Friday 7 March 2014

அதிக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம்..!



எதிர் வரும் 2023ம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நாட்டின் வர்த்தக நகரமாக விளங்கும் மும்பையில் மட்டும் 30 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர்.

 உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட டாப்-5 நகரங்களில் 5-வது நகரமாக மும்பை விளங்குகிறது என்பதுடன் கடந்த 25 ஆண்டுகளில் ஒரு சில பணக்காரர்களிடம் மட்டுமே பணம் குவிந்ததாதகவும் அதிலும் ஒரு சதவீத குடும்பங்களிடம் 46 சதவீத வளம் குவிந்திருப்பதாகவும் மற்றொரு ஆய்வில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்க்து

அமெரிக்காவைச் சேர்ந்த, ‘நைட் பிராங்’ என்ற தனியார் நிறுவனம் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களின் செல்வ செழிப்பு மற்றும் சொத்துகள் குறித்து ஆய்வு செய்து, ‘2014 செல்வ செழிப்பு அறிக்கை’ ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில்:”வரும் 2023ம் ஆண்டில் உலகிலேயே அதிக அளவில் பணக்காரர்கள் உள்ள நாடாக இந்தியா உருவாகும்.

உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 4வது இடத்தில் இருக்கும். மேலும் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள பணக்காரர்களை விட இந்தியாவில் அதிக பணக்காரர்கள் இருப்பார்கள்.

இந்தியாவில் 100 மில்லியன் டாலர் அளவிற்கு சொத்து வைத்து இருப்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 383 ஆக இருந்தது. இது 2023ல் 761 ஆக அதிகரிக்கும். உலகில், ‘டாப் 10 சிட்டி’ வரிசையில் மும்பை நகரமும் 2024ம் ஆண்டில் இடம் பிடிக்கும்.

உலகில் உள்ள முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள் திருட்டு போன்ற குற்றங்கள், மாசு, பயணம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தீவிரவாத செயல்கள் போன்றவைகளால் கவலை கொண்டுள்ளனர்.

அதிக மக்கள் தொகை கொண்ட நியூயார்க், லண்டன், மாஸ்கோ மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் தீவிரவாத நிகழ்வுகளுக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு 


மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம்..!

மிஸ் கால் கொடுக்கும் பக்கிகளிடம் நாம் மாற்றத்தை எதிர்ப்பார்ப்பதை விட நாம் மாறிக்கொள்ள ஒரு முக்கிய விஷயம் வந்திருக்கு இந்தியன் மார்க்கெட்டில்.

 முக்கியமா இது நாக்டெல் இல்லை – ஆனா நாக்டெல் இதன் டெக்னிக்கல் பார்ட்னர். நீங்க ஒருத்தருக்கு கால் செய்ய ஒண்ணு காசு (பேலன்ஸ் வேணும்) இல்லைனா கால் பண்ண முடியாது. சட்டுனு ரீசார்ஜ் கிடைக்காது. இந்த தொல்லைக்காகவே ஃப்ரிகால் என்னும் புது சேவை ஒண்ணை திறந்திருக்கு ஒரு கம்பெனி.
ravi mar 7


இதன் மூலம் அவங்க குறிப்ப்பிட்டிருக்கிற நம்பருக்கு கால் பண்ணினா உங்க கால் கட்டாகி உடனே ஒரு ரிட்டர்ன் கால் வரும். அப்புறம் உங்களுக்கு வேணுங்கிற நம்பருக்கு கால் பண்ணி பேசலாம்.

என்ன ஒண்ணு – கால் நடுவே ஒரு நிமிஷம் இருங்க, ஒரு கமர்ஷியல் பிரேக் விளம்பரத்துக்கு பிறகு பேசுங்கன்னு ஒரு விளம்பரம் வரும் அம்புட்டுதான். ( இது இந்தியாவுக்கு மட்டும் தான் வேலை செய்யும் – ஆனா இது நம்ம நாக்டெல் கனடா / அமெரிக்கா மலேஷியாவுல உட்பட 18 நாடுகளில் 2010 வருஷத்தில இருந்து இருக்கு.

இதற்க்கு பேர் கால் பேக் சிஸ்டம் (call back system) ஆனா நாங்க சார்ஜுவோம் – இங்க ப்ரீ FREE – என்ஜாய் மக்களே. இங்க போய் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணீ மிஸ் கால் கொடுத்து தொம்சம் பண்ணுங்க‌

 www.freekall.in

சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா..!



இந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘கஹானி’ படம் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இந்தியில் வித்யாபாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்துக்காக ஒரு சண்டைக்காட்சியில் நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளாராம்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா கூறும்போது,

இந்த படத்தில் ஒரு முக்கியமான, உணர்ச்சிகரமான காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம்.

அப்போது நயன்தாராவின் கை விரல் நகங்களை நான் கவனித்தேன். அவை மிகவும் நேர்த்தியாக, அழகாக, நீளமாக இருந்தது. ஆனால் அந்த காட்சியில் அவரது நகங்கள் அவ்வளவு இருக்கக்கூடாது. இதை நயன்தாராவிடம் கூறினேன்.

அடுத்த சில வினாடிகளிலேயே அவர் தன்னுடைய நகங்களை நறுக்கிவிட்டு அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தார். இந்த செயல் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது.

மேலும், இந்த படத்தில் வரும் ஒரு சண்டைக் காட்சிக்காக அவருக்கு பதிலாக டூப் போட்டு படமாக்கலாம் என இருந்தேன்.

ஆனால் நயன்தாரா இதை நான் தான் செய்வேன் என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்லிவிட்டு நடித்தார்.

அந்த காட்சியில் அவரது கடின உழைப்பின் பலன் நன்றாகவே தெரிந்தது என்றார்.

ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படம் வெளியாவதில் சிக்கல்..?



சமுத்திர கனி இயக்கத்தில் ‘ஜெயம் ரவி’ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்ந்து நில்’. இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் முடிவடைந்து இன்று உலகமெங்கும் வெளியாக ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், படத்தின் விநியோகம் சம்பந்தமான பிரச்சினையில் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே சிறு பிரச்சினை எழுந்துள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இருதரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னரே படம் வெளியாகுமா? என்று தெரிய வரும்.

இதேபோல் பெரும்பாலான படங்களுக்கு ரீலீசாகும் தேதியில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

அதன்பிறகு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு படம் குறித்த நேரத்தில் வெளியாகும். அதேபோல், இந்த படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இவுங்க இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லையாம்....



மனோரமாவின் அம்மா மார்க்கெட் சரிந்த பிறகு, அந்த இடைவெளியை நிரப்பியவர் சரண்யாதான்.

அவரைப்போன்ற எத்தனையோ மாஜி ஹீரோயின்கள் அந்த இடத்தை பிடிக்க முண்டியடித்தபோதும், சரண்யாவின் இயல்பான நடிப்புக்கு ரசிகர்களை மாதிரியே இயக்குனர்களும் சரண்டராகி விட்டனர்.

அதனால் படத்துக்குப்படம் அம்மா வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் சரண்யா.

குறிப்பாக இளவட்ட கதாநாயகர்களின் நிரந்தர அம்மாவாகி விட்ட சரண்யா, தற்போது பப்பாளி என்றொரு படத்தில் மாமியாராக நடித்திருக்கிறார்.

இந்த வேடத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது? என்று அவரைக்கேட்டால், என்னை எல்லா டைரக்டர்களுமே அம்மா வேடத்துக்குத்தான் கூப்பிடுவாங்க. ஆனா இந்த படத்தோடு டைரக்டர் கோவிந்த மூர்த்தி என்னை மாமியார் வேடத்தில் நடிக்க கூப்பிட்டார்.

ஆனாலும், என்னைப்பொறுத்தவரை இந்த வேடமும் அம்மா வேடத்தில் நடித்தது மாதிரிதான் இருந்தது. காரணம், ஒரு மருமகனுக்கு எப்படி மாமியார் இன்னொரு அம்மா மாதிரியோ, அதேபோன்று ஒரு மாமியாருக்கும், மருமகன் ஒரு மகனைப்போன்றுதான்.

அதனால் மகனிடம் எப்படி பாசம் காட்டி நடிப்பேனோ, அதேபோன்றுதான் இந்த படத்தில் மருமகனையும் மகனாக நினைத்து பாசம காட்டி நடித்தேன் என்று சொல்லும் சரண்யா, அம்மாவுக்கும், மாமியாருக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்கிறார்.

அதனால், இதுவரை அம்மா வேடங்களை மட்டுமே நடித்திருந்தவர், இனிமேற்கொண்டு மாமியார் வேடங்களையும் சேர்த்து நடிக்கப்போகிறாராம். ஆக, இந்த சேதியறிந்து அக்கா, அண்ணி, மாமியார் போன்ற வேடங்களில் நடித்து காலம் தள்ளி வரும் நடிகைகள் கலங்கிக்கிடக்கிறார்கள்.

கருணாஸ் பட நாயகியின் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவியதால் புகார்...!



நடிகை நவ்நித் கவுர் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி வருகின்றன. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

நவ்நித் கவுர் தமிழில் விஜயகாந்துடன் அரசாங்கம் படத்தில் நடித்தார். அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நவ்நித் கவுருக்கும் மகராஷ்டிரா மாநிலம் பத்னேரா சட்டமன்ற தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ராணாவுக்கும் 2011–ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

தற்போது நவ்நித் கவுர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பணயாற்றி வருகிறார்.

இந்த நிலையில் அவரது ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி உள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றிலும் இந்த படங்கள் அனுப்பப்படுகின்றன. அரகுறை ஆடையில் ஆபாசமாக இருப்பதுபோல் இந்த படங்கள் உள்ளது.

இதனால் நவ்நீத் கவுர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த படங்களை இன்டர்நெட்டில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

நவ்நித் கவுர் கணவரும் எம்.எல்.ஏ.வுமான ரவிராணா கூறும்போது, நவ்நித் கவுர் பெயருக்கு களங்கள் ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த படங்களை பரவவிட்டுள்ளனர் என்றார்.

சிம்ரன் மறுத்ததால் கவுதமியை நாயகியாக்கினார் கமல்...!



 கமல்ஹாஸனுக்கு ஜோடியாக நான் நடிக்கவில்லை. நான் எந்தெந்த படத்தில் நடிக்கிறேன் என்ற விவரங்களை விரைவில் மீடியாவுக்கு சொல்கிறேன், என்று சிம்ரன் தெரிவித்துள்ளார்.


மலையாளத்தில் மோகன்லால் - மீனா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் கமல்.


அவருக்கு ஜோடியாக நதியா நடிப்பார் என்று கூறப்பட்டது. பின்னர் சிம்ரனிடம் பேசி இருப்பதாகவும், இதற்கு கமலும் சம்மதித்ததாகவும் செய்திகள் வெளியாகின.


ஆனால் நடிகை சிம்ரன் இந்த செய்திகளை மறுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், "த்ரிஷ்யம் ரீமேக்கில் நான் நடிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை.


இன்னும் சொல்லப் போனால், அந்தப் படத்தின் எந்த மொழி ரீமேக்கிலும் நான் இல்லை. எனது அடுத்தடுத்த படங்கள் என்னவென்பது குறித்து விரிவாக மீடியாவுக்குத் தெரிவிப்பேன்," என்று கூறியுள்ளார்.


இதற்கிடையில், த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுக்கு ஜோடியாக கவுதமியையே நடிக்க வைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.