Thursday 6 March 2014

ஹன்சிகாவை வர்ணித்து சிம்பு பாடிய பாடல் நீக்கமா..?



நயன்தாரா வேண்டாம்... ஆண்ட்ரியா வேண்டாம்... என ஹன்சிகாவை பற்றி சிம்பு பாடும் பாடல் நீக்கப்பட்டுவிட்டதா என்பதற்கு பதில் அளித்தார் வாலு பட இயக்குனர். வாலு படத்தில் நடித்தபோது சிம்பு, ஹன்சிகாவுக்கு காதல் மலர்ந்தது.

இதை இருவருமே தங்களது இணைய தள பக்கத்தில் தெரிவித்தனர். இந்த காதலுக்கு ஹன்சிகாவின் அம்மா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். எதிர்ப்பு வலுத்ததையடுத்து சிம்பு, ஹன்சிகாவும் தங்கள் காதலை கைவிடுவதாக சமீபத்தில் அறிவித்தனர்.

அறிவிப்பு வெளியிட்ட அதேதினத்தில் ஐதராபாத்தில் நடந்த வாலு பட ஷூட்டிங்கில் பங்கேற்றனர். காதல் பிரிவு பற்றிய எந்த வருத்தமும் இருவர் முகத்திலும் தெரியவில்லை.

இருவரும் டூயட் சீனில் நடித்தனர். ஹன்சிகாவை நினைத்து, அவரை வர்ணித்து சிம்பு பாட்டு பாடுவதுபோல் ஒரு காட்சி படத்தில் இருந்தது. நயன்தாராவும் வேண்டாம் ஆண்ட்ரியாவும் வேண்டாம் ஹன்சிகாவே போதும் என்று அப்பாடலில் வரிகள் எழுதப்பட்டிருந்தன.

இருவருக்கும் காதல் முறிந்துவிட்டதால் படத்திலிருந்து அப்பாடல் நீக்கப்படுமா? என்றதற்கு இயக்குனர் விஜய் சந்தர் பதில் அளித்தார். அவர் கூறும்போது, இப்பாடல் கதையின் போக்கையொட்டி எழுதப்பட்டது.

இதை நிஜ வாழ்வோடு ஒப்பிடக்கூடாது. தனது  கேர்ள்பிரண்டை நினைத்து ஹீரோ பாடுவதுபோல் இது இடம்பெற்றிருப்பதால் அப்பாடலை நீக்கும் எண்ணம் இல்லை. இருவரும் சேர்ந்து இன்னும் 2 பாடல்களில் நடிக்க வேண்டி உள்ளது என்றார்.

0 comments:

Post a Comment