Saturday 8 March 2014

'கோச்சடையான் படத்தோட நடிப்பை நிறுத்திக்கவா..?' ரஜினி கொடுத்த ஷாக்..!



''எல்லோரும் '16 வயதினிலே’ படத்துல நான் பேசின 'இது எப்படி இருக்கு..?’ டயலாக், நானா சொந்தமா பேசினதுன்னு நினைச்சுட்டு இருக்காங்க அது தப்பு. உண்மையிலேயே அந்த வசனத்தை எழுதுனது பாக்யராஜ். அதுமட்டுமல்ல... நான் எப்படி பேசணும்னு டயலாக் மாடுலேஷன் சொல்லிக்கொடுத்ததும் பாக்யராஜ் சார்தான்..!''- பாக்யராஜ் மகன் சாந்தனு நடித்த பாரிஜாதம் படவிழாவில் இப்படி ரஜினி பேச, கூச்சத்தில் நெளிந்தார் பாக்யராஜ். இந்த விழா நடந்தது 2006-ம் ஆண்டு. சமீபத்தில் ரஜினியை அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்திருக்கிறார் கே.பாக்யராஜ்.


திடீர் சந்திப்பு பற்றி இயக்குநர் கே.பாக்யராஜிடம் பேசினோம்.

''என்னோட பத்திரிகையாள நண்பர் தமிழ்வாணன் அவரோட மனைவி குழந்தைகளோட என் வீட்டுக்கு வந்திருந்தார். 'என் பெண் குழந்தைக்கு பிறந்த நாள்... நீங்க ஆசிர்வதிக்கணும்’னு சொன்னார். நானும் உச்சிமுகர்ந்து ஆசிர்வதித்தேன். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தவர், 'சார் என்னோட குழந்தையை ரஜினி சார் ஆசிர்வாதம் செய்யணும். அதுக்கு நீங்கதான் உதவி செய்யணும்’னு கேட்டார். பொதுவாக நான் யாரையும் ரஜினியிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்திப் பழக்கம் இல்லை. ஆனாலும், என் நண்பர், குழந்தை சமாசாரத்தைச் சொன்னதால் என்னால் தவிர்க்க முடியவில்லை. ரஜினிக்கு போன் செய்தேன்.

மறுமுனையில் பேசின ரஜினி, 'என்ன சார் இப்படி சொல்றீங்க! நீங்க இதுமாதிரி எல்லாம் கேட்டதே இல்லையே... நான் வீட்லதான் இருக்கேன் அழைச்சுட்டு வாங்க!’ என்றார். நான் அந்தப் பத்திரிகையாளர் குடும்பத்துடன் ரஜினி வீட்டுக்குப் போனேன். குழந்தையை ஆசிர்வாதம் செய்து அனுப்பிவிட்டு, 'வாங்க கொஞ்சம் பேசலாம்’னு தனியாக அழைச்சுகிட்டுப் போனார்.''

''என்ன பேசினாரு ரஜினி?''

'' 'தமிழ் சினிமாவுல யங் ஸ்டார்ஸ் நிறைய பேர் நடிக்க வந்துட்டாங்க. இனி நான் தொடர்ந்து நடிச்சு என்ன ஆகப்போகுது? அதனால, 'கோச்சடையான்’ படத்தோட நடிப்பை நிறுத்திக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க...’ என்று படபடன்னு பேசினார் ரஜினி. நான் அதிர்ந்துட்டேன்.

'என்ன ரஜினி திடீர்னு இப்படிப் பேசுறீங்க... உங்களுக்கு என்னாச்சு? உங்ககூட ஆரம்பத்துல இருந்து சினிமாவுல நடிக்க வந்தவங்க நிறைய பேர் இப்போ ஃபீல்டுலயே இல்லை. இருக்கிற சிலரும் அப்பா, சித்தப்பான்னு சின்னச் சின்ன ரோல் பண்ணிட்டு இருக்காங்க.

 அப்போ இருந்து இப்போ வரைக்கும் சூப்பர் ஸ்டார்னா அது நீங்க மட்டும்தான். இந்தப் பெருமையும் புகழும் யாருக்கும் கிடைக்காது.

 உங்க உதட்டுல இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளையும் தமிழ் மக்கள் ரசிச்சு ரசிச்சு சந்தோஷப்படுறாங்க.

இப்போ எதுக்கு நீங்க நெகட்டிவா யோசிக்கிறீங்க? 'கோச்சடையான்’ வெளியானதும் நீங்க அடுத்த படத்துக்கான அறிவிப்பை உடனே வெளியிடணும்'னு சொன்னேன்.

அதுக்கு ரஜினி, 'உங்ககிட்ட சொன்ன இதே விஷயத்தை அமிதாப் சார்கிட்டயும் சொன்னேன். அவரும் இதே பதிலைத்தான் சொன்னாரு. எப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க’னு கேட்டு குழந்தை மாதிரி சிரிச்சாரு.''

''அரசியல் பற்றி ஏதாவது பேசினாரா?''

''எல்லாப் பத்திரிகைகளையும் தவறாமல் படிக்கிறார். குறிப்பாக  எல்லா அரசியல் செய்திகளையும் வரிவிடாமல் வாசிக்கிறார் ரஜினி. அரசியலைப் பற்றி யாரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளும் நிலையில் அவர் இல்லை. அதைப் பற்றி என்னிடம் பேச வேண்டிய அவசியமும் இல்லை. அரசியலில் அவர் தெளிந்த நிலையில் இருக்கிறார் என்பது மட்டும் நிஜம்!'' என்றார் கே.பாக்யராஜ்.

'கோச்சடையான்’ படத்தை அடுத்து, ராக்லைன் நிறுவனம் தயாரிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ரஜினி - அனுஷ்கா நடிக்கவிருப்பது கோலிவுட்டின் ஹாட் டாக்!

கவர்ச்சியாக நடிக்கப் போகிறேன் - நீங்க பார்க்க ரெடியா..?



கங்காரு படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் ஸ்ரீபிரியங்கா. ஏற்கனவே அகடம் படத்திலும் நடித்துள்ளார். இவர் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் பெண்.

சினிமா அனுபவம் பற்றி ஸ்ரீபிரியங்கா சொல்கிறார்.

தமிழ் பெண்கள் நடிக்க விரும்புவது இல்லை. சினிமா பற்றிய தவறான எண்ணமே இதற்கு காரணம்.

இப்போது எல்லா துறைகளிலும் பெண்கள் வந்திருப்பது போல் சினிமாவுக்கும் வர ஆரம்பித்து விட்டனர். கங்காரு அண்ணன் தங்கை பாசம் பற்றிய படம்.

பாசமலர் மாதிரியான கதை. நான் தங்கையாக வருகிறேன். சாவித்திரி போல் என் கேரக்டர் பேசபபடும். எனக்கு பிடித்த நடிகர்கள் சூர்யா, ஆர்யா, சிவ கார்த்திகேயன்.

நடிகைகளில் ஸ்ரீதேவி, ஸ்ரீதிவ்யா பிடித்தமானவர்கள். கங்காரு எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும் கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாகவும் நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொங்கல், தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மறக்ககாமல் விருந்து கொடுக்கும் விஜய்...!



கடந்த 2012 ஆம் ஆண்டு இளையதளபதி விஜய்க்கு மாபெரும் வெற்றிகளை அள்ளித்தந்தது.


 இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன்
திரைப்படமும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி முக்கியமான ஆண்டாக அமைந்தது.

அதே போல இவ்வாண்டும் அவருக்கு அமையும் என்று பேசப்பட்டுவருகிறது.


2012 ஆம் ஆண்டு பொங்கலுக்கு நண்பன் திரைப்படமும், தீபாவளிக்கு துப்பாக்கியும் வெளியாகின. அதே போல இவ்வாண்டு பொங்கலுக்கு ஜில்லா
திரைப்படம் வெளியாகியுள்ளது.


 தற்பொழுது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.


இப்படமும் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. எனவே இவ்வாண்டும் நண்பன் மற்றும் துப்பாக்கி வரிசையில் மாபெரும் வெற்றிப்படங்களைத் தரும் ஆண்டாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் விஜயின் 57 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் கொல்கத்தா, ஆந்திரா மற்றும் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளன.


 தற்பொழுது இடைக்கால ஓய்வில் இருக்கும் படக்குழு விரைவில் இப்படத்தின் நான்காவது கட்டப் படப்பிடிப்புக்களைத் துவக்கவுள்ளது.


இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்புக்களும் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நிறைவடையும் என்றும் இதனால் இப்படத்தினை தீபாவளிக்கு வெளியிடுவதில் சிக்கல்கள் இருக்காதெனவும் கூறப்படுகிறது.

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்..!



1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்