Saturday, 22 March 2014

அம்மை நோய் பற்றிய தவல்கள்,அறிகுறிகள் மற்றும் வகைகள்...!



அம்மை நோய் பற்றிய தவல்கள் மற்றும் வகைகள் :-
(சித்த மருத்துவத்தின் பங்கு)

1. சின்னம்மை (Chikenpox)
2. தட்டம்மை (Measles)
3. புட்டாலம்மை (mumps)
4. உமியம்மை (Rubella)

சின்னம்மை

சின்னம்மை மிகவும் எளிதில் தொற்றும் பண்புடைய நோயாகும். குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் ஏற்படும் Varicella zoster-virus என்ற வைரஸ் கிருமி மூலம் இந்நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறிகளாகும். முதலில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலும், தோலின் மேற்புறத்திலும் ஆங்காங்கே சிவந்தும் அவற்றின் மேல் கொப்புளங்களும் ஏற்படும். இது எளிதில் தொற்றும் தன்மை உள்ளது என்பதால், முற்றிலும் குணமடைந்து, அதன் அறிகுறிகள் மறையும் வரை, இந்நோய் ஏற்பட்ட குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ, இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலமாக பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் இந்நோய் பரவ வாய்ப்புண்டு. சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபரிடம் அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே, முதல் ஐந்து நாட்களில் மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றலாம்.

நோய்த்தொற்றுடைய நபருடன் தொடுதல், தொடர்பு கொண்டால் மட்டுமே, நோய் பரவும் என்றில்லை. நோய் தொற்றுடைய நபருக்கு தாம், நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவதற்கு முன்னதாகவே அதாவது கொப்புளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே, அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கிவிடும். கொப்புளங்கள் ஏற்படுவதற்கு 5 நாட்கள் முன்பிருந்தே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

எல்லா கொப்புளங்களும் பெரிதாக மாறி, காய்ந்து உதிரும் வரை நோய் தொற்று காலம் தொடரும். இது ஏற்பட 5 லிருந்து 10 நாட்கள் வரை ஆகும்.

ரோஜா இதழின் மேல் பனித்துளி இருப்பது போன்ற கொப்புளங்கள் ஏற்பட்டால் அது சின்னம்மைக்கு அடையாளமாக கொள்ளப் படுகிறது. கொப்புளம் பழுத்து, உடைந்தால் அதில் இருக்கும் நீர் வெளியாகி அதன் மேல் தோல் மட்டும் உடம்பில் புண்ணாக இருக்கும்.

வழக்கமாக புண்ணின் பக்கு சில நாட்களுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். சில நேரங்களில் அது தழும்பாக மாறலாம். இந்த முழுமையான சுழற்சி முறையில் ஒரு கொப்புளம் ஏற்பட்டு மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது கொப்புளங்கள் பல நாட்களுக்கு ஏற்படும். இது சின்னம்மையின் மற்றொரு தனித்தன்மையாகும்.

எல்லா கொப்புளங்களும் பக்காக மாறும் வரை அவர்கள் குழந்தைகளாக இருந்தால், பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்நோய் அதிக வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும்.

உடலில் எப்படி பரவுகிறது?

ஆரம்ப கட்டமாக தூய்மையற்ற சுவாசத்தின் சிறு துளிகளை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்கும்போது, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்று ஆரம்பித்து 2 லிருந்து 4 நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்ட பகுதியில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 4 லிருந்து 6 நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். பிறகு கல்லீரல், மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ளுறுப்புகளைத் தாக்கும் (குடல், எலும்பு மஜ்ஜை). அப்போது உடல் வலியும், காய்ச்சலும் ஏற்படும். இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் நோயின் தாக்கம் உடலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு இரத்தத்தில் நச்சுயிரி மேலும் அதிகமாகப் பெருகும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேல்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும். மல்பீசியின்படையின் செல்களின் ஙச்ணூடிஞிஞுடூடூச் த்ணிண்tஞுணூ-திடிணூதண் நோய்த்தொற்று செல்லிற்கிடையே மற்றும் செல்லினுள் திரவக்கோர்வையை உண்டாக்குகிறது. இதனால் குறிப்பிடத்தக்க இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

தடுப்பு மருந்து

1974ம் ஆண்டில் ஓகா ஸ்டெரியினிலிருந்து நீர்க்கோளவான் சின்னம்மை தடுப்பு மருந்து முதன் முதலாக “மிச்சாக்கிடகஹாக்கி” என்பவரால் உருவாக்கப்பட்டது. 1995ம் ஆண்டிலிருந்து தொற்றுநோய் தடுப்பூசி மருந்தாக அமெரிக்காவில் கிடைக்கப்பெற்றது. இந்த மருந்து இங்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த மருந்தூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்காது என்பதால், ஆரம்ப கால தடுப்புமருந்து அளிக்கப்பட்டதுடன் நில்லாமல், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தடுப்பு மருந்து அளித்தல் அவசியம்.

தட்டம்மை

குழந்தைகளை பெரிதும் தாக்கும் இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்த்தொற்று.

ப்ளு போன்ற அறிகுறிகள் - காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும். நீலம்-வெள்ளை நிற மையப் பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும்.

உடல் முழுவதும் தோலில் வியர்க்குரு போன்று பரவும். கண்களிலும் இது காணப்படும். கண்கள் உறுத்தும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் உண்டாகும்.

பரவும் முறை

விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது, நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம்மேல் படும்போதும் பரவுகிறது.

இவ்வகை வைரஸ் காற்று மற்றும் தொற்று கண்ட பகுதியில் 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

இந்நோய் தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும், மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரப்பப்படுகிறது.

புட்டாளம்மை

குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மைகளில் இதுவும் ஒன்றாகும். உமிழ்நீர் சுரப்பிகளில் ஒன்றாகிய பேரோடிட் சுரப்பியில் (Parotid glands) ஏற்படுகிற நோயாகும்.

காதின் கீழ்ப் பகுதியில் வீக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் 1010ஊ வரை சுரம் இருக்கும். வாயைத் திறக்க முடியாமல் வலி இருக்கும். உணவு, தண்ணீர் உட்கொள்ளும்போது வலி இருக்கும். இந்த நோய்க்கு பொன்னுக்கு வீங்கி என்ற வேறு பெயரும் வழக்கில் உண்டு.

வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சரிசமமாக எடுத்து அரைத்து வெளிப்பூசுதல் சிறந்த பலனைத் தரும்.

உமியம்மை

குழந்தைகளை பெரும்பாலும் தாக்கும் இந்த அம்மை நோய் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

இந்த நோயின் முக்கிய அறிகுறி காய்ச்சல் (1010ஊ- 1020ஊ). வாந்தியும் பேதியும் சில நேரங்களில் உண்டாகும். மூன்றாம் நாள் முகத்தில் சிறு நமைச்சல் இருக்கும். பிறகு உடலெங்கும் உமியைப் போல் கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். ஐந்தாம் நாள் நீர்க்கோர்த்த கொப்புளங்களாக மாறும். பின் சிறிது சிறிதாக ஒன்பதாவது நாளில் மறைந்துவிடும்.

பொதுவாக அம்மை நோய் தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை

அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். அம்மை நோயால் சில சமயம், வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். அவற்றை தக்க முறையில் மருந்து கொடுத்து சரிபடுத்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நோய்வாய்ப்பட்ட நபரை தனி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். அவருடைய உபயோகப் பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே அருந்த வேண்டும். திட உணவை குறைத்து திரவ உணவு உட்கொள்வது சிறந்தது. இளநீர் உபயோகிக்கலாம். கொப்புளங்கள் அனைத்தும் காய்ந்தபின் குளிப்பாட்ட வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்க விட வேண்டும். பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.

தடுப்பு ஊசி

நோய் தடுப்பு மருந்து குழந்தை பிறந்த 9வது மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு உள்ளாக போடப்பட வேண்டும். இது மூன்று வகையான அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சித்த மருத்துவத்தின் பங்கு

நோய் வரும்முன் காப்பது சிறந்தது. கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பிக்கும்போதே குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை 10 கிராம் வேப்பங்கொழுந்தும் 10 கிராம் விரலி மஞ்சளும் சிறிது உப்பும் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வலுப்பெற்று இந்நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். உடல் சூட்டைக் குறைக்க இளநீர், நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை உண்டு வரவேண்டும்.

மருந்து

சிவப்பு சந்தனம், வெள்ளைச் சந்தனம், மஞ்சள், இவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, நன்றாக குழைத்து லேசாக சூடாக்கி ஆறவைத்து கொப்புளங்கள் மேல் தடவி வரவும். அல்லது, கொதிக்க வைக்காமலும் அரைத்து பூசலாம். இதனால் அம்மையின் வேகம் குறைந்து கொப்புளங்கள் விரைவில் ஆறி, அம்மை வடுக்கள் மறையும்.

சிவப்புச் சந்தனத்தை அரைத்து ஆறிய புண்கள் மீது தடவி வந்தால் அம்மைத் தழும்புகள் விரைவில் மறையும்.

மஞ்சள், வேப்பிலையை அரைத்து குழம்பாக்கி லேசாக சூடேற்றி கொப்புளங்கள் மேல் தடவி வந்தால் அம்மை நோயின் வேகம் குறைந்து, விரைவில் குணமாகும். அம்மை நோய் கண்டவர்கள் மருத்துவரிடம் காண்பித்து நோயின் தன்மையை அறிந்து உள்ளுக்கு மருந்து சாப்பிட வேண்டும்.

இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள் - உங்களுக்கு தெரியுமா..?



இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்:-

1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.

2) பட்டினி கிடப்பது.

3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.

4) மிகச் சூடான பானங்களை அருந்துவது

5) சூடான உணவுப் பொருட்களை உண்பது.

6) காரமான மசாலா கலந்த உணவுகளை உண்பது

7) சத்தான உணவுவகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது.

8) குடலில் கிருமி உடையவர்கள்

9) மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல்

10) கல், மண், தூசி மற்றும் கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பது.

11) சில வகை மருந்துகளை வெகுகாலமாக மருத்துவரின் ஆலோசனை யின்றி உண்பது

மேலும் அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள்வது போன்றவைகளிலும் அல்சர் ஏற்படுகிறது.

 `நொறுங்கத் திண்ணவனுக்கு நூறு வயது' என்பார்கள்.

ஆனால் இன்றைய வாழ்க்கையில் யார் அமைதியாக உட்கார்ந்து மென்று தின்கிறார்கள். யாரும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை.

இரவுக்கு கடைகளில் இரண்டு மணிக்கு கூட உண்பவர்களைப் பார்க்கிறோம். அதனால் நாம் ஓய்வு கொடுக்காத வயிறு நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது

திடீர் மயக்கங்கள் வருவது ஏன்...? - அதிர்ச்சித் தகவல்கள்...!



பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன்.

படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன்.

யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன்.

சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன்.

இப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்



திடீர் மயக்கங்கள் யாருக்கு வருகின்றன?

பொதுவாக வயதானவர்களிடையே இவ்வாறு மயக்கம் வந்து விழும் சம்பவங்களை அதிகம் காண்கிறோம்.

சில தருணங்களில் பள்ளி மாணவர்களும் கூட அவ்வாறு விழுகிறார்கள்.

மூளைக்குச் செல்லும் இரத்தம் திடீரென குறையும்போதுதான் மயக்கம் ஏற்படுகிறது.

 இரத்தம் செல்வது குறைந்தால் மூளையின் கலங்களுக்கு ஒட்சிசன் கிடைப்பதும் குறையும்.



பல காரணங்களினால் இது ஏற்படலாம்.


மலத்தை கடுமையாக முக்கி வெளியேற்றும் போது

கடுமையான நீரிழப்பு நிலையின் போது இது நிகழலாம்.
உதாரணமாக

கடுமையான காய்ச்சல்,
கடுமையான வயிற்றோட்டம்,
சூழல் வரட்சியால் கடுமையாக வியர்வை வெளியேறல்
போன்றவற்றால் உடலிலுள்ள நீரின் தன்மை குறையும்போது ஏற்படலாம்.

அதிகமான இரத்தப் பெருக்கும் காரணமாகலாம்.
உதாரணமாக

காயத்தினால் கடுமையாக குருதிவெளியேறுவது
கடுமையான மாதவிடாய் பெருக்கு,
மூலத்திலிருந்து திடீரென இரத்தம் ஓடுதல்.
வெளிப்படையாகத் தெரியாது உடலின் உள்ளே நடக்கும்
குருதிப்பெருக்குகள் காரணமாகவும் நடக்கலாம்.
உதாரணமாக-

குடற்புண்,

ஈரல் சிதைவு,

புற்றுநோய்கள் எனப் பல.

வேறு காரணங்கள்

கடுமையான இருமலும் காரணமாக இருப்பதுண்டு.

குக்கல் போன்ற இருமலின் போது இடையில் மூச்சு விடமுடியாது தொடர்ந்து இருமுவதால் ஏற்படலாம்.

திடீரென இரத்தத்தில் சீனியின் அளவு குறையும்போது.


நீரிழிவு நோயாளரில்

நீரிழிவு நோய்க்காக இன்சுலின் ஊசி, அல்லது மாத்திரைகள் எடுப்பவர்களிடையே ஏற்பட வாய்ப்பு அதிகம்.

உதாரணமாக

தினமும் எடுக்கும் மாத்திரை அல்லது ஊசியின் அளவை தவறுதலாக கூடுதலாக எடுத்தால் நடக்கலாம்.

விரதங்கள் இருப்பதால் நேரலாம். நீரிழிவு நோயாளிகள் விரதங்கள் இருப்பதும் உணவுகளைத் தவறவிடுவதும் கூடாது.

வேறு நோய்கள் காரணமாக பசியின்மையால், உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதாலும் ஏற்படலாம்.

நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாது நிற்பதாலும் நிகழலாம்.
திடீரெனப் படுக்கையை விட்டு எழும்போது பலர் மயங்கி விழுவதுண்டு.

படுக்கையிலிருந்து திடீரென எழும்போது இரத்த அழுத்தம் தற்காலிகமாக குறைவதே இதற்குக் காரணமாகும்.

படுக்கை விட்டெழும்போது தலைச்சுற்றும் மயக்கமும்
சடுதியாக வரும் கடுமையான வலி சிலருக்கு திடீரென மயக்கத்தைக் கொடுப்பதுண்டு.

மிகுந்த பயமும் மயக்கத்தை அதே போல உண்டுபண்ணலாம்.

மது மற்றும் போதைப் பொருட்களும் காரணமாகலாம்.

சில மருந்துகளும் காரணமாகலாம்.

கவனம்... லேப்டாப் மற்றும் கணினி... - உங்கள் "கண்"மணி..!



கம்ப்யூட்டரில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' பாதிப்பு ஏற்படும்.

கண்ணில் எரிச்சல், அரிப்பு, நீர் வடிதல், காய்ந்து போதல், கண்ணைச் சுற்றி வீக்கம், இறுக்கமாக இருப்பது இவையெல்லாம் அறிகுறி.

இதற்கு முக்கிய காரணம்... கண் சிமிட்டுவது குறைவதுதான்.


இதனால், கண்ணீர் சுரப்பு குறைந்து, கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது. கண் திறந்தே இருப்பதால், சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகிவிடுகிறது.

ஒரு மனிதன் நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் நேரம் போக, ஒரு நாளைக்கு சுமார் 10,080 முறை.. கண் சிமிட்ட வேண்டும்.

* மானிட்டர் மீது வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதைக் குறைக்க, மானிட்டரின்மீது ஸ்பெஷன் கண்ணாடி மாட்டிக் கொள்ளலாம்.

* உங்களுக்கு மானிட்டருக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்கவேண்டும்.

* ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடம் கண்களை மூடிக் கொண்டு, பிறகு எழுந்து கண்ணை நன்றாகக் கழுவிவிட்டு, திரும்பவும் வேலையை தொடங்குங்கள்.

* இடை இடையே மானிட்டரிலிருந்து கண்ணை திருப்பி, அருகில் ஜன்னல் வழியாக வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு, மறுபடியும் வேலையில் ஈடுபடுங்கள்.

* எழுத்துக்களை பெரிதாக்கிக் கொள்வதன் மூலம் கண்ணுக்கு அதிக‌ அசதி, சோர்வை தவிர்க்கலாம்.


(இதைப் படிக்கும்போதே... அட்லீஸ்ட் 24 முறையாவது கண் சிமிட்டினீர்கள் என்றால், 'விஷன் சின்ட்ரோம்' பயம் தேவையில்லை)

கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்... - மற்றும் பல அரியத் தகவல்கள்...!



பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி - அகத்தியர் குணபாடம்

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க:

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட:

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய:

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு:

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு:

சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு:

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

காலையில சாப்பிட மறக்காதீங்க... அப்புறம் ‘ஹார்ட் அட்டாக்’ வரும் ஜாக்கிரதை..!



எனக்கு காலையில சாப்பிடுற பழக்கமேயில்ல..' எனச் சொல்லிக் கொள்ளவது சமீபத்திய பேஷனாகிவிட்டது. நீங்களும் அப்படிச் சொல்பவர்களில் ஒருவர் என்றால், கட்டாயம் இக்கட்டுரையை நீங்கள் படித்தே ஆக வேண்டும்.

காலை உணவைச் சாப்பிடாதவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் லண்டன் ஆராய்ச்சியாளர்கள்.

இது குறித்து கடந்த 16 வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்ட லண்டன் உணவியல் வல்லுநர்கள், தற்போது இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார்கள். காலையில் கட்டாயம் சப்பிட வேண்டும், இரவில் சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்பதே இவர்களது முக்கிய ஆலோசனை

ஹார்ட் அட்டாக்...

காலை உணவை தவிர்க்கும் ஆண்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்புகள் 27% அதிகமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளார்கள்.

காரணிகள்...

பெரும்பாலும், ஆண்கள் காலை உணவைத் தவிர்க்க, சிகரெட் குடிப்பது, மது அருந்துவது, முழு நேரப் பணி, திருமணமாகாமல் இருத்தல், உடல் உழைப்பு குறைவு போன்றவை பெரும்பாலும் காரணிகளாக அமைகின்றனவாம்.

ராத்திரி சீக்கிரமா சாப்பிடுங்க...

அதேபோல், இரவு நெடுநேரம் கழித்து உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் 55% அதிகம் என தெரிய வந்துள்ளதாம்

16 வருட ஆய்வு...

ஆராய்ச்சியாளர்கள் இது குறித்தான ஆய்வு கடந்த 1992ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 26,902 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஆய்விற்கான கேள்விகளைக் கேட்கப் பட்டவர்கள் பெரும்பாலும் 45லிருந்து 82 வயதிற்கு உட்பட்டவர்கள்.

குண்டாயிடுவீங்க...

அதேபோல், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் தவிர்த்து உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பும் அதிகமாம். இதன் தொடர்ச்சியாகவே இதய நோய்கள் மூலம் மரணங்கள் கூட நேரிடுகிறதாம்

பழங்களின் மருத்துவ குணங்கள்... - அந்த பிரச்சனை வரை சரிசெய்யும்...!



மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்

சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

திராட்சைப் பழம்

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.

தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

பேரீச்சம்பழம்

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

எலுமிச்சம்பழம்

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது.

நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.

பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு.

காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

கிராம்பின் மருத்துவ குணம் - அதுக்கு ரொம்ப முக்கியமாம்...!

கிராம்பின் மருத்துவ குணம்


கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

 தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

தலைவா! மறக்க முடியாத 10 நாட்கள் - விஜய் பேச்சு!



தலைவா திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கியுள்ள திரைப்படம் ‘சைவம்’. நாசர் மற்றும் பேபி சாரா(நிலா) முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடிக்கின்றனர்.


இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் ”சைவம் திரைப்படத்தில் சாராவும், நாசரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சைவம் திரைப்படத்தில் எனது மிகப்பெரிய குறிக்கோள்,


ரசிகர்கள் இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு நிலாவை மறந்துவிட்டு தமிழ் என்ற பெயரை தான் நியாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். சாரா தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


காரைக்குடியில் நடக்கும் ஊர்த்திருவிழாவிற்குச் செல்கிறது தமிழின் குடும்பம். அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. சைவம் திரைப்படம் தலைவாவிற்கு முன்பே எடுக்கப்படவேண்டிய படம். நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதற்காக சைவம் திரைப்படத்தை தள்ளிவைத்துவிட்டு தலைவா எடுத்தேன்.


தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையினால் ஏற்பட்ட வலி சாதாரணமானது அல்ல. காலை பல கனவுகளுடன் தூக்கத்திலிருந்து எழுந்து இரவு வலியுடன் உறங்கச் செல்வது ஒப்புக்கொள்ளமுடியாதது. என் திரையுலக வாழ்க்கையின் மறக்க முடியாத 10 நாட்கள் என்றால் தலைவா பிரச்சனை நடந்த அந்த கால கட்டம் தான்” என்று கூறினார்.


சைவம் என்று டைட்டில் வைத்துவிட்டு போஸ்டரில் சேவலின் படத்தை வைத்திருப்பதும், நாசர், சாரா என ‘தெய்வத்திருமகள்’ கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

சித்தார்த்தை அதிர்ச்சியடைய வைத்த சமந்தாவின் புகைப்படங்கள்



லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சமந்தா படுகிளாமராக நடிப்பதாக செய்திகள் கசிந்தன.


 இதுவரை சமந்தா தமிழில் மிக அதிகளவில் கிளாமராக நடித்தது இல்லை. ஆனால் அஞ்சான் படம் அந்த சாதனையை முறியடித்துவிடும் என்று கூறப்படுகிறது. அதை மெய்ப்பிப்பது போல் சமீபத்தில் சமந்தாவின் கிளாமரான அஞ்சான் பட ஸ்டில்கள் வெளியாகின.

இதை பார்த்த மற்ற தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தங்கள் படத்தில் சமந்தா நீச்சலுடை போன்ற கிளாமரான உடையில் நடிக்கவேண்டும் என கோரிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சமந்தா, “அஞ்சான்” படத்தில் பாடல் காட்சிகளில் மட்டுமே கவர்ச்சி காட்டியுள்ளேன்.


அதுவும் அந்த ஒரு படத்தில் மட்டும்தான். இனிவரும் படங்களில் கிளாமரை தொடரமுடியாது என்று கறாராக கூறிவிட்டாராம். இதற்கு இன்னொரு முக்கிய காரணம், சூர்யாவுடன் படுகிளாமராக நடித்ததை கேள்விப்பட்டு சித்தார்த் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.


ஆனால் அஞ்சான் படத்தில் பாடல் காட்சிகள் மட்டுமின்றி சூர்யாவுடன் மிக நெருக்கமான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படியும் படம் வெளியானது எது உண்மை என்பது தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருக்க வேண்டியதுதான்.

விக்ரமின் அடுத்த படம் - ’இடம் மாறி இறங்கியவன்’



ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் விக்ரம் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


அது மாதிரி ‘கோலி சோடா’


 படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கும் படம் என்ன?


 அதில் ஹீரோவாக யார் நடிக்கிறார் போன்ற கேள்விகளும் கோலிவுட்டில்


 பரபரத்துக் கொண்டிருக்கிறது.


இந்நிலையில் ‘கோலி சோடா’விற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கும் படத்திற்கு


 ’இடம் மாறி இறங்கியவன்’


என்று பெயர் வைத்திருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


லேட்டஸ்ட் தகவலின் படி இந்த ஸ்கிரிப்ட் விக்ரமுக்கு ரொம்பவும் பொருந்தும் என்றும்,


அதில் விக்ரமே நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது!

3 இன் 1 வெங்காயம் - கூந்தல் பற்றிய பிரச்சனைகள் தீர்க்கும்...!



கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம்.


அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.


மேலும் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறைய வீட்டுப் பொருட்கள் உள்ளன. உதாரணமாக, முட்டை, தேன், தயிர், பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆம், அனைத்து சமையலிலும் பயன்படும் வெங்காயம் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். * கூந்தல் உதிர்தல்: வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. பொதுவாக சல்பர் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும்.


எனவே அதற்கு வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெங்காய பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும்.


* கூந்தல் வளர்ச்சி:

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். இத்தகைய இரத்த ஓட்டத்தை வெங்காயம் செய்வதால், வெங்காயத்தை சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, மசாஜ் செய்து, 40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

* ஸ்கால்ப் பிரச்சனை:

வெங்காயச் சாற்றை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், ஸ்காப்பில் தங்கி கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் தொற்றுகள் நீங்கி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் நன்கு ஆரோக்கியமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

* பொடுகுத் தொல்லை:

தலையில் உள்ள அதிகப்படியான வறட்சியினால் பொடுகு வந்துவிடும். பொடுகானது தலையில் அதிகம் இருந்தால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அதன் வளர்ச்சி தடைப்படும். எனவே பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, வெங்காயச் சாற்றுடன், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருக்கிறேன் - சிவகார்த்திக்கேயன்



சிவகார்த்திக்கேயன், ஹன்சிகா நடித்துள்ள படம், மான் கராத்தே. விரைவில் ரிலீசாக உள்ள இந்தப் படம் பற்றி நிருபர்களிடம் சிவகார்த்திக்கேயன் கூறியதாவது:


ஹன்சிகாவுடன் நடிப்பதால் உடன் நடிக்கும் ஹீரோயின்கள் பற்றி நிறைய கேள்விகளை எதிர்கொள்கிறேன். எனக்கு கதையும், கேரக்டரும்தான் முக்கியமே தவிர, உடன் நடிக்கும் ஹீரோயின் யார் என்று பார்ப்பதில்லை. அடுத்து எனது ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் காஜல் அகர்வால் நடிக்கிறார் என்ற செய்திகள் வருகிறது.


 அவர்களுடன் நடித்தால் சந்தோஷம்தான். ஆனால் ஹீரோயின்கள் விஷயத்தில் கதை விஷயத்தில் தலையிடும் அளவுக்கு நான் பெரிய நடிகன் இல்லை. எந்த ஹீரோயிடனும் நடிப்பேன்.


ஒரு படத்தில் நடித்தோம், சம்பளம் வாங்கினோம் என்று இல்லாமல் நான் நடித்த படத்தால் தயாரிப்பாளரில் இருந்து தியேட்டர் கேன்டீன் ஊழியர் வரை பயன் அடைகிறார்களா என்றும் கவனிக்கிறேன். அதே போல, ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.


மனைவி, குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதால், நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருக்கிறேன். இவ்வாறு சிவகார்த்திக்கேயன் கூறினார். பேட்டியின் போது தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன், இயக்குனர் கே.திருக்குமரன், இசை அமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் சுகுமார் உடன் இருந்தனர்.

காசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்கள்… சருகாகும் அப்பாவி பெண்கள்! -அதிர வைக்கும் ஸ்கேன் ரிப்போர்ட்!



'குழந்தை இல்லையா... இனி கவலை வேண்டாம்...'' என்று கூவி அழைக்கும் மருத்துவ நிகழ்ச்சிகள், பல தொலைக்காட்சிகளில் அரங்கேறிக் கொண்டுஇருக்கின்றன. பத்திரிகை முதல் இணையம் வரை இதற்கான விளம்பரங்களும் ஓயாமல் படபடத்தபடியே இருக்கின்றன.


உச்சகட்டமாக, 60 வயதைத் தாண்டிய பாட்டி கர்ப்பமாக இருப்பது போலவும், அவர் சாலையைக் கடந்து செல்கையில் பலரும் அதை ஏதோ ஒரு அதிசய நிகழ்வாகப் பார்ப்பது போலவும் காட்சிஅளிக்கும் விளம்பரப் பதாகைகள் பலரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.


       மாநகரங்கள்தான் என்றில்லை… தமிழகத்தின் சிறு நகரங்களில்கூட, டீக்கடை போல மலிந்து கிடக்கும் ‘கருத்தரிப்பு மையங்கள்’ செய்யும் மருத்துவத்தில், சில பெண்களுக்கு குழந்தைகள் கிடைக்கின்றன. பலருக்கு உயிர் இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இது, இந்த வகை மையங்களின் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த ‘கருத்தரித்தல் மையங்களின்’ மருத்துவம் பற்றிய சீரியஸ் ஸ்கேன் ரிப்போர்ட் இது!
இயற்கை நிகழ்வை வலிந்து செயற்கையாக்கி..!


உடல்ரீதியாக சரியாக இருந்தும், சாதாரண சில காரணங்களால் கரு உருவாதல் தள்ளிப்போகும் தம்பதிகளைக்கூட, ‘பேசாம ட்ரீட்மென்டுக்குப் போயிடலாம்…’ என்று மருத்துவமனைக்குப் படையெடுக்க வைத்துவிட்டன குழந்தையின்மை சிகிச்சை பற்றிய நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும். திருமணமானவர்களின் எதிர்பார்ப்பு, குழந்தையே என்பதைக் கருத்தில்கொண்டு, ‘குழந்தையில்லை’ என்பதை பெருங்குறையாக மிகைப்படுத்தி காசு பார்க்க நினைத்து, குழந்தை பிறப்பை பற்றிய ஆலோசனைகளையே அச்சுறுத்தலாக்கி விடுகிறார்கள் சில மருத்துவர்கள்.

திருமணம் ஆனவுடன் இயற்கையாக உடலுறவு வைத்துக்கொள்ளும் தம்பதிக்கு, குழந்தைப் பிறப்பில் பெரும்பாலும் சிக்கல்கள் இருப்பதில்லை. அதேசமயம் சிலருக்கு சிறு அளவில் ஏற்படும் சிக்கல்களைக்கூட பூதாகாரமாய் சித்திரித்துப் பெரிதுபடுத்தும் மருத்துவமனைகளும் தற்போது பரவலாகப் பெருகிக்கொண்டு வருவது உண்மை. விளைவு, இயற்கையாகவே நிகழ வாய்ப்புள்ள குழந்தைப்பேறு எனும் அந்த அற்புத நிகழ்வுக்கு, தேவையில்லாமல் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து, ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள் கிறார்கள் பலர்.


இப்படியெல்லாம்கூட நடக்கிறது!


சில மருத்துவமனைகள், குழந்தைப்பேறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கும் ஒரு பெண்ணின் மாதவிலக்கை, அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் சில மாத்திரைகள் கொடுத்து தள்ளிப்போடுகிறார்கள். அப்படி மாதவிலக்கு தள்ளிப் போனதை கர்ப்பம் என பொய்யாக தகவல் அளிக்க, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வாழ்வின் பயனை அடைந்துவிட்ட நெகிழ்ச்சி.


பின்னர் சில தினங்களில் அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படும்போது, அதை கருக்கலைந்ததாக சொல்லிவிடுகிறார்கள். இருந்தாலும், இதுவரை கரு உருவாகாமலேயே இருந்த தன் வயிற்றில், இந்த மருத்துவமனைக்கு வந்த பின் கரு உருவாக்கம் நிகழ்ந்ததையே (?) பெரும் நம்பிக்கையாகக் கொண்டு,


அவர்களின் நாடகம் அறியாமல் தொடர்ந்து அங்கேயே சிகிச்சையை (?) தொடரும் பரிதாபங்களும் நடக்கின்றன.


அதேமாதிரி விந்தணுவில் சிக்கல் இருக்கும் தம்பதியின் முறையான அனுமதியில்லாமல், தங்கள் மருத்துவமனைக்குப் பெயர் கிடைக்க வேண்டுமென்ற காரணத்தால், வேறு யாராவது ஒருவருடைய விந்தணுவை, ‘கணவனின் விந்தணு’ என பொய்யாகக் கூறி, அதை மனைவிக்கு புகுத்தி கருவுறச் செய்து காசு பார்க்கும் கீழ்த்தரமான மருத்துவமனைகள் இருப்பதாகவும், பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்களை அள்ளித் தெளிக்கிறார்கள்.



‘குழந்தைப்பேறு என்பது சிக்கலான விஷயமா? அப்படி சிக்கல் இருக்கும்பட்சத்தில் அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்தால் தான் தீர்வு கிடைக்குமா? குழந்தைப்பேறுக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளின் ஆபத்து என்ன?’ என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளுடன் மருத்துவர்கள் சிலரை அணுகினோம்.


பெண்களைவிட, ஆண்களுக்கே பிரச்னை அதிகம்!


சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பிரியதர்ஷினி, ”பொதுவாக குழந்தையின்மை என்ற பிரச்னை வரும்போது, காலங்காலமாக பெண்ணைத்தான் ‘மலடி’ என்று சொல்வார்கள். இப்போது குழந்தையின்மைக்கான காரணங்கள், பெண்ணைவிட ஆணுக்கே அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்ணுக்கு இருக்கும் குறைபாட்டைத் தீர்ப்பதைவிட, ஆணுக்கான குறைபாட்டை தீர்ப்பதே அரிதாகவும் உள்ளது.


பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் ஒழுங்கின்மை, உடல் பருமன், ஹார்மோன் குறைபாடு, நீரிழிவு நோய், தரமில்லாத முதிர்ந்த கருமுட்டை, சுரப்பி கோளாறுகள் மாதிரியான காரணங்களால் கருத்தரிக்காமல் போகிறது.


 ஏற்கெனவே ஏதாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதன் காரணமாகவும் கருத்தரிக்காமல் போக வாய்ப்பு உண்டு. இந்தக் குறைகளை ஆலோசனைகளாலும் மருந்துகளாலும் சரிசெய்யலாம். இறுதியாக, லேப்ராஸ்கோபி பரிசோதனையில் தொப்புளுக்கு அருகில் சிறு துளையிட்டு, டியூப் செலுத்தி, நீர்க்கட்டி, கருக்குழாய் அடைப்பு உள்ளிட்டவற்றை அறிந்து சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஆண்களைப் பொறுத்தவரை விந்தணு குறைபாடு, விறைப்புத்தன்மை குறைபாடு, தரமில்லாத, வீரியமில்லாத விந்தணுக்கள் ஆகிய காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.


இத்தகைய குறைகளையுடைய பெரும்பாலான தம்பதிகளுக்கு முறையான ஆலோசனைகள் கிடைத்தாலே, எந்தவிதமான மேல் சிகிச்சைக்கும் அவசியமின்றி குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்ற டாக்டர், ஒரு தம்பதி தங்களுக்கு குழந்தைஇல்லை என்பதற்காக எப்போது மருத்துவமனையை அணுக வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட்டார்.


முதலில் ஆலோசனையே போதும்!


”திருமணமாகி குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆன கணவன், மனைவி இருவரும் சரியான தாம்பத்ய உறவில் இருந்தும் கருத்தரிக்க வில்லை என்றால், 30 வயதைக் கடந்த பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால், மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம். உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட சிக்கல் உள்ளவர்கள், ஒரு வருடம் வரை தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம். கவனிக்க, ‘மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம்’ என்றுதான் சொன்னேனே தவிர, எடுத்தவுடனேயே கருத்தரிப்பு மையங்களுக்கு அல்ல.


முதலில் உங்களுக்கு நன்கு பரிச்சயமான, நம்பகத்தன்மையுள்ள மருத்துவரை அல்லது உங்கள் குடும்பநல மருத்துவரை அணுகுங்கள். பெரும்பாலும் அது தீர்க்கக்கூடிய பிரச்னையாகவே இருக்கும். ஒருவேளை அந்த மருத்துவர், இயற்கையான குழந்தைப்பேறுக்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கூறினால், அவரின் வழிகாட்டுதலோடு கருத் தரிப்பு மையங்களுக்குச் செல்லலாம். அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மையங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை பற்றி நன்கு விசாரித்துக்கொள்வது நல்லது.


மருத்துவர்களை மாற்றாதீர்கள்..!


குழந்தையின்மைக்காக ஆறு மாத காலம் வரை குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவிட்டு, காத்திருக்கப் பொறுமையில்லாமலோ, விளம்பரத்தைப் பார்த்தோ வேறொரு மருத்துவமனைக்குத் தாவுவது தவறு. ஒரு மருத்துவர், தன்னிடம் வருபவரின் உடல் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்க, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தேவைப்படும். அதற்குள் அடுத்த மருத்துவமனையை அணுகி, மீண்டும் முதலில் இருந்து சிகிச்சையை ஆரம்பித்தால், அது உடல் நலத்தைதான் சீரழிக்கும்.
இன்னொரு பக்கம், பல மருத்துவமனைகள் விந்தணு குறைபாடு, கருக்குழாய் அடைப்பு என தம்பதிகளின் குறைகளையோ,


அதற்கு தாங்கள் அளிக்கும் சிகிச்சைகளையோ வரைபடம் மூலம் வரைந்து, விரிவான விளக்கங்களை சம்பந்தப்பட்ட தம்பதிகளுக்குக் கொடுப்பதில்லை. பல தம்பதிகளும் கண்கட்டி வித்தையாக, தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல்தான் அதைத் தொடர்கிறார்கள். ஒருகட்டத்தில், அந்த மருத்துவமனையின் வெற்று வைத்தியத்தை உணர்ந்து, வேறு மருத்துவமனைக்கு மாறும்போது, அதுவரை தாங்கள் பெற்ற சிகிச்சைக்கான விரிவான அறிக்கையை சம்பந்தப்பட்ட மருத்துவமனையிடம் கேட்டுப் பெறுவதுமில்லை. மருத்துவ அறிக்கையை டிமாண்ட் செய்து பெறுவது அவசியம்” என்று வலியுறுத்திய மருத்துவர் பிரியதர்ஷினி, தொடர்ந்தார்…


புற்றுநோயை உண்டாக்கும் ஹார்மோன் ஊசி!


”பெண்ணின் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகிறேன் என்று அளவுக்கதிகமான ஹார்மோன் ஊசிகள் போடுவதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும்… சினைப்பை புற்றுநோயை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, முடிந்தவரை இதையெல்லாம் தவிர்ப்பதுதான் நல்லது.

‘குழந்தை இல்லை என்பது ஒரு குறையே இல்லை’ என்கிற மனநிலைக்கு வருவதுதான்… சம்பந்தபட்ட பெண்ணின் உடல்நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை சிந்தித்து உணரவேண்டும். சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றிருக்கும் தம்பதியருக்கும், இப்போது பரவலாக எழும் விந்தணு மாறுதல் பற்றிய விழிப்பு உணர்வு தேவை. அதாவது டெஸ்ட் டியூப் முறையில் கருத்தரித்தவர்கள்,


அந்தக் குழந்தை சம்பந்தப்பட்ட தம்பதியின் வாரிசுதானா என்பதை ‘டி.என்.ஏ’ (DNA) பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வது, தேவையற்ற சந்தேகம் எழுவதை ஆரம்பத்திலேயே தவிர்க்கும்” என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மருத்துவர் பிரியதர்ஷினி.


லட்சக்கணக்கில் பணம் கரைகிறது!


சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சாதனாவிடம் பேசியபோது, ”கருத்தரிப்பு மையங்கள் என்பது இன்று பெரும்பாலும் காசு கொட்டும் தொழில் என்றாகிவிட்டது. குழந்தைப் பேறுக்காக, ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்…’ என்று வந்து நிற்கும் தம்பதிகளின் பலவீனத்தையே பணமாக்குகிறார்கள் பலர். உதாரணமாக, தம்பதிகளில் ஆணின் விந்தணு தரமாக இருந்து,


அதை பெண்ணின் கருப்பையில் செலுத்த முடியாதபட்சத்தில் ஐ.யூ.ஐ எனும் (Intra Uterine Insemination) சிகிச்சை முறைப்படி ஆணின் நகரக்கூடிய தரமான விந்தணுவை எடுத்து, அதை சுத்தப்படுத்தி, பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவார்கள். இதற்கு ஆகும் செலவு 4 முதல் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால், இதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் கறக்கிறார்கள் பல மருத்துவமனைகளில். இதுவே ஆண், பெண் இருவரும் குழந்தை பாக்கியம் பெற முடியாதபட்சத்தில்… ஆணின் விந்தணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் ‘டெஸ்ட் டியூப் பேபி’


 முறையில் இணைக்கும் கரு உருவாக்கத்துக்கு ஆகும் செலவு 1.5 லட்சம் ரூபாய். இதற்கு 3 லட்சம் ப்ளஸ் வாங்குவதும் நிகழ்கிறது”  என்று கவலை பொங்கச் சொன்ன சாதனா, தொடர்ந்து பேசினார்…


சாமியாரைத் தேடாதீர்கள்!


”ஆணின் விந்தணு சரியாக உற்பத்தியாகவில்லை, உற்பத்தியாகும் விந்தணு வெளிவர பாதையில்லை, அப்படியே பாதையிருந்தும் வெளிவரும் விந்தணு தரமாகவும், நகரக்கூடிய தன்மையுடனும் இல்லை, அது கருமுட்டையைச் சேர வாய்ப்பே இல்லை என்றெல்லாம் மருத்துவப் பரிசோதனையில் உறுதியானால், அந்த ஆணால் குழந்தை பாக்கியம் பெற முடியாது. அதேபோல கருக்குழாய் பாதிப்புடனோ,


கருப்பை பாதிக்கப்பட்டோ அல்லது சுருங்கியோ, கருமுட்டை உருவாகும் சாத்தியம் இல்லாமலோ அல்லது உருவாகும் கருமுட்டை தரமற்றதாகவோ, விந்தணுவை ஏற்று கருவை உற்பத்திச் செய்யும் திறன் இல்லாமலோ இருக்கும் பெண்களாலும் குழந்தை பாக்கியம் பெற இயலாது.


இப்படிப்பட்ட குறைபாடு உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், ‘குழந்தை பாக்கியம் பெறமுடியாது’ என்று மருத்துவர் சொல்லும்பட்சத்தில், ‘வேற டாக்டர், அந்த சாமியார்’ என்று மேலும் நேரத்தையும், பணத்தையும் வீணாக்காமல், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக வேண்டும். அதாவது, டெஸ்ட் டியூப் பேபி, வாடகைத் தாய் முறை, கருமுட்டை மற்றும் விந்தணு தானம் போன்றவற்றில் குழந்தை பாக்கியம் பெற முயற்சிக்கலாம்” என்று சொன்ன டாக்டர், இயல்பாகவே கருத்தரிக்க வாய்ப்புள்ள நாட்கள் பற்றி, டிப்ஸும் தந்தார் (கீழே காணலாம்).


செயற்கை கருத்தரிப்பு மையங்களின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட பெண்களின் அழுகுரல்கள், வாடகைத்தாய், மூலிகைக் குழந்தைகள், சித்த மருத்துவத்தின் மூலம் தீர்வு, குழந்தையின்மை காரணமாக எதிர்கொள்ளும் சமூகத் தாக்குதலுக்கான எதிர்தாக்குதல், மனநல ஆலோசனை… அனைத்தையும்

இயற்கையாக கருத்தரிக்க டாக்டர் சாதனா சொல்லும் டிப்ஸ்!


”கருமுட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம், உயிரணுவின் ஆயுட்காலம் 48 – 72 மணி நேரம். இந்த நேரத்தில் இரண்டும் கலந்தால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உண்டு. கர்ப்பம் தரிக்க, காலண்டர் முறை, வெப்ப முறை, சளிச் சுரப்புமுறை ஆகிய மூன்றையும் பின்பற்றலாம்.


காலண்டர் முறையில், 28 நாட்கள் சீரான மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்கள், மாதவிலக்கான நாளில் இருந்து சுமார் 14 முதல் 16-ம் நாளுக்குள் கருமுட்டை வெளியாகும்போது உறவுகொண்டால் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப முறையில், உடலின் வெப்ப நிலையை தெர்மாமீட்டர் கொண்டு தொடர்ந்து கவனித்து வந்து, உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் நாளில் கருமுட்டை வெளியாவதை யூகித்து.உறவு கொள்ளலாம்.


கருமுட்டை வெளியாகும் நாளில் உயிரணு நீந்திச் செல்ல ஏதுவாக கருப்பை வாயைச் சுற்றி சளிச்சுரப்பு உருவாவதை கவனித்தும் உறவு கொள்ளலாம்.”

உத்தமவில்லன் படப்பிடிப்பு திடீர் ரத்து! பெங்களூரில் இருந்து சென்னை திரும்பியது படக்குழு!!



விஸ்வரூபம்-2 படத்தையடுத்து நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் உத்தமவில்லன்.


இப்படத்தின் படப்பிடிப்பை 90 நாட்களும் பெங்களூரில் நடத்த திட்டமிட்டு கடந்த ஒரு வாரமாக அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். ஆனால் திடீரென படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை வந்தது அப்படக்குழு.


என்ன காரணம்? என்று விசாரித்தபோது, கர்நாடகத்தில் இருக்கும் சலன் சித்ர சினிமா தொழிலாளர் சங்கத்துக்கு போட்டியாக புதிய சங்கம் ஒன்று தற்போது உருவாகியுள்ளதாம்.


ஆனால், அந்த புதிய சங்கத்தை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பழைய சங்கத்தினர் ஸ்டிரைக் நடத்துகிறார்களாம். தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் கைவிடப்படாது என்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அமல்படுத்தி உள்ளனர்.


இதன்காரணமாக, கடந்த செவ்வாய்க்கிழமை வரை விறுவிறுப்பாக நடந்து வந்த கமலின் உத்தமவில்லன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சென்னைக்கு வந்து விட்டார்களாம். ஆக, கர்நாடகத்தில் தொழிலாளர் பிரச்னை தீரும் வரை படப்பிடிப்பை சென்னையிலேயே தொடரப்போகிறார்களாம்.


இதனால் 3 மாதங்களாக நடைபெறவிருந்த உத்தமவில்லன் படத்துக்காக மொத்த கால்சீட்டை கொடுத்திருந்த நடிகர்-நகைகள் அடுத்து எப்போது படத்தை தொடங்குவார்களோ என்று பயந்து கொண்டிருந்தவர்கள், உடனடியாக சென்னையில் படப்பிடிப்பு தொடரவிருப்பதால் நிம்மதி அடைந்துள்ளனர்.

மெல்லிசைக்காக ஒரு மாதம் மெனக்கிட்ட விஜய் சேதுபதி...!



இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் படம் மெல்லிசை.


இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரஞ்சித் ஜெயக்கொடி, இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். காயத்ரி நாயகியாக நடிக்கிறார்.


இந்த படத்திற்காக விஜய் சேதுபதி ஒரு மாத காலமாக பியானோவை கற்றுக்கொண்டு வருகிறாராம்.


ஐந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, இந்த படத்திற்காக மிகவும் ஆர்வமாக இசையை கற்றுக் கொண்டிருக்கிறார்.


படத்தின் இயக்குனர் ரஞ்சித் கூறுகையில், இந்த படத்தில் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கவிருப்பதால் பியானோ வல்லுநரிடம் முறையாக வாசிக்க கற்று கொண்டார்.


மேலும் காயத்ரியும் வயலின் ஆசிரியராக நடிக்க இருப்பதால் இந்த படத்திற்காக அவரும் வயலின் வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிரார்.


இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க இசை கலந்த மர்ம படமாக உருவாகி வருகிறது மெல்லிசை படம்

ஆந்திராவிலும் ஜெயித்த தல!



அஜித் படங்களுக்கு தமிழகத்தில் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறதோ,


கிட்டத்தட்ட அதே மாதிரியான வரவேற்பு ஆந்திராவிலும் உள்ளது!


 விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘பில்லா’,


 ‘ஆரம்பம்’


போன்ற பல படங்கள் ஆந்திராவிலும் வெளியாகி நல்ல வசூல் செய்துள்ள நிலையில்,


‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான


‘வீரு டொக்கடு’ (வீரம்) படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக


ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகிறது.


இந்த வெற்றிக்கு ஆந்திர ரசிகர்களுக்கு நன்கு அறிந்தவர்களான


‘சிறுத்தை சிவா, அஜித், தமன்னா, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் முதலானோரின்


கூட்டணி அமைப்பும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்!

தி லவ்லி லேடீஸ்’ பாடலுக்கு விஷால்- இனியா , வித்தியாசமான குத்தாட்டம்.



விஷால் -லட்சுமி மேனன் நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த படத்தின் பாடல்களில் தி லவ்லி லேடி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியது. இந்த பாடலை மிக விரைவில் படமாக்க உள்ளனர்.


முதலில் சாதாரணமாக படமாக்க விரும்பிய படக்குழுவினர், இந்த பாடலில் வெற்றியை தொடர்ந்து பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான யூடிவி தனஞ்செயன் அவர்கள் கூறியுள்ளார்.


விஷாலுடன் இந்த பாடலுக்கு நடனம் ஆட இருப்பவர் இனியா. இனியாவின் குத்தாட்டத்தை இந்த படத்தில் வித்தியாசமாக ரசிகர்கள் காணலாம் என படக்குழுவினர் கூறுகின்றனர்.


நூற்றுக்கணக்கான துணை நடிகைகளோடு விஷால்-இனியா ஆடும் இந்த நடனத்தின் படப்பிடிப்பு நாளை முதல் வரும் ஞாயிறு வரை சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடக்கவிருக்கின்றது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் இந்த பாடலோடு முடிகிறது.


அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் வேலை தொடரும் என தனஞ்செயன் கூறியுள்ளார். இந்த படத்தின் இன்னொரு டிரைலர் வரும் 28 ஆம் தேதி வெளிவரும் என்றும், வரும் ஏப்ரல் 11ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்றும் மேலும் அவர் கூறினார்.

மலையாள சேச்சியுடன் தனுஷ்...!



அனேகன் படத்தில் மலையாள உலகில் இருந்து குணச்சித்திர நடிகை ஒருவர் இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்.


மலையாள சினிமாக்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகைதான் லேனா.


அக்காவாக, அண்ணியாக, இரண்டாவது கதாநாயகர்களின் மனைவியாக ஏதாவது ஒருவகையில் இவரது பங்களிப்பு மலையாள சினிமாக்களில் இருந்துகொண்டே இருக்கும்.


தமிழில் ரீமேக்கான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் பிரகாஷ்ராஜின் மனைவியாக ராதிகா ஏற்றிருந்த கேரக்டரை தன் ஒரிஜினலான மலையாள படமான ‘ட்ராஃபிக்’கில், ரகுமானின் மனைவியாக ஏற்று நடித்தவர் இவர்தான்.


இப்போது இவர் தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படம் மூலமாக தன் காலடியை எடுத்து வைத்திருக்கிறார்.

பொஸசிவ் குணமுடைய கணவனை கையாளுவது எப்படி?



தனக்கே சொந்தம் என்ற எண்ணமுடைய, பொஸசிவ் குணமுடைய கணவனை நீங்கள் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் அவரை கையாளுவது என்பது மிகவும் கடினமான ஒரு வேலையே. பொதுவாக கணவன் மனைவி இடையே பொஸசிவ் குணம் நிலவுவது சகஜமே. ஆனால் அந்த உணர்வே அதிகமாக இருந்தால் அது அவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு பெரிய சுமையை ஏற்படுத்தி, நாளடைவில் அந்த உறவுக்குள் விரிசலை உண்டாக்கிவிடும்.

இவ்வகை சூழ்நிலைகள் வரும் போது அதை கையாளுவது கடினமாக மாறிவிடும். அதற்கு காரணம் எதிர்ப்பு நடவடிக்கை நாளடைவில் மன நோயாக மாறிவிடும். அதன் பின் அதை கட்டுப்படுத்துவது என்பது கையை மீறி போய்விடும். அதனால் ஆரம்ப நிலையிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்பட கூடாது. ஆழமான காதல் அல்லது தன் கணவன் அல்லது மனைவியை இழந்து விடுவோம் என்ற பயம் போன்றவைகள் தான் அளவுக்கு அதிகமான பொஸசிவ் குணத்திற்கு காரணமாக விளங்குகிறது. சில நேரம் இந்த குணம் அந்த நபரின் இயற்கை குணமாக கூட இருக்கலாம்.

பொஸசிவ் குணமுடைய கணவனை கையாளுவது சிரமம் தான். அதற்கு காரணம் தான் அப்படி இருக்கிறோம் என்பதை அவர் உணர்வதில்லை. அவர் உங்களை பாதுகாக்கிறார் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார். அதனால் அவரை கையாள போதுமான முயற்சியும் பொறுமையும் தேவைப்படும். பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள தொழில் ரீதியான திருமண ஆலோசனையை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையை சமாளிக்க விவாகரத்தை நாடலாம். விவாகரத்து என்பது நொடிப்பொழுதில் நடந்தேறி விடும். ஆனால் அது அவ்வளவு எளிதில் எடுக்க கூடிய தேர்வாக இருக்காது. அதற்கு காரணம் ஒரு உறவை வளர்க்க வேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதில் நடந்து விடாதல்லவா? உங்கள் கணவனின் நிலையை சரியாக கையாண்டால் நல்ல பயனை பெறலாம். அதற்காக திறம்பட செயலாற்றும் சில டிப்ஸ்கள் இருக்கிறது. அவைகளை பற்றி பார்க்கலாமா?

உங்களால் எவ்வளவு தூரம் பொறுத்துக் கொள்ள முடியும் என்ற அளவை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லோருமே ஒரு அளவுக்கு பொஸசிவாக இருக்கத் தான் செய்வார்கள். நீங்கள் உங்கள் கணவனுடைய பொஸசிவ் குணத்தை ரசித்தீர்களானால் உங்கள் இருவருக்குமான காதல் வலுவாக உள்ளது என்று அர்த்தமாகும். அவருடைய பொஸசிவ் குணம் நடுத்தரமானதாக இருந்தால் அதனை பொறுத்துக் கொள்ளலாம்.

அவருடைய பொஸசிவ் குணத்தால் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவரிடம் வெளிப்படுத்துங்கள். இந்த உரையாடலை ஆரம்ப நிலையிலேயே ஏற்படுத்துங்கள். அதனால் நிலைமை கையை விட்டு போவதற்கு முன் கட்டுப்பாட்டில் வைக்கலாம். பொஸசிவான கணவனை சமாளிக்க மனம் விட்டு பேசுவது ஒரு சிறந்த வழியாகும்.

உங்கள் கணவன் இவ்வளவு சுயநலமாக இருப்பதற்கான காரணத்தை கண்டறிய தொழில் ரீதியான கவுன்சிலிங் செல்வது முக்கியமாக கருதப்படுகிறது. முன்னாட்களிலோ அல்லது இந்நாளில் நிகழ்ந்த ஏதாவது மோசமான அனுபவத்தால் அவர்கள் இப்படி நடந்து கொள்ளலாம். தொழில் ரீதியான முறையில் இதை கையாண்டால் சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள உங்கள் சுதந்திரத்துக்காக அவரிடம் நீங்கள் கலந்துரையாடுங்கள். உங்கள் கணவரின் பொஸசிவ் குணத்தை பற்றி அவரிடம் பேச உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சிகளை அமைதியான மனநிலையில் அவரிடம் வெளிப்படுத்துங்கள்.

உங்கள் உறவில் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் கணவனிடம் வெளிப்படையாக பேசி விட வேண்டும். திருமணமான அனைத்து பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அறிவுரை இது. இது உங்கள் உறவில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்து விடும். பொஸசிவ் குணமுடைய உங்கள் கணவனையும் சுலபமாக கையாளலாம்.

எந்த ஒரு நல்ல உறவுக்கும் உரையாடல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு அறிவுரை உண்டு – உங்கள் துணையிடம் மனம் விட்டு நன்றாக பேசுங்கள். சரிவர பேசினாலே பல சந்தேகங்களும் பாதுகாப்பின்மை உணர்வுகளும் விலகி விடும்.

உங்கள் கணவன் செய்யும் அனைத்து நல்ல காரியங்களையும் பாராட்டுங்கள். இது அவருடைய பாதுகாப்பின்மை உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் குறைக்கும். பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.

அதிகமாக பொஸசிவ் குணமுடைய கணவனை சமாளிப்பதற்குள் உங்களுக்கு பைத்தியமே பிடித்து விடலாம். ஆனால் மனம் தளராமல், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி அவரிடம் அமைதியாக பேசுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களையும் தவிர்க்கவும். சூடான வாக்குவாதங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கத் தான் செய்யும். அமைதியாக இருந்து அன்பான முறையில் அவருக்கு புரிய வையுங்கள்.

எல்லா காயங்களும் காலப்போக்கில் ஆறும். அதனால் உங்கள் உறவு உறுதியாக கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். இதனால் உங்கள் கணவனுக்கு யோசிக்க நேரம் கிடைக்கும். அதனால் உங்கள் உறவு மேம்பட அவர் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பார். பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள இதுவும் ஒரு சிறந்த வழி

எப்போதும் சிரித்த முகத்துடன் கணவனை ஊக்குவிக்க வேண்டும் – இது திருமணமான அனைத்து பெண்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய முதன்மையான அறிவுரையாகும். மறப்பதும் மன்னிப்பதும் மன ரீதியாக ஒரு சிறந்த ஆற்றலாகும். உங்கள் உறவு நீண்ட காலம் நீடித்து உறுதியாக இதனை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
தனக்கே சொந்தம் என்ற எண்ணமுடைய, பொஸசிவ் குணமுடைய கணவனை நீங்கள் கொண்டுள்ளீர்களா? அப்படியானால் அவரை கையாளுவது என்பது மிகவும் கடினமான ஒரு வேலையே. பொதுவாக கணவன் மனைவி இடையே பொஸசிவ் குணம் நிலவுவது சகஜமே. ஆனால் அந்த உணர்வே அதிகமாக இருந்தால் அது அவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு பெரிய சுமையை ஏற்படுத்தி, நாளடைவில் அந்த உறவுக்குள் விரிசலை உண்டாக்கிவிடும்.
இவ்வகை சூழ்நிலைகள் வரும் போது அதை கையாளுவது கடினமாக மாறிவிடும். அதற்கு காரணம் எதிர்ப்பு நடவடிக்கை நாளடைவில் மன நோயாக மாறிவிடும். அதன் பின் அதை கட்டுப்படுத்துவது என்பது கையை மீறி போய்விடும். அதனால் ஆரம்ப நிலையிலேயே அதிகமாக உணர்ச்சிவசப்பட கூடாது. ஆழமான காதல் அல்லது தன் கணவன் அல்லது மனைவியை இழந்து விடுவோம் என்ற பயம் போன்றவைகள் தான் அளவுக்கு அதிகமான பொஸசிவ் குணத்திற்கு காரணமாக விளங்குகிறது. சில நேரம் இந்த குணம் அந்த நபரின் இயற்கை குணமாக கூட இருக்கலாம்.
பொஸசிவ் குணமுடைய கணவனை கையாளுவது சிரமம் தான். அதற்கு காரணம் தான் அப்படி இருக்கிறோம் என்பதை அவர் உணர்வதில்லை. அவர் உங்களை பாதுகாக்கிறார் என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார். அதனால் அவரை கையாள போதுமான முயற்சியும் பொறுமையும் தேவைப்படும். பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள தொழில் ரீதியான திருமண ஆலோசனையை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையை சமாளிக்க விவாகரத்தை நாடலாம். விவாகரத்து என்பது நொடிப்பொழுதில் நடந்தேறி விடும். ஆனால் அது அவ்வளவு எளிதில் எடுக்க கூடிய தேர்வாக இருக்காது. அதற்கு காரணம் ஒரு உறவை வளர்க்க வேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதில் நடந்து விடாதல்லவா? உங்கள் கணவனின் நிலையை சரியாக கையாண்டால் நல்ல பயனை பெறலாம். அதற்காக திறம்பட செயலாற்றும் சில டிப்ஸ்கள் இருக்கிறது. அவைகளை பற்றி பார்க்கலாமா?
உங்களால் எவ்வளவு தூரம் பொறுத்துக் கொள்ள முடியும் என்ற அளவை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். எல்லோருமே ஒரு அளவுக்கு பொஸசிவாக இருக்கத் தான் செய்வார்கள். நீங்கள் உங்கள் கணவனுடைய பொஸசிவ் குணத்தை ரசித்தீர்களானால் உங்கள் இருவருக்குமான காதல் வலுவாக உள்ளது என்று அர்த்தமாகும். அவருடைய பொஸசிவ் குணம் நடுத்தரமானதாக இருந்தால் அதனை பொறுத்துக் கொள்ளலாம்.
அவருடைய பொஸசிவ் குணத்தால் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவரிடம் வெளிப்படுத்துங்கள். இந்த உரையாடலை ஆரம்ப நிலையிலேயே ஏற்படுத்துங்கள். அதனால் நிலைமை கையை விட்டு போவதற்கு முன் கட்டுப்பாட்டில் வைக்கலாம். பொஸசிவான கணவனை சமாளிக்க மனம் விட்டு பேசுவது ஒரு சிறந்த வழியாகும்.
உங்கள் கணவன் இவ்வளவு சுயநலமாக இருப்பதற்கான காரணத்தை கண்டறிய தொழில் ரீதியான கவுன்சிலிங் செல்வது முக்கியமாக கருதப்படுகிறது. முன்னாட்களிலோ அல்லது இந்நாளில் நிகழ்ந்த ஏதாவது மோசமான அனுபவத்தால் அவர்கள் இப்படி நடந்து கொள்ளலாம். தொழில் ரீதியான முறையில் இதை கையாண்டால் சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள உங்கள் சுதந்திரத்துக்காக அவரிடம் நீங்கள் கலந்துரையாடுங்கள். உங்கள் கணவரின் பொஸசிவ் குணத்தை பற்றி அவரிடம் பேச உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சிகளை அமைதியான மனநிலையில் அவரிடம் வெளிப்படுத்துங்கள்.
உங்கள் உறவில் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். தாங்கள் செய்யும் அனைத்து காரியங்களையும் கணவனிடம் வெளிப்படையாக பேசி விட வேண்டும். திருமணமான அனைத்து பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அறிவுரை இது. இது உங்கள் உறவில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்து விடும். பொஸசிவ் குணமுடைய உங்கள் கணவனையும் சுலபமாக கையாளலாம்.
எந்த ஒரு நல்ல உறவுக்கும் உரையாடல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு அறிவுரை உண்டு – உங்கள் துணையிடம் மனம் விட்டு நன்றாக பேசுங்கள். சரிவர பேசினாலே பல சந்தேகங்களும் பாதுகாப்பின்மை உணர்வுகளும் விலகி விடும்.
உங்கள் கணவன் செய்யும் அனைத்து நல்ல காரியங்களையும் பாராட்டுங்கள். இது அவருடைய பாதுகாப்பின்மை உணர்வையும் தாழ்வு மனப்பான்மையையும் குறைக்கும். பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள இதுவும் ஒரு சிறந்த வழியாகும்.
அதிகமாக பொஸசிவ் குணமுடைய கணவனை சமாளிப்பதற்குள் உங்களுக்கு பைத்தியமே பிடித்து விடலாம். ஆனால் மனம் தளராமல், உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி அவரிடம் அமைதியாக பேசுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களையும் தவிர்க்கவும். சூடான வாக்குவாதங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கத் தான் செய்யும். அமைதியாக இருந்து அன்பான முறையில் அவருக்கு புரிய வையுங்கள்.
எல்லா காயங்களும் காலப்போக்கில் ஆறும். அதனால் உங்கள் உறவு உறுதியாக கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். இதனால் உங்கள் கணவனுக்கு யோசிக்க நேரம் கிடைக்கும். அதனால் உங்கள் உறவு மேம்பட அவர் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பார். பொஸசிவ் குணமுடைய கணவனை கையாள இதுவும் ஒரு சிறந்த வழி
எப்போதும் சிரித்த முகத்துடன் கணவனை ஊக்குவிக்க வேண்டும் – இது திருமணமான அனைத்து பெண்களுக்கும் கடைப்பிடிக்க வேண்டிய முதன்மையான அறிவுரையாகும். மறப்பதும் மன்னிப்பதும் மன ரீதியாக ஒரு சிறந்த ஆற்றலாகும். உங்கள் உறவு நீண்ட காலம் நீடித்து உறுதியாக இதனை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
- See more at: http://www.cinebeeps.com/archives/14535#sthash.f9rOKoID.dpuf

விரட்டு - திரைவிமர்சனம்...! ‘விரட்டு’ வேகம் கம்மிதான்...



நடிகர் : சுஜிவ்

நடிகை : எரிகா பெர்னான்டஸ்

இயக்குனர் : டி.குமார்

இசை : தரண்குமார்

ஓளிப்பதிவு : பிரசாத்

நாயகன் சுஜீவ் தாய்லாந்தில் மிகப்பெரிய திருடன். ஒருநாள் திருடிவிட்டு ஓடிவரும்போது அவனை நாயகி எரிகா காப்பாற்றுகிறார். சுஜீவ் திருடன் என்று தெரிந்திருந்தும் அவனுடன் நட்புடன் பழகி வருகிறார் எரிகா. ஒருகட்டத்தில் இருவரும் இந்த திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு எங்காவது சென்று ஓட்டல் ஆரம்பிக்கலாம் என முடிவெடுக்கின்றனர்.

அதன்படி, ஒரு ரெயிலில் ஏறி பயணமாகிறார்கள். அதே ரெயிலில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு எரிகாவுக்கு நன்கு அறிமுகமான சுமன் ஷெட்டியும் பயணமாகிறார். சுமன் பணம் கொண்டு வருவது தெரிந்தவுடன் அதை பத்திரமாக கொண்டு சேர்க்க எரிகாவும் உறுதி தருகிறார். ஆனால், நாயகனுக்கோ அந்த பணத்தின் மீது ஒரு கண் இருக்கிறது.

இந்நிலையில், அதே ரெயிலில் தாய்லாந்து ராணியின் கழுத்தில் கிடந்த கறுப்பு வைரத்தை திருடிய கும்பல் பயணிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்க, அந்த கும்பலை பிடிக்க ரகசியமாக போலீசும் பயணம் செய்கிறது. இந்நிலையில், சுமனின் பணத்தை திருட ஒரு கொள்ளை கும்பலும் முயற்சிக்கிறது.

அந்த கொள்ளைக் கும்பலிடம் இருந்து நாயகிக்காக சுமனின் பணத்தை காப்பாற்றுகிறான் சுஜீவ். இதனால் நாயகன் மீது நாயகிக்கு காதல் வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் நாயகனுக்கும் அந்த பணத்தின் மீது ஆசை வந்துவிட, நாயகிக்கு தெரியாமலேயே அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, பணம் திருடு போய்விட்டதாக நாயகியிடம் நாடகமாடுகிறார். ஆனால், நாயகிக்கு நாயகன்தான் அந்த பணத்தை திருடியது என்பது தெரிந்துவிடுகிறது. நாயகனுடன் சண்டைபோட்டு அந்த பணத்தை வாங்கி சுமனிடம் ஒப்படைக்கிறார். நாயகன் மீது வெறுப்பும் கொள்கிறார். இருந்தாலும், சுமனிடம் உள்ள பணத்தை கைப்பற்ற கொள்ளைக் கும்பல் தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறது.

இந்த முயற்சியை நாயகன் முறியடித்தாரா? நாயகனும், நாயகியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? கறுப்பு வைரத்தை திருடிய கும்பலை போலீஸ் பிடித்ததா? என்பதே மீதிக்கதை.

நாயகன் சுஜீவுக்கு இளம் ஹீரோவுக்குண்டான அத்தனை அம்சமும் இருக்கிறது. ஆனால், நடிப்பு தான் வரவில்லை. குறிப்பாக நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் ரொம்பவும் செயற்கைத்தனமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமே காட்டாமல் நடித்திருப்பது பார்க்க சலிப்பை ஏற்படுத்துகிறது.

நாயகி எரிகா அழகாக இருக்கிறார். இவருக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. இருந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சோகமான காட்சிகளில் நடிக்க கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார். சுமன் ஷெட்டிக்கு ரொம்பவும் அப்பாவியான கதாபாத்திரம். குழந்தைத்தனமான நடிப்பில் அசத்துகிறார். துப்பறியும் நிபுணராக வரும் மனோபாலா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மிரட்டியிருக்கிறார். அவருக்கு உதவியாளராக வரும் பெண் கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்.

ஒரு ரெயிலுக்குள்ளேயே படம் முழுவதையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டி.குமார். ரெயிலுக்குள்ளேயே இவ்வளவு வித்தியாசமான காட்சியமைப்புகளை காட்டமுடியுமா? என்பதில் வென்றிருக்கிறார். ஆனால், ஆக்ஷன் கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் தோல்வி கண்டிருக்கிறார். இறுதிக்காட்சியில் முரட்டு வில்லனை ஒல்லிப்பிச்சான் ஹீரோ அடித்து துவம்சம் செய்வதை ரசிக்க முடியவில்லை.

தரணின் இசை படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது. ஆண்ட்ரியா பாடிய பாடல் அருமை. ஆனால், அந்த பாடலை இறுதியில் வைத்து கடைசி வரை படத்தை பார்க்க வைத்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இவரது கேமரா ரொம்பவும் பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘விரட்டு’ வேகம் கம்மிதான். 

தமன்னா எம்.எம்.எஸ் வீடியோ வெளியானதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு



பாலிவுட் நடிகைகள் சிலரின் எம்.எம்.எஸ் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தாங்களே வீடியோ எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு பரபரபப்பை ஏற்படுத்தினர்.


இதே போல் சில நடிகர், நடிகைகளின் பெயர்களை கலங்கப்படுத்த அவர்களை போன்ற தோற்றமுடையவர்களை வைத்து ஆபசமாக காட்டி இணையத்தில் வெளியிட்டும் உள்ளனர். த்ரிஷா, சிம்ரன், நமீதா, மீனா, ஜோதிகா, ஏ.ஆர். முருகதாஸ் போன்ற பிரபலங்கள் ஏற்கனவே இந்த போலி வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.


அந்த வரிசையில் தற்பொழுது நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார். இரண்டு நாட்களாக முகநூலில் தமன்னா உருவத்தில் உள்ள ஒரு பெண் ஆடையின்றி மசாஜ் செய்து கொள்வது போன்ற வீடியோ வெளியானது.


இது குறித்து நடிகை தமன்னாவை தொடர்பு கொண்ட போது, அவருடைய மேனேஜர் தான் பதிலளித்தார்.


வீடியோ பற்றி தமன்னாவின் மேனேஜர் கூறியதாவது,


பிரபலங்களின் பெயர்களை கலங்க படுத்த இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு அவப்பெயர் ஏற்படுத்துவார்கள். அது போன்றே இதுவும் போலி வீடியோ தான். இது குறித்து விவாதிக்க தமன்னாவிற்கு நேரமில்லை. அவர் நடிப்பில் பிஸியாக உள்ளனர் என தெரிவிதுள்ளார்.

அஞ்சான் படத்தில் அயிட்டம் டான்ஸ் ஆடும் ஆண்ட்டி நடிகை..!



லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் ஒரு குத்துப்பாடல் இடம்பெறுகிறது.

மும்பைக்கு அருகில் உள்ள பன்வெல் என்ற இடத்தில் மிகப்பிரம்மாண்டமாக செட் போட்டு இப்பாடல்காட்சியை படமாக்கி இருக்கிறார்கள்.

 யுவன்சங்கர்ராஜா இசையமைப்பில், விவேகா எழுதிய, சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி...

சில்க் ஸ்மிதா என் கம்யூனிட்டி என்று தொடங்கும் இந்தப் பாடலுக்கு சூர்யா உடன் குத்தாட்டம் போட்டிருப்பவர் பாலிவுட் நடிகை சித்ரங்கதா சிங்.

2003 ஆம் ஆண்டிலிருந்து நடித்து வரும் சித்ரங்கதா, கடந்த 10 ஆண்டுகளில் நடித்தது வெறும் எட்டே படங்கள்தான்.

அவற்றில் தேஸி பாய்ஸ் என்ற படத்தில் ஜான் ஆப்ரகாமுக்கு ஜோடி.

அந்தப் படத்தில் ஜான் ஆப்ரகாமுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் சித்ரங்கதா.

தவிர ஏர்டெல் உட்பட ஏராளமான விளம்ரபடங்களிலம் நடித்தவர் இவர்.

முக்கியமான விஷயம்...சித்ரங்கதாவுக்கு திருமணமாகிவிட்டது.

 உலகின் டாப் 100 கோல்ஃப் விளையாட்டு வீரர்களில் ஒருவரான ஜோதி சிங் என்பவரை 2005 ஆம் ஆண்டில் மணந்து, கடந்த ஆண்டு விவாகரத்து செய்தவர்.

லிங்குசாமி ஸார்.. அஞ்சான் படத்தில் ஒரு ஆண்ட்டியை அயிட்டம் டான்ஸ் ஆட வச்சிருக்கீங்களே..ஞாயமா ஸார்..!

இரவில் நன்றாகத் தூங்க...! - உயர் ரத்த அழுத்தம் குறைய...! - இதப்படிங்க..!

இரவில் நன்றாகத் தூங்க...!


ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது.

பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.

இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.

பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.



சமையலில் ஏலக்காய் சேர்ப்போம்...!


சாதாரண வாசனைப் பொருள் என்று நாம் நினைக்கும் ஏலக்காயின் மருத்துவப் பயன்கள் மிக அதிகம்.

1.5 கிராம் ஏலக்காய் வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை என 12 வாரங்களுக்கு ஏலக்காயை எந்த விதத்திலாவது உணவில் சேருங்கள்.

உயர் ரத்த அழுத்தம் சராசரிக்கு வந்துவிடும் என்கிறது 2009&ம் ஆண்டு வெளியான இந்தியன் ஜர்னல் ஆஃப் பயோகெமிஸ்ட்ரி அண்ட் பயோஃபிசிக்ஸ். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கொடுக்கப்படும் மாத்திரை எப்படி செயல்படுகிறதோ, அந்தச் செயலை ஏலக்காய் செய்கிறது.

முட்டைகோஸ்ஸின் மருத்துவக் குணங்கள் - இதோ உங்களுக்காக...!

முட்டைகோஸ்ஸின் மருத்துவக் குணங்கள்:-


முட்டைகோஸ்ஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன.. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்… முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன.

எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது. உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.

அம்மான் பச்சரிசி... என்ன ஒண்ணும் புரியலையா..? - அப்போ இதப்படிங்க..!



அரிய மூலிகைகளின் அற்புத மருத்துவக் குணங்களை ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். காலுக்கடியில் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை அறியாமலே தேவையற்ற களையாக நினைத்து அழித்துவிட்டனர். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்களின் கூடாரமாக தங்கள் உடம்பை ஆக்கிக்கொண்டு, தினமும் மாத்திரை விழுங்கினால்தான் வாழ்வு என்று வாழ்கின்றனர்.

இந்த நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவேயாகும்..

முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்-த-கைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.

இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

Tamil - Amman Pacharisi

English - Snake weed

Sanskrit - Dugdhika

Telugu - Reddine narolu

Malayalam - Nela paalai

Botanical name - Euphorbia hirta

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

- அகத்தியர் குணபாடம்

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.

மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். தாய்ப்பால் சரியாக சுரக்காததால் சிலர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் அதாவது பசும்பாலோ கடையில் வாங்கிய பாலோ கொடுப்பார்கள். இதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

மலச்சிக்கலைப் போக்க

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

பெண்களுக்கு

வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாவார்கள். அதிகமா-க கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும் .

மரு நீங்க

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

தாது பலப்பட

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.

அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்! அட உண்ம தாங்க...!



நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தை வெகு சீக்கிரத்திலேயே தொட்டுவிட்டார் சிவகார்த்திகேயன்!


 வசூலில் பல வருடங்களாக முறியடிக்கப்படாத ஆல் டைம் ரெக்கார்டாக இருந்த கரகாட்டக்காரன் படத்தின் வசூலை சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் முறியடித்ததும்...


அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் மான் கராத்தே படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பும்.. அடுத்தடுத்து அவர் ஒப்புக்கொண்டிருக்கும் படங்களும்... இப்படி பல விஷயங்கள் ஒன்றாக சேர்ந்ததினால்,


திரையுலகில் சிவகார்த்திகேயனின் நட்சத்திர அந்தஸ்த்து ஜிவ்வென உயர்ந்து கொண்டே இருக்கிறது. எந்தளவுக்கு?


சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் நாலரை கோடிக்கு விலைபோனது. தற்போது அவர் நடித்து வரும் மான் கராத்தே படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் ஒன்பது கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.


சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கவிருக்கும் டானா படம் இன்னும் தொடங்கப்படவே இல்லை. அதற்குள் அந்தப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை பதிமூணு கோடிக்கு விற்று, காசை கல்லாப்பெட்டியில் போட்டுவிட்டார் டானா படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ்.


இந்த அசுரத்தனமான வளர்ச்சி சிவகார்த்திகேயனுக்கு தலையில் வெயிட்டை ஏற்றாமல் இருக்கணும்..!

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் இதோ உங்களுக்காக....!



சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சுவைக்காக சேர்க்கப்படுவது சிவப்பு முள்ளங்கி, முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.

சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகும் வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பாஸ்பரசும் இதில் அதிகமாக இருப்பது தான் அதற்கு காரணம். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.

பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.

இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.

இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளி போன்ற பிரச்சினைகள் இருக்காது. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

உடல் உஷ்ணத்தை தணிக்க வல்லது. இது வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளி நீக்க வல்லது. குடலில் புண் இருந்தாலும் ஆற்றி விடும்.

மலச்சிக்கல் ஏற்படாதவாறு பாதுகாக்கும். பசியை அதிகரிக்க செய்யும். உஷ்ண மிகுதியால் மூல நோய் ஏற்பட்டு அவதிபடுபவர்க்கு இது சிறந்த மூலிகையாகும். நீரிழிவு, நரம்பு தளர்ச்சிகு நல்லது.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். ஆகவே அளவாக சாப்பிடுவது நல்லது.

கூந்தலுக்கு வளர்ச்சியை தரும் கடுகு எண்ணெய்...!



உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று. இத்தகைய எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. எப்படியெனில் உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால், நீக்கலாம்.

குறிப்பாக, கடுகு எண்ணெயில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, அவை வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.

• கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 மணி நேரம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

• பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, இந்த முறை சரியாக இருக்கும். அதற்கு கடுகு எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்தால், தலையில் உள்ள பொடுகானது நீங்கிவிடும்.

• கூந்தல் நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும் இருப்பதற்கு, கடுகு எண்ணெயை தயிருடன் கலந்து, தலையில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் பொலிவோடு இருப்பது மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.