Tuesday 11 March 2014

சினிமாவில் இதெல்லாம் சகஜம்..சேம்சைடு கோல் போடும் நடிகை...!



தூங்கிக் கொண்டிருந்த போது டைரக்டர் ரூம் கதவைத் தட்டி சில்மிஷ வேலைகளில் ஈடுபட முயற்சி செய்ததால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக தேசிய விருதை வாங்கிய சீனு ராமசாமி தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். விஷ்ணு, விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் இந்தப் படத்தில் ஹீரோயினாக மனீஷா யாதவ் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.

மேற்படி படப்பிடிப்பில் கடந்த மூன்று நாட்களாக நடித்து வந்த ஹீரோயின் மனீஷா யாதவ் இப்போது திடீரென்று அந்தப் படத்திலிருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன் பின்னணியை விசாரித்த போது, டைரக்டர் சீனு ராமசாமி ஹீரோயின் மனீஷாவிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்ட சமாச்சாரம் தெரிய வந்தது.

மேற்படி படத்தின் நேற்று முந்தினம் பகல் படப்பிடிப்பு முடிந்தவுடன் மாலையில் தன்னுடைய ஹோட்டல் ரூமுக்கு ஓய்வெடுக்க சென்றிருக்கிறார் மனீஷா.

அப்போது அவர் ஆழந்த தூக்கத்தில் இருந்தபோது திடீரென்று யாரோ மெதுவான சத்தத்துடன் ரூம் கதவை தட்டியிருக்கிறார்கள். இதனால் திடுக்கிட்டு எழுந்த மனீஷா வேகமாகச் சென் கதவைத் திறந்து பார்த்திருக்கிறார். அங்கே டைரக்டர் சீனு ராமசாமி சிரித்த முகத்தோடு நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அவர் ஹீரோயின் மனீஷாவிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட முயற்சித்ததாவும், உடனே பதறிப்போன அவர் வேகமாக கதவை அடைத்துக் கொண்டு ரூமில் உட்கார்ந்து கதறி கதறி அழுததால் டைரக்டர் சீனு நல்ல பிள்ளையாக அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகி விட்டதாவும் சொல்லப்படுகிறது.

நேற்று காலை வழக்கம் போல மனீஷா படப்பிடிப்புக்கு வந்தபோது உனக்கு சரியாக நடிப்பு வரவில்லை. அதனால் நீ என் படத்துக்கு வேண்டாம் என்று தனது உதவியாளர்கள் மூலம் தகவல் சொல்லி அனுப்பியிருக்கி்றாராம் சீனு. உண்மையான காரணத்தை புரிந்த கொண்ட மனீஷாவும் எந்த பதிலும் சொல்லாமல் காரில் ஏறி கிளம்பி சென்னை வந்து விட்டாராம்.

இப்போது அவசரம் அவசரமாக வேறு ஒரு ஹீரோயினைத் தேடி வருகிறார் சீனு. ஆனால் அவரின் இந்த சில்மிஷ வேலைகளைக் கேள்விப்படும் ஹீரோயின்களோ அவருடைய படத்தில் நடிக்க தயக்கம் காட்டுகிறார்கள்.

இதற்கு முன்பும் டைரக்டர் சீனு ராமசாமி ‘நீர்ப்பறவை’ படத்துக்காக நடிகை பிந்து மாதவியை கமிட் செய்தபோது இதேபோல அவரிடம் சில்மிஷ வேலை பிரச்சினையில் பிந்துமாதவி அந்தப்பட வாய்ப்பையே உதறிவிட்டு வந்து விட்டார்.

அதன்பிறகு தான் அந்தப் படத்தில் சுனேனாவை கமிட் செய்து எந்தப் பிரச்சனையும் செய்யாமல் ஒழுங்காக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்.

டைரக்டர் பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 படத்தில் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்ற மனீஷாவுக்கு நடிக்கத் தெரியவில்லை என்று சீனுராமசாமி சொல்வதை நம்புவதும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

படப்பிடிப்பிலிருந்து இப்படி ஒரு தகவல் வந்தாலும் இதெல்லாம் உண்மையா? என்று ஹீரோயின் மனீஷாவைக் கேட்டால், முதலில் விஜய் சேதுபதிக்குத்த்தான் நான் ஜோடி என்றார் டைரக்டர்.

அவரோடு சில சீன்களையும் எடுத்தார். ஆனால் திடீரென்று இன்னொரு ஹீரோவான விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கச் சொல்கிறார். அதனால் தான் நான் கடுப்பாகி வந்து விட்டேன் என அவர் தரப்பில் சேஃப்பாக ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.

டோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்த தல அஜித்...!



சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடித்த படம் வீரம். பொங்கல் ரிலீசாக வெளிவந்து ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.


தமிழில் ரிலீஸானபோதே தெலுங்கிலும் ரிலீஸ் ஆகவிருந்து பின் சில பிரச்சனைகளின் காரணமாக வெளியாகவில்லை.


தற்போது இந்த படம் 'வீருடொக்கடே' என்ற பெயரில்தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வருகிற மார்ச் 21ம் தேதி ரிலீசாகவுள்ளது.


அஜித் படங்களுக்கு தெலுங்கில் நல்ல மார்கெட் இருப்பதாலும், தமன்னா, சிவா, தேவி ஸ்ரீ பிரசாத் போன்ற  போன்ற பிரபலங்கள் படத்தில் பணியாற்றியிருப்பதாலும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மான் கராத்தே படத்தில் பறவை முனியம்மாவுடன் கலக்கும் சிவகார்த்திகேயன்..!



மான் கராத்தே படத்தில் பறவை முனியம்மாவுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் சிவகார்த்திகேயன்.


சிவகார்த்திகேயன் தற்போது தான் நடித்துவரும் ‘மான் கராத்தே’ படத்தில் பீட்டர் என்ற நகரத்து வாலிபனாக நடிக்கிறார்.


இதற்காக தனது ஹேர்ஸ்டைல், நடை, உடை எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.


காரணம் இந்தப்படத்தின் பீட்டர் கேரக்டர் அதையெல்லாம் பிரதிபலிக்கிறதாம்.


இதற்கேற்ற மாதிரி படத்தில் ‘ராயபுரம் பீட்டரு’ என்கிற ஓப்பனிங் பாடலும் வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் திருக்குமரன்.


அனிருத் இசையமைத்துள்ள இந்தப்பாடலை பரவை முனியம்மாவுடன் சிவகார்த்திகேயனும் இணைந்து பாடியுள்ளார்,

 இந்தப்பாடலை ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் ஐந்து நாட்களில் படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

ஸ்ரேயா, ரீமாசென் போதையில் போட்ட காம வெறியாட்டம்..!



நடிகை ஸ்ரேயா, ரீமாசென் மற்றும் சில நடிகைகள் இளம் நடிகர்களுடன் நடந்த ரகசிய பார்டியின் போது போதை தலைகேறி அவர்களின் சட்டைகளை கிழித்து வெறியாட்டம் நடத்தினர்.

இது குறித்த புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

ஆனால் தற்பொழுது அந்த நிகழ்ச்சியின் போது அவர்கள் அடித்த கூத்தை மும்பையில் உள்ள லோக்கல் தொலைக்காட்சி ஒன்று கடந்த வாரத்தில் ஒளிபரப்பியுள்ளது.

 இந்த வீடியோவில் ரீமாசென்னும் ஸ்ரேயாவும் பார்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஒருவரை கூட விடாமல் கட்டி புரண்டு ஆட்டம் போட்டுள்ளனர்.

மேலும் ஒரு சில இளைஞர்களின் சட்டைகளை கிழித்து முத்தமழை பொழிந்துள்ளனர். அதில் ஒரு இளைஞரின் உடல் முழுவதும் நகங்களால் கீறப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நாய்களை விட கொடூரமாக அந்த இளைஞர் மீது தாக்குதல் நடந்துள்ளது தற்பொழுதுதான் வெளியில் தெரிவந்துள்ளது.

இதனால் பலதரப்பினரின் கண்டனத்திற்கு இவ்விரு நடிகைகளும் ஆளாகியுள்ளனர்.

ஏற்கனவே இந்த இரு நடிகைகளும் மார்கெட் இழந்தவிட்டதால், அந்த நடிகைகளும் இதுபற்றி பெரிதாக ஏதும் கவலை கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

ரஜினிக்கும் கோச்சடையானுக்கும் சம்பந்தமே இல்லை - விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி..!



 சூப்பர் ஸ்டார்  என்ற பொன் முட்டை இடும் வாத்தை ஒவ்வொரு முறையும் அவருக்கு தெரியாமலே சிலர் அறுத்து வந்தனர்.

 ஆனால் இன்னும் சில வாரங்களில் ரஜினி படம் ரிலீஸ் ஆவதால் சற்று அலர்ட் ஆகியுள்ளாராம் ரஜினி.

அதாவது சூப்பர் ஸ்டார் படம் ஒவ்வொரு முறை ரிலீஸ் ஆகும்போதும் அதனை வாங்கும் விநியோகஸ்தர்கள் படத்தின் ரீல் அறுந்துவிழும் வரை தியேட்டரில் ஓட்டிவிட்டு லாபத்தை பார்க்கிறார்கள்.

விஷயம் இப்படியிருக்க சில விநியோகஸ்தர்களோ சத்தியமா இந்த படம் என் தியேட்டர்ல சரியாவே ஓடல எனக்கு நஷ்டம் ஆயிடிச்சுன்னு சொல்லி ரஜினி வீட்டை முற்றுகை இட, வந்தவர்களை உட்காரவைத்து விவரத்தை அறிந்து அவர்கள் சொல்வது உண்மையா, பொய்யா என்று கூட ஆராயாமல் சில லட்சங்களை கொடுத்து அனுப்பி வைக்கிறாராம்.

இதை பார்த்த ஒரு நல்ல மனம் உள்ள விநியோகஸ் ஒருவர் ரஜினியை தொடர்பு கொண்டு உங்க படம் ஓடலைன்னு சொல்றது பொய் எல்லா ஏரியாவிலும் படம் நல்லா தான் போகுது உங்களை ஏமாற்றிவிட்டு போகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

ரஜினி விசாரித்ததில் நல்ல மனம் கொண்ட விநியோகஸ்தர் சொன்னது உண்மை என புரிந்து இனி அந்த தப்பை பண்ணக்கூடாது என முடிவு எடுத்திருக்கிறார்.

 அதாவது கோச்சடையான் படத்தின் வியாபார வேலைகள் தொடங்கிவிட்டன.

படத்தை விநியோகஸ்தர்களிடம் விற்கும் போது அக்ரிமெண்டில் தெளிவாக இந்த படம் லாபம் அடைந்தாலும் நட்டம் அடைந்தாலும் அதற்கு ரஜினி பொறுப்பேற்க மாட்டார் என எழுத சொல்லியிருக்கிறாராம்.

இதனால் ரஜினி வீட்டுக்கு நட்ட கணக்கை எடுத்து செல்லும் விநியோகஸ்தர்கள் கண்ணில் மிளகாய் பொடியை தூவியது போல் ரத்த கண்ணீர் வடிக்கிறார்களாம்…!

த்ரிஷாவின் மசாஜ் இரகசியம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?



பண்டைய காலத்தில் ஆயுர்வேதத்தின் மூலமே, உடலில் உள்ள பல நோய்களுக்கு நிவாரணங்கள் கிடைத்தன.

அதுமட்டுமின்றி, உடலை அழகாகவும், கட்டுக்கோப்புடனும் வைத்துக் கொள்ள, உடல் மசாஜைத் தான் பின்பற்றி வந்தனர்.

 தற்போது என்னவென்று தெரியவில்லை, மக்கள் மத்தியில் இந்த ஆயுர்வேத மருத்துவ முறை பிரபலமாக இருப்பதோடு, பலரும் அதனையே பின்பற்றுகின்றனர்.

சொல்லப்போனால், சில நடிகைகள் கூட, தங்கள் அழகை பராமரிப்பதற்கு, இத்தகைய ஆயுர்வேத மசாஜ்களைத் தான் பின்பற்றுகின்றனர்.

அதிலும் ஆயுர்வேத மசாஜில் நவரக்கிழியை தொடர்ந்து வரும் ஸ்நேகதாரா மற்றும் ஸ்நானாதான் மிகவும் பிரபலமானது.

இந்த மசாஜின் மகிமை என்னவெனில், முதலில் நவரை அரிசியை மூலிகைப் பாலில் ஊற வைத்து வடிகட்டி, பின் அந்த அரிசியை எடுத்து லேசாக வேக வைத்து, ஒரு மஸ்லின் துணியில் போட்டு கட்டிக் கொண்டு, உடல் முழுவதும் வடிகட்டிய மூலிகைப் பால் தொட்டு மசாஜ் செய்யப்படும்.

 பின்னர் தலையிலிருந்து, கால் வரை மூலிகை எண்ணெய் ஊற்றி, நன்கு மசாஜ் செய்து, இறுதியில் நீரால் உடலை அலசிவிடப்படும்.

இந்த மசாஜால் மூட்டு வலிகள், செரிமானப் பிரச்சனை, உடல் வலி, மன அழுத்தம் போன்ற பல பிரச்சனைகளும் குணமாகும்.

குறிப்பாக இத்தகைய மசாஜை நடிகைகளில் மிகவும் பிரபலமான த்ரிஷா செய்துள்ளார்.

இதனால் தான் என்னவோ, இன்னும் சிக்கென்ற உடலுடனும் அழகாக ரசிகர்களின் மனதில் நீங்காமல் இடம் பெற்றுள்ளார்.

சமுத்திரக்கனியை நம்பலாமா.. வேண்டாமா..? - திடீர் குழப்பத்தில் விஜய்..!



இளைய தளபதி விஜய் தற்பொழுது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார்.

இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் மின்னல் வேகத்தில் படமாக்கப்பட்டுவருகிறது.

வருகிற தீபாவளி வெளியீடாக இப்படம் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இப்படத்திற்குப் பிறகு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று ஏற்கெனவே
பேசப்பட்டுவந்தது.

குறிப்பாக சிம்புதேவன் இயக்கவுள்ள படத்தின் கதை, நாயகி, இசையமைப்பாளர் என அனைத்துமே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அடிக்கடி கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

ஆனால் தற்பொழுது பரவிவரும் கிசுகிசுக்களின் அடிப்படையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் படத்திற்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறாராம் விஜய்.

விஜயின் 58 ஆவது படமான அப்படத்தினைப் பற்றிய அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகலாம் என்றும் ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

துப்பாக்கி படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோர் இணைந்திருக்கும் விஜயின் 57 ஆவது படமான இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக
நடித்துவருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துவருகிறார்.


சமுத்திரக்கனி இயக்கத்தில் பல்வேறு தடைகளையும் தாண்டி கடந்த மார்ச் 8ல் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன், அனைத்துத் தரப்பு விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டுவருகிறது.

ரஜினியை புகழும் சரத்குமார் - திடுக்கிடும் பின்ன்னி...!



ரஜினிகாந்த் தமிழரா? இல்லையா? என்று கோச்சடையான் ஆடியோ பங்ஷனில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சுக்கு நடிகர் சரத்குமார் தக்க பதிலடி கொடுத்தார் .

கோச்சடையான் ஆடியோ பங்ஷனில் கலந்து கொண்டார் கவிஞர் வைரமுத்து. விழாவில் அவர் பேசும்போது :

இந்த 65 வயதிலும் அவருக்கு 25 வயதுடைய ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இது வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காதது. ரஜினி 4 தலைமுறைகளைக் கடந்து வந்திருக்கிறார்.

கருப்பு வெள்ளை, வண்ணம், 3டி அனிமேஷன், இப்போது கேப்சர் மோஷன் டைப் என்று இவர் கடந்து வந்த பாதையை இந்திய அளவில் வேறு எந்த நடிகரும் தொட்டதில்லை.

இவரைப் போன்று சிகரம் தொட்டவரும் வேறு எவரும் இல்லை. இதற்கு இவருடைய உழைப்பு மட்டுமே காரணமில்லை.. இவரை விட உழைத்தவர்கள் நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள்.

உழைப்பையும் தாண்டிய இவருடைய மனித நேயம்தான் இவரை இங்கே இத்தனையாண்டுகளாக நிலை நிறுத்தியிருக்கிறது. ரஜினி நடித்த ‘பாபா’ படம் சரியாகப் போகவில்லை.

 உடனே விநியோகஸ்தர்களை அழைத்து என்னால் நீங்கள் நஷ்டமடைய வேண்டாம். இந்தாருங்கள் உங்களுடைய நஷ்டத்தொகை என்று அதைத் திருப்பிக் கொடுத்தார். இது அவரது மனித நேயம்.

ரஜினி சமயோசித புத்தியுடையவர். அறிவுக் கூர்மை மிக்கவர். அதற்கு என்னால் பல உதாரணங்களை சொல்ல முடியும். ஆனால் ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன்..

 ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற சர்ச்சைகள் கிளம்பிய காலம் அது. அப்போது அவர் ஒரு பேட்டியளிக்கிறார். அதிலே ஒரு நிருபர் கேள்வி கேட்கிறார். அந்தக் கேள்விக்கு ரஜினி அளித்த பதில் என்னை அசர வைத்தது.

அப்படியொரு புத்திசாலித்தனமான பதில் அது.. பத்திரிகையாளர் கேட்ட கேள்வி “ஒரு தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்னு சொல்றாங்களே..?” இது மிகவும் சிக்கலான கேள்வி.. ரஜினியின் பூர்விகம் மகாராஷ்டிரா.. பிறந்தது கர்நாடகாவில்.. ஆனால் புகழ் பெற்றது தமிழ்நாட்டில்.. என்ன பதில் சொல்வார்..?


எப்படிச் சொன்னாலும் சிக்கலாச்சே என்று பதைபதைப்புடன் இருந்தேன். ரஜினி சொன்னார்.. “அதுவும் சரிதான்.. நல்லவேளை நாடார், முதலியார், செட்டியார்கள் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்லாமல் தமிழன் முதல்வராக வேண்டும் என்று சொன்னார்களே அதுவரைக்கும் சந்தோஷம்..” என்றார்..

இப்படித்தான் எம்.ஜி.ஆரை ‘மலையாளி’ என்றார்கள்.. அடுத்து ரஜினியை ‘கன்னடர்’ என்கிறார்கள்.. ஆனால் இவர்கள் அதையெல்லாம் கடந்த மனிதர்கள்.. தங்களது பேச்சு, பழக்கவழக்கத்திலேயே தமிழர்களாக மாறிப் போனவர்கள். ரஜினிக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்..

உங்களுடைய ரசிகர்களை நீங்கள் அதிகம் காக்க வைக்காதீர்கள்.. வருடத்திற்கொரு படம் கொடுங்கள். இந்தப் படத்தை முதலில் சிறுவர்களிடத்தில் கொண்டு போங்கள்.. அதற்குப் பின்பு ரசிகர்கள் பார்த்துக் கொள்ளலாம். சிறுவர்கள் அதிகம் பார்க்க வேண்டிய படம் அது. அந்த வகையில் இதனை முன்னிறுத்துவதுதான் சிறந்தது…” என்றார்.

இதற்கு பதில் சொன்ன நடிகர் சரத்குமார் வைரமுத்து திடீரென்று ரஜினி தமிழரா? இல்லையா? என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்கிறார். அப்படி அவர் கேட்க வேண்டியதன் அவசியம் இப்போது ஏன் வந்தது என்று தெரியவில்லை.

அவர் எப்போதோ தமிழராகி விட்டார். அப்படி இருக்கும் போது வைரமுத்து ஏன் இப்படி பேசினார் என்று தெரியவில்லை என்று வைரமுத்து துடுக்குப் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த மூவர் கூட்டணியில் விஜய் சேர்ந்ததன் காரணம்..?



மிட்நைட் பார்ட்டியில் விஜய், சிம்பு, தனுஷ் ஒன்றாக பங்கேற்று புதிய நட்பை ஏற்படுத்திக் கொண்டனர்.சிம்பு, தனுஷ் இருவருமே மிட்நைட் பார்ட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.


இவர்களுக்கான நட்பு வட்டாரமும் பெரியது என்பதால் வாரத்தில் ஒரு மிட்நைட் பார்ட்டியலாவது இவர்கள் பங்கேற்பார்கள். கடந்த பொங்கலுக்கு ஜில்லா படம் ரிலீஸ ஆகும்போது விஜய்யை சந்தித்தார் தனுஷ்.


அப்போது ஜில்லா படம் வெற்றி பெற வாழ்த்தினார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்த ஒரு மிட்நைட் பார்ட்டியில் சிம்பு, தனுஷுடன் விஜய்யும் பங்கேற்றார்.


மூவரும் சேர்ந்து போட்டோக்களும் எடுத்துக்கொண்டனர். அதை சிம்பு தனது டுவிட்டரில் வெளியட்டுள்ளார்.


மிட்நைட் பார்ட்டிகளில் விஜய் அதிகம் பங்கேற்பதில்லை. ஆனால் சமீபகாலமாக அவர் இதுபோன்ற பார்ட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகிறாராம்.


சனிக்கிழமை பார்ட்டியில் அவர் சிம்பு, தனுஷை சந்தித்து அவர்களுடன் பார்ட்டி கொண்டாடியுள்ளார். இதன் மூலம் மூவருக்கும் இடையே புதிய நட்பு மலர்ந்துள்ளது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.