Thursday 6 March 2014

கொத்தமல்லி இலையின் மருத்துவ இரகசியங்கள் உங்களுக்குத் தெரியுமா..?



அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. ஒவ்வொருவரின் வீட்டிலும் உள்ள ஃப்ரிட்ஜ்களில் கொத்தமல்லி இலைகளுக்கு என்று தனி இடம் உண்டு. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும். கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கொத்தமல்லி இலைகளில் மிளகில் இருப்பது போன்ற சிறிது காரமான சுவை இருப்பதால், இது பல உணவு வகைகளுக்கும் வித்தியாசமான வாசனையைக் கொடுத்து, உணவின் சுவையைக் கூட்டுகிறது. குறிப்பாக இதன் விலை மிக மிகக் குறைவு. ஆனால் இதன் மருத்துவப் பயன்களைப் பார்க்கும் போது, விலை மதிப்பில்லாததாகக் கருதப்படுகிறது. இது உணவிற்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமின்றி, நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களையும் நீக்குகிறது. இப்போது அந்த கொத்தமல்லி இலைகளின் மருத்துவப் பயன்களைப் பார்ப்போம்.

கண் நோய்கள்

நல்ல புதிய கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மாகுலர் டிஜெனெரேசன் (macular degeneration) எனப்படும் கண் நோய், விழி வெண்படல அழற்சி (conjunctivitis) எனப்படும் மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றைக் குணப்படுத்துதலிலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை இதப்படுத்தவும் உதவுகின்றன. அதற்கு சிறிது கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் கொதிக்கவிட்டு, அதனை மெல்லிய சுத்தமான துணியினால் வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த நீரின் சில சொட்டுக்களை கண்களில் விடுவதால், கண் எரிச்சல், கண் உறுத்தல், கண் வலி ஆகியவை குணப்படுவதோடு, கண்களில் நீர் வடிதலும் நிற்கும்.


மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்

மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறதா? அப்படியெனில் 20 கிராம் புதிய கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுங்கள். இந்த சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விடுங்கள். வடிகின்ற இரத்தம் உடனே நின்றுவிடும். கொத்தமல்லி இலைகளையும் கற்பூரத்தையும் சேர்த்த அரைத்துக் கொண்டு இக்கலவையை நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொண்டாலும், மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நின்றுவிடும். சிலசமயங்களில் இக்கலவையை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடிவது நிற்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


சரும நோய்கள்

கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகளை நீக்கும் சக்தியும், நச்சுக்களை நீக்கும் ஆற்றலும், தொற்றுக்களை நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மையும் உண்டு. சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. இதன் காரணமாக சில சரும நோய்களை நீக்குவதில் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. படை நோய் இருந்தால், கொத்தமல்லி இலைகளை அரைத்து ஜூஸாக்கிக் குடிக்கவோ அல்லது அரைத்து சருமத்தின் மீதோ தடவலாம். தோல் தடிப்பிற்கும், அரிப்பிற்கும், புதிய கொத்தமல்லி இலைகளை அரைத்துத் தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக அலசிவிட்டால், சரும பிரச்சனைகள் குணமாகும்.


கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் தலைச்சுற்றல், வாந்தி

கர்ப்பத்தின் தொடக்க காலங்களில் பெரும்பாலான பெண்களுக்கு தலைசுற்றலும், வாந்தியும் இருக்கும். இது மாதிரி நேரங்களில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, குளிர வைத்துக் குடித்து வர வேண்டும். இதனால் தலைச்சுற்றலும், வாந்தியும் குறையும்.

அம்மை

கொத்தமல்லி இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுண்கிருமி எதிர்ப்புத் தன்மை, கிருமி நாசினித் தன்மை மற்றும் அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி-யும் இதன் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்கின்றன. இதனால் அம்மை நோயினால் ஏற்படும் வலி குறையும்.


வாய்ப்புண்

கொத்தமல்லி இலையில் நிறைந்துள்ள வாசனை எண்ணெயான சிட்ரோநெல்லோல், சிறப்பான கிருமிநாசினித் தன்மை கொண்டுள்ளது. எனவே இது வாயிலுள்ள புண்களை ஆற்றுவதோடு, அது வராமலும் தடுக்கும். மேலும் சுவாசத்தை ஃப்ரெஷ் ஆக்குவதோடு, வாய்ப் புண்களை நன்கு குணப்படுத்தும் தன்மை கொண்டது.

கொழுப்புக்களை குறைக்கும்

கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது. மேலும் இரத்த நாளங்களின் சுவர்களில் படியும் கொழுப்பை நன்கு குறைப்பதால், மாரடைப்பு வருவதை பெருமளவு குறைக்கிறது.


செரிமானத்தை அதிகரிக்கும்

கொத்தமல்லியில் மணம் நிறைந்த நறுமண எண்ணெய் இருப்பதால், பசியுண்டாக்கியாகச் செயல்பட்டு, வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் நொதிகளையும், சுரப்புக்களையும் அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது. மேலும் பசியின்மையைப் போக்குவதிலும் பயன்படுகிறது.

கதையே இல்லாத திரைப்படத்தில் பல பிரபலங்கள்’ – இயக்குனர் பார்த்திபன்..!



நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்திபன் இயக்கும் புதிய படம் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்.

எதையுமே வித்யாசமாக செய்யும் இயக்குனர் பார்த்திபன் இந்தப் படத்தின் பெயரிலேயே ஒரு புதுமையை காட்டியுள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என படத்தின் தலைப்பை வைத்துவிட்டு, இதன் துணை தலைப்பாக கதை இல்லா படம் என்று பெயரிட்டுள்ளர்.

100 ஆண்டு இந்திய சினிமாவுக்கு தான் செலுத்தும் மரியாதை என்ற அறிவிப்போடு இந்தப் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் பார்த்திபன் மகள் கீர்த்தனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ராஜரத்தினம் செயல்படுகிறார். சுதர்சனம் எடிட்டிங்கை கவனிக்கிறார். வேல்முருகன் கலை இயக்குனராக பணிபுரிகிறார்.

மேலும் இப்படத்தில் ஆர்யா, அமலாபால், பிரகாஷ்ராஜ், நசிரியா ஆகியோர் நடிக்க இருக்கிறார்களாம்.

ஷகிலா கதையில் நடிக்க அவசியம் எனக்கு இல்லை அஞ்சலி ஆவேசம்..!



ஷகிலா வேடத்தில் ஆபாசமாக நடித்து டாப் இடம் பிடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்றார் அஞ்சலி. அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என தமிழில் வேகமாக முன்னேறிய நடிகை அஞ்சலி.

சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். சீதம்மா வாகிட்லே சிறுமல்லே சிட்டு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அப்படம் ஹிட் ஆனது.

ஆனாலும் எதிர்பார்த்தளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை படத்தில் அஞ்சலி நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. இதுபற்றி அஞ்சலி கூறும்போது, ஷகிலா வாழ்க்கை படத்தில் நான் நடிப்பதாக கிசுகிசு வருகிறது.

நிச்சயம் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன். சினிமாவில் முன்னணி இடத்துக்கு வருவது எப்படி என்பது தெரியும். அதற்காக ஆபாசமாக நடித்து முன்னணி இடத்தைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என அவர் கோபமாக கூறியுள்ளார். 

இயக்குனரிடம் வீடியோ காட்டி ஹீரோயினுக்கு சான்ஸ் கேட்ட வர்மா..!



தன் படத்தில் நடிக்கும் ஹீரோயினுக்கு மற்றொரு இயக்குனர் படத்தில் நடிக்க வீடியோ காட்டி சான்ஸ் வாங்கி கொடுத்தார் ராம்கோபால் வர்மா.

தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களிடம் நெருக்கமாக இருப்பதாக அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் ராம் கோபால் வர்மா. ஐதராபாத்தில் அவரது அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடப்பதால் கடந்த 1 வருடமாக அவர் ஓட்டலில் தங்கி இருக்கிறார்.

வர்மா இயக்கும் ரவுடி தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஷான்வி ஸ்ரீவஸ்த்வா. வர்மாவும் டோலிவுட் இயக்குனர் புரி ஜெகநாத்தும் நீண்ட நாள் நண்பர்கள். தான் இயக்கும் புதிய படத்திற்கு கடந்த பல மாதங்களாக ஹீரோயின் தேடி வருகிறார் புரி. பல புதுமுகங்களை அவர் நேர்முக தேர்வுக்கு அழைத்தும் யாரையும் பிடிக்கவில்லை.

இது பற்றி வர்மாவிடம் கூறினார் புரி. உடனே அவர், என் படத்தில் நடிக்கும் ஷான்வியை வேண்டுமானால் உன் படத்திலும் நடிக்க வை என்றவர் ஷான்வி நடித்த வீடியோ காட்சிகளை புரியிடம் கொடுத்தார்.

 அதை பார்த்தவர் திருப்தி அடைந்தார். தன் படத்துக்கு ஷான்வியையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருக்கிறார். இன்னும் 2 வாரத்துக்குள் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று புரி தெரிவித்தார்.

ஹன்சிகாவை வர்ணித்து சிம்பு பாடிய பாடல் நீக்கமா..?



நயன்தாரா வேண்டாம்... ஆண்ட்ரியா வேண்டாம்... என ஹன்சிகாவை பற்றி சிம்பு பாடும் பாடல் நீக்கப்பட்டுவிட்டதா என்பதற்கு பதில் அளித்தார் வாலு பட இயக்குனர். வாலு படத்தில் நடித்தபோது சிம்பு, ஹன்சிகாவுக்கு காதல் மலர்ந்தது.

இதை இருவருமே தங்களது இணைய தள பக்கத்தில் தெரிவித்தனர். இந்த காதலுக்கு ஹன்சிகாவின் அம்மா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எதிர்ப்பு வலுத்ததையடுத்து சிம்பு, ஹன்சிகாவும் தங்கள் காதலை கைவிடுவதாக சமீபத்தில் அறிவித்தனர்.

அறிவிப்பு வெளியிட்ட அதேதினத்தில் ஐதராபாத்தில் நடந்த வாலு பட ஷூட்டிங்கில் பங்கேற்றனர். காதல் பிரிவு பற்றிய எந்த வருத்தமும் இருவர் முகத்திலும் தெரியவில்லை.

இருவரும் டூயட் சீனில் நடித்தனர். ஹன்சிகாவை நினைத்து, அவரை வர்ணித்து சிம்பு பாட்டு பாடுவதுபோல் ஒரு காட்சி படத்தில் இருந்தது. நயன்தாராவும் வேண்டாம் ஆண்ட்ரியாவும் வேண்டாம் ஹன்சிகாவே போதும் என்று அப்பாடலில் வரிகள் எழுதப்பட்டிருந்தன.

இருவருக்கும் காதல் முறிந்துவிட்டதால் படத்திலிருந்து அப்பாடல் நீக்கப்படுமா? என்றதற்கு இயக்குனர் விஜய் சந்தர் பதில் அளித்தார். அவர் கூறும்போது, இப்பாடல் கதையின் போக்கையொட்டி எழுதப்பட்டது.

இதை நிஜ வாழ்வோடு ஒப்பிடக்கூடாது. தனது  கேர்ள்பிரண்டை நினைத்து ஹீரோ பாடுவதுபோல் இது இடம்பெற்றிருப்பதால் அப்பாடலை நீக்கும் எண்ணம் இல்லை. இருவரும் சேர்ந்து இன்னும் 2 பாடல்களில் நடிக்க வேண்டி உள்ளது என்றார்.

தேர்தல் எதிரொலி: ரஜினி, விஷால் படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு..?



தேர்தல் காரணமாக ரஜினி, விஷால் படங்கள் தள்ளிப் போகின்றன.

ரஜினியின் கோச்சடையான் படம் ஏப்ரல் 11–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா வருகிற 9–ந்தேதி காலை சத்யம் தியேட்டரில் நடக்கிறது.

இதில் ரஜினி, அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே போன்றோர் பங்கேற்கின்றனர்.

கோச்சடையான் படத்தை உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதனால் கோச்சடையான் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

அடுத்த மாதம் தேர்தல் பணிகள் தீவிரமாக நடக்கும் என்பதால் கோச்சடையான் படத்தை ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது என படக்குழுவினர் கருதுகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு திரைக்கு கொண்டு வரலாம் என யோசிக்கிறார்கள்.

இதுபோல் விஷால் நடிக்கும் நான் சிகப்பு மனிதன், சிவகார்த்திகேயன் நடிக்கும் மான் கராத்தே படங்களையும் அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய முன்னதாக முடிவெடுத்தனர். ஆனால், தேர்தல் காரணமாக அந்த படங்களின் ரிலீசும் தள்ளிப்போகிறது.

அடுத்த மாதம் எந்த படமும் ரிலீசாகாது என தெரிகிறது

உலகின் காஸ்ட்லி நகர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்..!



உலக அளவில் இந்தாண்டு எடுக்கப்பட்ட சர்வேயில், அதிக செலவாகும் நகரங்கள் பட்டியலில் இம்முறை சிங்கப்பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேலும் இதில், மும்பை, டெல்லி போன்றவை ரொம்பவே மலிவான நகரங்கள் என வழக்கம் போல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதே சமயம் கடந்தாண்டு மிக காஸ்ட்லியான நகரம் ஆஸ்லோ என்றும், டெல்லி, மும்பை ஆகியவை வாழ்வதற்கு மலிவான நகரங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்க்து.

பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவு என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அதிக செலவு மிக்க நகரங்கள் குறித்த சர்வேயை எடுத்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம், உலக நாடுகளில் முக்கியமான 140 நகரங்களில் சர்வே மேற்கொண்டது. இதில், அந்தந்த நகரங்களில் விற்பனையாகும் முக்கியமான 160 பொருட்களின் விலை, சேவை மற்றும் வெளிநாடு செல்லும் ஊழியர்களுக்கு தரப்படும் பயணப்படி உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு சர்வே நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகிலேயே அதிகமான செலவு மிக்க நகரமாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அங்கு கார்களின் விலை தாறுமாறாக ஏறி வருகிறது. இதுதவிர, வீட்டு வாடகை, நிலத்தின் மதிப்பு, பொருட்களின் விலை, ஷோரூம்களில் விற்கப்படும் ஐரோப்பிய ஆடைகளின் விலைகளும் உச்சகட்டத்தை எட்டி வருகிறதாம். மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை கூட பிற நாடுகளை நம்பியே சிங்கப்பூர் இருப்பதால் அவற்றின் விலையும் அதிகளவில் உள்ளது.

ஒட்டுமொத்த போக்குவரத்து செலவு என்பது நியூயார்க் நகரத்தை காட்டிலும் சிங்கப்பூரில் 3 மடங்கு அதிகம் என்கின்றன ஆய்வு முடிவுகள்.இதற்கு ஏற்றார் போல் தனிநபர் வருமானமும் உயர்ந்து வருகிறது. அங்கு ஒரு தொழிலாளி ஒரு பர்கர் வாங்க 13 நிமிடங்கள் வேலை பார்த்தால் போதும். ஒரு ஐபோன் வாங்க 22 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால், பிலிப்பைன்சின் மணிலாவில் இதை விட 20 மடங்கு அதிகமாக வேலை பார்த்தால்தான், அவற்றை வாங்க முடியும்

சிங்கப்பூரில் தனிநபரின் சராசரி மாத வருமானமே இந்திய மதிப்பில் ரூ.30 லட்சத்தை தாண்டுகிறது. இதனால்தான் கடந்த சர்வேயின் போது 6வது இடத்தில் இருந்த சிங்கப்பூர் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் ஜப்பானின் யென் மதிப்பு குறைந்து வருவதால், அந்நாட்டின் தலைநகரான டோக்கியோ முதலிடத்திலிருந்து 6வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.

இதில் 2வது இடத்தில் பாரிஸ், 3வது இடத்தில் ஓஸ்லோ, 4வது இடத்தில் ஜூரிச், 5வது இடத்தில் சிட்னி ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை, தலைநகர் டெல்லி போன்றவை எல்லாம் சர்வதேச நாடுகளை பார்க்கும் போது ரொம்பவே செலவு குறைவான நகரங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் மகள் போட்ட கமெண்ட்டால் ரூ. 50 லட்சம் போச்..!



பேஸ்புக் தளத்தில் பள்ளி நிர்வாகம் ஒன்று தன் தந்தைக்கு கொடுக்க இருந்த இழப்பீடுத் தொகை குறித்த விவரத்தை மகள் ஹேப்பியான மூடில் கமெண்டாக பதிவேற்றம் செய்ததன் விளைவால்,அவரின் தந்தைக்கு வரவிருந்த சுமார் ரூ. 50 லட்சத்தை இழந்து விட்டார்..

பேட்ரிக் ஸ்னே (69) என்பவர் ஃப்ளோரிடா மாகாணத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்தார். 2010-ம் ஆண்டில், ஸ்னேவின் வயதைக் காரணம் காட்டி அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முடிவில் ஸ்னேவுக்கு இழப்பீட்டுத் தொகையாக பள்ளி நிர்வாகம் சுமார் ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்று 2011-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாக பள்ளி நிர்வாகமும், ஸ்னேவும் ஒப்பந்தம் மேற்கொண்டனர்.இந்நிலையில் தனது தந்தைக்கு ரூ. 50 லட்சம் இழப்பீட்டுத் தொகை கிடைக்கவுள்ள செய்தியை பேஸ்புக்கில் அவரது மகள் மகிழ்சியாக பதிவேற்றம் செய்திருந்தார். மேலும் இந்த செய்தியை அவரது பேஸ்புக் நண்பர்களில் கிட்டத்தட்ட 1,200 பேர் பகிர்ந்து கொண்டனர். அவ்வாறு பகிர்ந்து கொண்ட செய்தி ஒருவழியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தெரிய வந்தது.

இதையடுத்து “இழப்பீட்டு தொகை தொடர்பான ஒப்பந்தத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டது ஒப்பந்த ஷரத்துகளை மீறும் செயல்’ என்று கூறி பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த நீதிமன்றம் அந்தப் பள்ளியின் வாதத்தை ஏற்றுக் கொண்டது. அதையடுத்து முன்னர் பள்ளி நிர்வாகத்துக்கும், ஸ்னேவுக்கும் இடையேயான இழப்பீட்டுத் தொகை ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது அந்த ஆசிரியர் குடும்பம் உள்ளிட்ட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.