Thursday 13 March 2014

ஓசில ஃபினாயில் கெடச்சாலும் நாங்களா விடமாட்டோம்....!



படப்பிடிப்புக்காக வைத்திருந்த குலாப் ஜாமுன்களை மிச்சம் வைக்காமல் வெளுத்துகட்டினார் விசாகா.

இதனால் பட யூனிட்டார் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோயின் விசாகா சிங். வாலிப ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சந்தோஷமான காட்சி ஒன்றில் எதிரில் வைக்கப்பட்டிருந்த குலாப் ஜாமுனை விசாகா சாப்பிடுவது போல் காட்சி படமாக்க இருந்தனர்.

 காட்சி தொடங்கும் முன் ஒரு குலாப் ஜாமுனை சாப்பிட்ட விசாகா, அதன் சுவையில் தன்னை மறந்து கிண்ணத்தில் இருந்த 10க்கும் அதிகமான குலாப் ஜாமுன்களை வெளுத்து கட்டினார்.

இதை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்தது. காட்சிக்கான டிஸ்கஷனில் இருந்த டைரக்டரோ தகவல் அறிந்து ஷாக் ஆனார்.

 உடனே கடையிலிருந்து மீண்டும் குலாப் ஜாமுனை வாங்கிவந்து அதை காட்சிக்கான டேக் போகும்வரை மறைத்து வைக்க உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ருசிகர சம்பவம் பற்றி விசாகா கூறும்போது, குடும்ப உறுப்பினர்கள் சந்தோஷமாக கூடி பேசிக்கொண்டிருந்த காட்சி படமாக்கப்பட்டது.

ஒரு கிண்ணம் நிறைய குலாப் ஜாமுன் வைக்கப்பட்டிருந்தது. அதை சாப்பிட்டபடியே சிரித்து பேச வேண்டும் என்று இயக்குனர் கூறி இருந்தார்.

 எனக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு ஜாமுனை எடுத்து வாயில்போட்டேன் அப்படியே கரைந்துவிட்டது.

 அந்த சுவை என்னை சுண்டி இழுக்கவே 10க்கும் மேற்பட்ட ஜாமுனை எடுத்து சாப்பிட்டேன்.

 அருகில் இருந்த சக நடிகர்களும் ம்... வெளுத்துக்கட்டு என்று  ஊக்கப்படுத்தினார்கள்.

காட்சியை படமாக்குவதற்குள் எல்லாவற்றையும் எடுத்து சாப்பிட்டுவிட்டேன்.

இதைப்பார்த்த பட யூனிட்டார், அடுத்த டேக் எடுத்தால் ஜாமுன் தேவைப்படும் என்பதால் என் கண்ணில் படாமல் மறைத்துவைத்து விட்டனர்.

 ஜாமுன் சுவை இன்னும் என் நாவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றார். 

0 comments:

Post a Comment