பத்தி எறிந்தது.

அதனால் ஆந்திராவில் தொடர்ந்து முகாமிட்டிருந்தால், எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையாகி விடும் என்று ஒரு மாற்றத்துக்காக கோலிவுட்டுக்கு வந்தார் காஜல்.

அந்த நேரம் சில முன்னணி ஹீரோக்களின் படங்களும் கிடைத்ததால் சென்னையிலேயே தங்கி விட்டார்.

அதையடுத்து ஆந்திராவுக்கு மீண்டும் அவர் சென்றபோது, பழைய தொழிலதிபர் சர்ச்சை காணாமல் போயிருந்தது. அதனால் நிம்மதியடைந்தார் நடிகை.

ஆனால், அவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது ஒரு நபருடன் ஊர் சுற்றிய போட்டோக்கள் வெளியாக, மீண்டும் அதே தொழிலதிபர் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

இருப்பினும் இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வந்த காஜல்அகர்வால், தற்போது சில மீடியாக்களுக்கு பதில் கொடுத்துள்ளார். அதில், நடிகைகள் காதலிப்பது ஒன்றும் பெரிய பாவச்செயல் அல்ல.

நடிகைகளுக்கும் மனசு உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள காஜல், தான் தொழிலதிபரை காதலிக்கவில்லை என்று மறுப்பு சொல்லவில்லை. மாறாக, இன்னும் மூன்று ஆண்டு கழித்து என் திருமணம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

உன்னோட செகண்ட் இன்னிங்சில் இதுவரை போட்டி இல்லை..ஆன இப்போ நான் இருக்கேன்..!



சிம்பு-ஹன்சிகா காதல் முறிவுக்கு நயன்தாராவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடிப்பதற்கு முன்பு வரை, ஹன்சிகாவுடன் அவரது காதல் ஆரோக்யமாகவே இருந்து வந்தது.

ஆனால், எப்போது நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடிக்கத் தொடங்கினாரோ அதிலிருந்து அவர்களது காதல் ஆட்டம் காணத் தொடங்கியது. ஆக, திரைக்குப்பின்னால் ஏதோ நடந்திருக்கிறது.

அதையடுத்து சிம்புவை சந்திப்பதையே தவிர்த்தார் ஹன்சிகா, ஆனால் இந்த செய்தி வெளியில் புகைந்தபோது, அவரை தேற்றும் விதமாக, நயன்தாரா எனது தோழி, ஆனால் ஹன்சிகா எனது காதலி என்று ஸ்டேட்மென்ட் விட்டார் சிம்பு.

ஆனபோதும் அடங்கவில்லை ஹன்சிகா. திடீரென்று ஒருநாள் காதலை முறித்துக்கொண்டு, இனி நான் தனி ஆள் -என்று டுவிட் செய்து உலகுக்கு காதல் முறிவை தெரியப்படுத்தினார்.

இந்த நிலையில், இப்போது எனக்கு எந்த கட்டுக்காவலும் இல்லை என்பதை மேல்தட்டு ஹீரோக்களுக்கு நேரடியாகவே தெரியப்படுத்தி புதிய படங்களில் வேகமாக கமிட்டாகி வருகிறார் ஹன்சிகா.

அதோடு, தனது காதல் முறிவுக்கு காரணமான நயன்தாராவுக்கும் அட்டாக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

அதாவது, அவர் அடுத்தடுத்து நடிப்பதற்கு எந்தெந்த கம்பெனிகளிடம் பேசுகிறாரோ அந்த கம்பெனிகளுக்கு தானும் விசிட் அடிக்கிறாராம்.

அதோடு, நயன்தாராவை விட குறைவான கூலியில் தான் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் சொல்லி படங்களை தன் பக்கம் இழுத்து வருகிறாராம்.

இதனால், செகண்ட் இன்னிங்சில் இதுவரை போட்டி இல்லாத களத்தில் கம்பு சுற்றி வந்த நயன்தாரா, இப்போது ஹன்சிகா என்றொரு போட்டியாளர் உருவாகியிருப்பதால் அவரை எதிர்கொள்வது எப்படி என்பது தெரியாமல் தடுமாறிப்போய் நிற்கிறார்.

ஆன்ட்டிக்கு வந்த விபரித ஆசையைப் பாருங்க...!



திருமணம் ஆன 3 மாதத்திலே மீண்டும் நடிப்பை தொடர முடிவு செய்திருக்கிறார் சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி.

இவருக்கும் மோட்டார் பைக் தயாரிக்கும் தொழில் அதிபர் அக்ஷய் வர்தேவுக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன் காதல் திருமணம் நடந்தது.

சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்து, குடும்பத்தை கவனித்துக்கொள்வேன் என சொல்லியிருந்தார் சமீரா. ஆனால் அவருக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்துவிட்டது.

இது பற்றி அவர் கூறும்போது, திருமணம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நிறைய மாற்றங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அவருடன் எனது வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழித்து வருகிறேன். நான் சமைக்கும் சாப்பாட்டை விரும்பி சாப்பிடுகிறார்.

திருமணம் முடிந்த கையோடு நடிப்புக்கும் முழுக்கு போடவே எண்ணி இருந்தேன்.

ஆனால் மீண்டும் நடிக்கும் ஆசை துளிர்விட்டிருக்கிறது. மாதுரி தீட்சித், கரீனா கபூர் போன்றவர்கள் திருமணத்துக்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அதேபோல் நானும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கான நல்ல வாய்ப்பு எப்போது வரும் என்று காத்திருக்கிறேன் என்றார்.

ஓசில ஃபினாயில் கெடச்சாலும் நாங்களா விடமாட்டோம்....!



படப்பிடிப்புக்காக வைத்திருந்த குலாப் ஜாமுன்களை மிச்சம் வைக்காமல் வெளுத்துகட்டினார் விசாகா.

இதனால் பட யூனிட்டார் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோயின் விசாகா சிங். வாலிப ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சந்தோஷமான காட்சி ஒன்றில் எதிரில் வைக்கப்பட்டிருந்த குலாப் ஜாமுனை விசாகா சாப்பிடுவது போல் காட்சி படமாக்க இருந்தனர்.

 காட்சி தொடங்கும் முன் ஒரு குலாப் ஜாமுனை சாப்பிட்ட விசாகா, அதன் சுவையில் தன்னை மறந்து கிண்ணத்தில் இருந்த 10க்கும் அதிகமான குலாப் ஜாமுன்களை வெளுத்து கட்டினார்.

இதை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்தது. காட்சிக்கான டிஸ்கஷனில் இருந்த டைரக்டரோ தகவல் அறிந்து ஷாக் ஆனார்.

 உடனே கடையிலிருந்து மீண்டும் குலாப் ஜாமுனை வாங்கிவந்து அதை காட்சிக்கான டேக் போகும்வரை மறைத்து வைக்க உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ருசிகர சம்பவம் பற்றி விசாகா கூறும்போது, குடும்ப உறுப்பினர்கள் சந்தோஷமாக கூடி பேசிக்கொண்டிருந்த காட்சி படமாக்கப்பட்டது.

ஒரு கிண்ணம் நிறைய குலாப் ஜாமுன் வைக்கப்பட்டிருந்தது. அதை சாப்பிட்டபடியே சிரித்து பேச வேண்டும் என்று இயக்குனர் கூறி இருந்தார்.

 எனக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு ஜாமுனை எடுத்து வாயில்போட்டேன் அப்படியே கரைந்துவிட்டது.

 அந்த சுவை என்னை சுண்டி இழுக்கவே 10க்கும் மேற்பட்ட ஜாமுனை எடுத்து சாப்பிட்டேன்.

 அருகில் இருந்த சக நடிகர்களும் ம்... வெளுத்துக்கட்டு என்று  ஊக்கப்படுத்தினார்கள்.

காட்சியை படமாக்குவதற்குள் எல்லாவற்றையும் எடுத்து சாப்பிட்டுவிட்டேன்.

இதைப்பார்த்த பட யூனிட்டார், அடுத்த டேக் எடுத்தால் ஜாமுன் தேவைப்படும் என்பதால் என் கண்ணில் படாமல் மறைத்துவைத்து விட்டனர்.

 ஜாமுன் சுவை இன்னும் என் நாவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றார். 

எனக்கென்ன நானே ஒரு ஹீரோயின்தான் - ஸாரி நீங்க வேற ஆள பாருங்க....!



பிரியங்கா சோப்ராவுக்கு நான் அம்மாவா? மறுபடியும் இப்படி சொல்லாதீங்க என்று டைரக்டரிடம் கடிந்துகொண்டு பட வாய்ப்பை நிராகரித்தார் தபு.

தமிழில் காதல் தேசம், சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே, டேவிட் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தபு.

பாலிவுட் நடிகையான இவருக்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தபோதும் மனதுக்கு பிடித்த வேடம் மட்டுமே ஏற்று நடிக்கிறார்.

சமீபத்தில் பெண் இயக்குனர் ஸோயா அக்தர் இயக்கும் இந்தி படத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு வந்தது.

பிரியங்காவுக்கு  31 வயது. தபுவுக்கு 42 வயது. 11 வயது மட்டுமே இருவருக்கும் வித்தியாசம்.

வயது அதிகமான பெண்களுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகிவிடவில்லை.

அப்படியே அந்த வேடம் ஏற்று நடித்தாலும் அது எனக்கு பொருத்தமாக இருக்காது.

 இன்னொருமுறை இந்த வேடத்தில் நடிக்க கேட்காதீர்கள் என்று ஸோயாவிடம் எரிந்து விழுந்தார் தபு.

பதறிப்போன ஸோயா, ஸாரி கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தவர் வேறு அம்மா நடிகையை தேடிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் திரைக்கு வந்த சல்மான் கானின் ஜெய் ஹோ படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார் தபு. 

போட்டோவை காப்பி அடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை..கமல் காட்டம்...!



பிரெஞ்சு போட்டோகிராபரின் ஸ்டில் பார்த்து தனது பட போஸ்டரை வடிவமைக்கவில்லை என்றார் கமல்.

உத்தமவில்லன் படத்திற்காக கமல்ஹாசன் வித்தியாசமான மேக்அப் அணிந்திருந்த ஸ்டில் வெளியானது.

 இது பிரெஞ்ச் போட்டோகிராபர் எரிக் என்பவர் எடுத்த போட்டோவை பார்த்து காப்பி அடித்திருப்பதாக இணைய தளங்களில் தகவல் வெளியானது.


இது குறித்து கமலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தேயம் என்ற பழங்கால கலை ஆயிரம் வருடமாக இங்குள்ளது.

 கலைநயத்துடன் கூடிய இந்த ஆட்டத்தை ஆடும் பாரம்பரியத்தை சேர்ந்த 3வது தலைமுறை கலைஞர்தான் எனக்கு இந்த மேக்அப் அணிவித்தார்.


காதல் ஜோடி ஒன்று மார்பில் தலைவைத்தபடி போஸ் தந்தால் அது ஏக் துஜே கே லியே போஸ்டரின் காப்பி என்று சொல்வார்களா?

உத்தம வில்லன் படத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய  கூத்து கலையுடன் கலந்த கலவையாக தேயம் நடனம் என் படத்தில் இடம்பெறுகிறது.

முகத்தில் பெயின்ட்டால் மேக்அப் அணிவது சாதாரண விஷயம் கிடையாது. நான் அணிந்திருப்பது முகமூடி அல்ல.

என் முகத்தின்மேல் பெயின்ட்டால் வரையப்பட்டிருக்கிறது. இதற்கு 4 மணி நேரம் ஆனது.


வில்லன் என்பதற்கு அர்த்தம் இருக்கிறது. வில் என்றால் அம்புவை குறிக்கும் வில்லன் என்றால் வில்லுடன் அம்புவை ஏந்தியவன் என்று பொருள்.

இதுவரை 18 நிமிடத்துக்காக 7 சீன்கள் படமாகிவிட்டன. இப்படத்தில் பல நடிகர்களிடமிருந்து ஆச்சரியப்படத்தக்க நடிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம். இவ்வாறு கமல் பதில் அளித்தார்.

சொந்த காசுல நான் சூனியம் வச்சிக்கிட்டேன்...!



தனுஷ் தயாரித்து நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘வேலை யில்லா பட்டதாரி’. இதில் அவரது ஜோடியாக அமலா பால் நடித் துள்ளார்.


இந்தப் படத்திற்காக அண்மையில் சில கோடிகள் அவசர நிதி தேவைப்பட்டதாம். விநியோகஸ்தர்களிடம் புரட்டிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார் தனுஷ்.


இதையடுத்துத் தனக்குத் தெரிந்த சிலரை தொலைபேசி வழி தொடர்பு கொள்ளவும் செய்தாராம். ஆனால் யாரிடமும் எதிர்பார்த்த சாதகமான பதில் கிடைக்கவில்லை என்பதுதான் செய்தி.


எல்லா பதில்களுமே வெறுப்பையும், எரிச்சலையும்தான் ஏற்படுத்தியதாம். பணம் இல்லை என்று அவர்கள் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை.


அவர்கள் சொன்ன பதிலே வேறு என்பதுதான் முக்கியம்.


 “சார், நீங்கத் தயாரிச்சு சிவகார்த்திகேயன் நடிக்கிற ‘டாணா’ படத்துக்கு வேணும்னா எத்தனை கோடி வேணும்னாலும் தர்றோம் என்பதுதான் அது ம்ம்ம்ம்ம் - 

இவங்களுக்கு இந்த அம்மா, அண்ணி இதெல்லாம் வேணாமாம்..ஸ்ட்ரெய்ட்டா ஹீரோயின் தானாம்...!



1980களில் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்த நதியா திருமணத்துக்கு பிறகு நடிப்பைவிட்டு ஒதுங்கி இருந்தார்.


பல வருடங்களுக்கு பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார். தொடர்ந்து அவருக்கு அம்மா வேடமே வந்ததால் ஒன்றிரண்டு படங்கள் மட்டும் நடித்துவிட்டு மற்ற படங்களை ஏற்காமல் தவிர்த்தார்.


அப்போது கூறும்போது,திருமணத்துக்கு பிறகு நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று சொல்கிறார்கள். அக்கா, அம்மா, அண்ணி வேடம்தான் தருகிறார்கள்.


ஆனால் பாலிவுட் படங்களில் திருமணத்துக்கு பிறகும் கதையின் நாயகியாக நடிக்க அவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. இங்கு அதுபோல் வாய்ப்பு தருவதில்லை.


 தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் திருமணம் ஆனவுடன் ஹீரோயின்களை ஒதுக்கிவிடாமல் அவர்களின் திறமைக்கு ஏற்ப முக்கிய வேடங்களை உருவாக்கலாம் என்று கூறி இருந்தார்.

இந்தநிலையில் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தை தெலுங்கில் நடிகை ஸ்ரீபிரியா ரீமேக் செய்து இயக்குகிறார்.

அதில் வெங்கடேஷ், மீனா நடிக்கின்றனர்.


பெண் போலீஸ் அதிகாரி வேடத்தை நதியாவை நடிக்க கேட்டார் ஸ்ரீபிரியா. மலையாள படத்தை பார்த்ததும் நதியாவுக்கு அந்த வேடம் பிடித்தது.


 உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். இதுபற்றி நதியா கூறும்போது, முதன் முறையாக ஒரு பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளேன் என்றார்.

மருதநாயகம் படத்தை மீண்டும் தொடங்க கமல் எடுத்த அதிரடி முடிவு..!



அஜீத், விஜய் உள்ளிட்ட இளவட்டங்களே வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையில் நின்று கொண்டிருக்க, சீனியர் நடிகரான கமலோ, வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

அதிலும், நடிப்பு என்பதை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளாமல், நடித்துக்கொண்டே படத்தை இயக்குவது, அல்லது கதை வசனம் எழுதுவது என்று பல முகங்களை காட்டி வருகிறார் கமல்.

அந்த வகையில், விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி நடித்து முடித்து விட்டவர், இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் ஈடுபட்டிக்கிறார்.

இதற்கிடையே ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் அவர் நடிக்கும் உத்தமவில்லன் பட வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்த படத்தை இன்னும் 6 மாதத்திற்குள் ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் கமல், அதை மனதில் கொண்டு வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

 அதோடு, உத்தம வில்லனை முடிக்கும் தருவாயில் இருக்கும்போதே, த்ரிஷ்யம் ரீமேக்கிலும் நடிக்கிறார். ஆக, அந்த படமும் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு விடும் நிலை உள்ளது.

அதனால், ஓய்வு கொடுக்காமல் தினமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார் கமல்.

அவருக்கு ஒன்றும் இது புதிது இல்லை என்றாலும், தாங்களெல்லாம் வருடம் ஒரு படம் கொடுத்துக்கொண்டிருக்க கமலோ, வருடத்திற்கு மூன்று படம் வரை கொடுத்து விடுவார் போலிருக்கே என்று கோடம்பாக்கத்தின் முன்னணி இளவட்ட நடிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் நிற்கிறார்கள்.

மரணம் எப்போ வரும்..? - இந்த பிளட் டெஸ்ட் போதும்...!



பின்லாந்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, நமது மரணத்தை தோராயமாக முன்கூட்டியே கணிக்கக் கூடிய ரத்த பரிசோதனையை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ரத்த பரிசோதனையை மேற்கொண்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு மரணமடைவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்து விட முடியுமாம்.

இதைக் கேட்பதற்கு சற்று பீதியாக இருந்தாலும் கூட, இந்த பரிசோதனை மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்களுக்கு உயிராபத்து இருக்கிறதா என்பதை ஓரளவு கணித்து விட முடியும் என்று இந்த ஆய்வுக் குழு அடித்துக் கூறுகிறது.


என்.எம்.ஆர் டெஸ்ட்...

நியூக்ளியார் மேக்னெட்டிக் ரிசொனன்ஸ் ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி என்று இந்த சோதனைக்கு பெயர் வைத்துள்ளனர். சுருக்கமாக என்.எம்.ஆர்.
பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள்....


பின்லாந்து ஆராய்ச்சியாளர்கள்....

இந்த சோதனையை பின்லாந்தின் ஊலு என்ற இடத்தில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மிகா அலா கொர்பெலா என்பவர் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.


மார்க்கர்கள் மூலம்...

இதுகுறித்து இந்த ஆய்வாளர் கூறுகையில், " எங்களது இந்த என்.எம்.ஆர். சோதனையில் பல பயோ மார்க்கர்களைப் பயன்படுத்துகிறோம். அது உங்களது உடலின் உண்மை நிலையை சொல்லி வடும். அதை வைத்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களுக்கு மரணத்திற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம் என்றார்.


ரத்த மாதிரி சோதனை....

கிட்டத்தட்ட 17,000 பின்லாந்து மற்றும் எஸ்டோனியர்களின் ரத்த மாதிரியை வைத்து இந்த பரிசோதனை ஆய்வை நடத்தியுள்ளனராம்.


மரணத்தைக் கணிக்கும் காரணிகள்...

இந்த ஆய்வில், நான்கு முக்கியமான பயோ மார்க்கர்கள்தான் நமது மரணத்தை கணித்துச் சொல்லுகிறதாம். அதாவது அல்புமின் மற்றும் ஆல்பா 1 அசிடிக் கிளைக்கோ புரோட்டீன் என்ற இரண்டு புரத அளவுகள், லிபிட் மெட்டபாலிசம் வேரியபிள்கள் மற்றும் சிட்ரிக் அமில அடர்த்தி ஆகியவைதான் இவை.


ஆய்வில் தகவல்....

இந்த நான்கு பயோ மார்க்கர்களும் அனைத்து மனிதர்களின் ரத்தத்திலும் கலந்துள்ளன. இவற்றின் அளவும், தன்மையும்தான் ஒருவருடைய மரணத்தை நிர்ணயிக்கிறதாம். இதைத்தான் இந்த ஆய்வும் கூறுகிறதாம்.


ஆரோக்கிய வாழ்வுக்கு...

வயது, புகை பிடித்தல் பழக்கம், மது அருந்தும் அளவு, கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்புச் சத்து, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகியவையும் கூட ஒரு மனிதனின் உயிர் ஸ்திரத்திற்கு முக்கியமானவைதான். இவற்றின் பாதிப்பாலும் மரணம் ஏற்படுகிறது.

முதல் ஆய்வு....

இதுகுறித்து பின்லாந்து பல்கலைக்கழக என்.எம்.ஆர். ஆய்வக தலைவர் பாசி சொய்னென் கூறுகையில், " உலகிலேயே இப்படிப்பட்ட ஆய்வு நடப்பது இதுவே முதல் முறையாகும். இதில் மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றார்.

ரத்தப்பரிசோதனை...

இப்போது இந்த ஆய்வு தொடக்கக் கட்டத்தில் இருந்தாலும் கூட எதிர்காலத்தில் ஒருவரது மரணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு கணித்துக் கூறி விடும் அளவுக்கு இந்த ரத்தப் பரிசோதனை உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கம் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

வாழ்நாளை நீடிக்கலாம்...

மேலும் அவ்வப்போது இந்த ரத்த பரிசோதனையை செய்து நமது உடல் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, வாழ்நாட்களை நீ்ட்டிக்கவும் வழி பிறக்கும். PLoS Medicine என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.

சிக்கன் விங்ஸை மட்டும் தயவு செய்து சாப்பிடாதிங்க..! ஏன்னா அதுல....?



சிக்கனை பிடிக்காதவர் எவரும் இருக்க முடியாது. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் ஒரு பிடித்தமான உணவு. நம் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், கனிமங்களும் சிக்கனில் அதிக அளவில் இருந்தாலும் கூட, அவை நமக்கு சில சமயங்களில் தீங்கை விளைவிக்கும் என்பது நம்மால் மறுக்க முடியாது.

அதிலும் குறிப்பாக ப்ராய்லர் கோழி உண்பவர்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கோழியை விட ப்ராய்லர் கோழியின் விலை குறைவு என்பதாலும், நகர்புறத்தில் எளிதில் கிடைக்கும் என்பதாலும் மக்கள் இதை சாப்பிடுகின்றனர். ஆனால் ப்ராய்லர் கோழியில் உள்ள தீமைகளை பலர் அறிய வாய்ப்பு இல்லை.

பெரும்பாலானோர் கோழியின் இறக்கையைத் (chicken wings) தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த சிக்கன் விங்ஸ் உடலில் பல அபாயகரமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

அதிலும் குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் இரத்தக்கட்டிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். இந்த கட்டியை நீக்கினாலும் எதிர்காலத்தில் கர்ப்பப்பையில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்பது தான் அதிர்ச்சிகரமான தகவல். இப்போது அந்த சிக்கன் விங்ஸை உண்பதால் ஏன் இவ்வளவு பிரச்சனை என்பதை பார்ப்போம்

* ப்ராய்லர் கோழியானது வெறும் 65 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து விடுகிறது. இதன் வளர்ச்சியை தூண்டுவதற்கு ஸ்டெராய்டு (Steroids) என்னும் ஊக்கமருந்தானது ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

* மேலும் இந்த ஊசியானது கோழியின் கழுத்து மற்றும் இறக்கை பகுதிகளில் செலுத்தப்படுகிறது. ஆதலால் ஸ்டெராய்டு என்னும் ஊக்கமருந்தின் தாக்கம் கழுத்து மற்றும் இறக்கைகளில் அதிகமாக இருக்கும். எனவே சிக்கனில் கழுத்து மற்றும் இறக்கையை அதிகம் விரும்பி சாப்பிடுவோருக்கு எளிதில் நோய்களானது தாக்கும்.

* செயற்கை முறையில் வளரும் ப்ராய்லர் கோழி, நம் உடலுக்கு தீங்கை விளைவிப்பதால், அதை தவிர்த்து இயற்கை முறையில் வளரும் நாட்டுக்கோழியை சாப்பிட்டால் உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.

சின்னதா கவலை பட்டாலும் புஸ்... ஆயிடுவிங்க...ஆய்வில் தகவல்..!



மனரீதியாக ஏற்படும் பிரச்சினைகள் உயிருக்கு ஆபத்தாகும் என்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கவலை, மனச்சோர்வு, தனியாக இருப்பது போன்ற உணர்வு மனிதர்களுக்கு விரைவில் மரணத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


இங்கிலாந்து நாட்டில் 68000 பேரிடம் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதயநோய், புற்றுநோய் மற்றும் பல நோய்களினால் பாதிப்பிற்குள்ளாகி குறைந்த வயதிலேயே மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்து வந்தது.


 ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து 35 வயதிற்கு மேற்பட்ட 68 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். கடந்த 1994 ம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டுவரை 10 ஆண்டுகள் நடைபெற்ற இந்த ஆய்வில் பல உண்மைகள் கண்டறியப்பட்டன.


உடல்ரீதியாக ஏற்படும் நோய்களுக்கு மனரீதியான சிக்கல்கள் காரணமாக அமைகின்றன. மது அருந்துதல், புகைப்பழக்கம், போதைப்பழக்கத்தினால் குறைந்த வயதில் சிலர் மரணத்தை தழுவினாலும், சைக்கலாஜிகல் ரீதியான சிக்கல்களினால் பாதிக்கப்படும் பலர் விரைவில் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.


தனியாக இருப்பது போன்ற அச்சம், மனச்சோர்வு, போன்றவை நோய்களை தோற்றுவிக்கின்றன. இதனால் பெரும்பாலானோர் குறைந்த வயதில் மரணமடைந்து விடுகின்றனர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


எனவே சிறிய அளவில் மனரீதியான சிக்கல்கள் ஏற்பட்டாலே அவற்றினை தீர்ப்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


ஏனெனில் மனரீதியாக ஏற்படும் சிறு பிரச்சினைதான் உடல்ரீதியான நோய்களுக்கு வழிவகுக்கின்றன என்கின்றனர் நிபுணர்கள். எனவே சிறு பிரச்சினைதானே என்று கவனிக்காமல் விட்டு விடாமல் பிரச்சினைகளை களைய முற்படவேண்டும் என்கிறார் ஆய்வினை மேற்கொண்ட டாக்டர் ரஷ்

டை அடிக்கமாட்டேன்...வயதுக்கு ஏற்ற வேடத்தில் மட்டுமே நடிப்பேன் - அதிர்ச்சியில் கௌதம்



வயதுக்கு ஏற்ற வேடத்தில் மட்டுமே நடிக்க அஜீத் முடிவு செய்துள்ளார்.

மங்காத்தா, ஆரம்பம், வீரம் போன்ற படங்களில் நடித்த அஜீத் தலைமுடிக்கு டை அடிக்காமல் பெப்பர்-சால்ட் தலைமுடியுடன் நடித்தார்.

இனி வரும் படங்களிலும் பெரும்பாலும் தனது ஒரிஜினல் தோற்றத்திலேயே வர முடிவு செய்திருக்கிறாராம்.

இதுபற்றி அவரது தரப்பில் கூறும்போது,இனி வரும் படங்களில் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க அஜீத் முடிவு செய்திருக்கிறார்.

இனியும் கல்லூரி மாணவராக, டூயட் பாடும் இளைஞனாக நடிக்க முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார்.

ஆனாலும் தனது  கதைக்கு ஏற்ப தோற்றத்தை மாற்றிக்கொள்ள உள்ளார்.

சமீபகாலமாக கவுதம் மேனன் படத்துக்காக ஜிம் சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

ஆனால் இது 6 பேக் அல்லது 8 பேக் உடற்கட்டு வைத்துக்கொள்வதற்காக அல்ல. இது ஆக்ஷன் படம் என்பதால் அதற்கு ஏற்ப தனது உடற்கட்டை வலிமைப்படுத்திக்கொள்ள உள்ளார்.

ஒரு சில கிலோ எடையும் குறைக்கிறார் என்றனர். 

இவருக்கு ஒரு படமே 9 வருஷமாகுமா... ஒரு வருஷத்துல 3 படமா...!



கமலின் 3 படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளிவருவதால் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப்போகிறது.

கமல் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படம் முடிந்துள்ளது. ஏற்கனவே வந்த விஸ்வரூபம் படத்தின் தொடர்ச்சியாக இதை எடுத்துள்ளார்.

படப்பிடிப்பு பல மாதங்கள் விறுவிறுப்பாக நடந்து நிறைவடைந்துள்ளது. தற்போது டப்பிங் ரீ-ரிக்கார்டிங், கிராபிக்ஸ் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.

மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தற்போது ‘உத்தமவில்லன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜோடியாக 3 நாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. காமெடி திரில்லர் படமாக எடுக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு நான்கு மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வரும் என தெரிகிறது.

மலையாளத்தில் வெளியான ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக் படவேலைகளை ஆகஸ்டு இறுதியில் துவக்குகின்றனர். ‘திரிஷ்யம்’ மலையாளத்தில் மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம்.

இதன் தமிழ் பதிப்பில் கமல் ஜோடியாக நடிக்க மீனா, சிம்ரன், நதியா பெயர்கள் அடிபட்டன. இறுதியில் கவுதமி தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமும் இவ்வருடம் இறுதியில் ரிலீசாகிறது. 

கோச்சடையான் டிரெய்லரை எத்தனை பேர் பார்த்தாங்க..!



ரஜினியின் கோச்சடையான் பட டிரெய்லரும் பாடல்களும் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன.

இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் இன்டர்நெட், யு டியூப்பில் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் டிரெய்லரை பார்த்து பிடித்துள்ளதாக கருத்து பதிவு செய்தனர்.

கோச்சடையான் கார்ட்டூன் படம் என்ற வதந்தி ஏற்கனவே பரவி இருந்தது. டிரெய்லர் பார்த்தவர்கள் கார்ட்டூன் படம் அல்ல என்பதை உறுதி செய்தனர். 3 டி மோஷன் பிக்சர் தொழில் நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது. அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் எடுத்துள்ளனர்.

டிரெய்லர், பாடல் மிவும் பிடித்து இருந்ததாக நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா, டைரக்டர் செல்வராகவன் போன்றோர் டுவிட்டரில் பாராட்டி உள்ளனர். அவர்களுக்கு படத்தின் டைரக்டர் சவுந்தர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

கோச்சடையான் படம் ரூ.125 கோடி செலவில் தயா ராகியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார். இதே தொழில் நுட்பத்தில் ஹாலிவுட்டில் வந்த அவதார் படத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவானது. படம் முடிய 5 ஆண்டுகள் ஆனது.

டின் டின் படத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவானது. 4 வருடத்தில் இந்த படத்தை முடித்தனர் என்றும் அவர் கூறினார்.

கோச்சடையான் நாயகி யாக தீபிகாபடுகோனே நடிக்கிறார். சரத்குமார், ஜாக்கி ஷெராப், நாசர், ஆதி, ஷோபனா, ருக்மணி போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) 11–ந்தேதி படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என கருதப்பட்டது.

ஆனால் தயாரிப்பாளர் முரளி மனோகர் தேர்தலுக்காக படத்தை நிறுத்தமாட்டோம். ஏப்ரலில் படம் வெளிவரும் என்றார்.

படுகிளாமர் வேடம் ஏற்றதால் வாய்ப்பை இழந்த ஹீரோயின் அதிர்ச்சியில்...!



தமிழில் ஜெயம், அந்நியன், திருப்பதி, வர்ணஜாலம், பிரியசகி உள்ளிட்ட படங்களில் நடித்தார் சதா. அஜீத், விக்ரம் என பிரபல நடிகர்களுடன் நடித்தும் சதாவுக்கு வாய்ப்பு குவியவில்லை.

இந்நிலையில் விஷால் நடித்துள்ள மத கஜ ராஜா படத்தில் கெஸ்ட் ரோல் வேடம் ஏற்றார். இப்படம் வெளிவராமல் முடங்கி உள்ளது.

சதா கூறியது:

மலையாளத்தில் ஹசிம் மோரிகர் இயக்கும் படத்தில் நான் நானாகவே நடிக்கிறேன். நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்? என்கிறார்கள். நிறைய படங்களில் நடிக்க காத்திருக்கிறேன்.

ஜெயராமன் ஜோடியாக புதிய மலையாள படமொன்றிலும் நடிக்கிறேன். இப்படம் பற்றி இயக்குனர் நோவெல் சொன்ன கதை பிடித்ததால் உடனே ஏற்றுக்கொண்டேன்.

எனக்கு நடனம் என்றால் பிடிக்கும். நடன பின்னணியில் அமைந்த ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

பிடித்த கதையாக இருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன்.

தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்து வருகிறேன்.

 இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமில்லை என்றார்.

ஜெயம் படத்தில் அறிமுகமானபோது சதாவுக்கு ரசிகர்கள் ஏராளமானவர்கள் திரண்டனர். அவரது கிராமத்து பாங்கான முகம்தான் இதற்கு காரணம்.

ஆனால் அடுத்தடுத்து அவர் நடித்த படங்களில் படுகிளாமர் வேடம் ஏற்றதால் கிராமத்து பெண் இமேஜை இழந்தார்.

இது அவருக்கு மைனஸாக அமைந்துவிட்டது என்றார் ஒரு இயக்குனர். 

மனிதர்களை நிர்வாணமாகக் காட்டும் ஐபோன் ஆப்ளிகேசன்..! அதிர்ச்சி வீடியோ...



என்ன உலகமடா இது, ஆள்பாதி ஆடை பாதி என்பார்கள் இப்போது இந்த ஐபோன் ஆப்ளிகேசனால் அந்தப் பழமெழிக்குப் பங்கம் வந்துவிடும் போல இருக்கின்றதே, அட ஆமாங்க ஐபோனில் உள்ள ஒரு ஆப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி ஐபோன் கமராவின் மூலம் அடுத்தவர்களை ஆடையில்லாமல் பார்க்கமுடிகின்றதாம்……

இந்தக் கானொளியைப் பார்க்கப் பார்க்க எங்களுக்கு அதிர்ச்சி தாங்கமுடியவில்லை என்றால்ப் பார்த்துக்கொள்ளுங்கள்,இக் கானொளியில் ஒருவர் தனது ஐபோனில் nomaoஎனப்படும் ஆப்பிளிக்கேசனைப் பயன்படுத்தி படம்பிடிக்க ஆரம்பிக்கின்றார், திரையைப் பார்த்தால்!!!! ஐயோ அங்கே தெரிபவர்கள் எல்லோரும் ஆடையில்லாமல் இருக்கின்றனர், போதாக்குறைக்கு ஸ்கூட்டரில வாறவன் கூட ஆடையில்லாமலே தெரிகிறான் என்றால்ப் பார்த்துக்கொள்ளுங்கள்,

அடக் கருமாந்திரமே தொழில்நுட்ப வளர்ச்சி என்று சொல்லி கடைசில நம்மள ஆதிவாசிகளாக்கிப்போட்டானுகளே படுபாவிங்க..

இப்படி உன்மையாகவே ஒரு ஆப்பிளிக்கேசன் இருப்பதாக எமக்கு ஒருதகவல் கிடைத்திருக்கின்றது ஆனால் அந்த அப்பிளிக்கேசன் இதுதானா என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது.