Monday 10 March 2014

சுதந்திரமாக வெளியாகும் ‘அஞ்சான்’


லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத், விவேக் மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘அஞ்சான்’.


மும்பையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.


இப்படத்தினை வெளியிட இருக்கும் யு.டிவி நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் தளத்தில் ‘அஞ்சான்’ படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் லிங்குசாமியிடம் நீண்ட நேரம் உரையாடினேன்.


 ஆகஸ்ட் 15ம் திகதி ‘அஞ்சான்’ வெளியாகும். பெரிய பட்ஜெட் படம் என்பதால் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறோம்.


மேலும் ‘அஞ்சான்’ படப்பிடிப்பு இன்னும் 30 நாட்களுக்கு மும்பையில் நடைபெறும். அதோடு படத்தின் 80% படப்பிடிப்பு முடிந்து விடும். ஏப்ரல் 14ம் திகதி முதல் மீதமுள்ள படப்பிடிப்பு இருக்கும்.


தமிழ் புத்தாண்டு அன்று அஞ்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். எங்களது அடுத்த வெளியீடான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்துடன் ‘அஞ்சான்’ டீஸரை இணைக்க முயற்சிகள் செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

ரஜினியை நக்கலடித்த தீபிகா படுகோனே...!



கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்துக்காக கோலிவுட்டுக்கு அழைத்து வரப்பட்டவர் தீபிகா படுகோனே.


ஆனால், அந்த படம் கைவிடப்பட்டதால், அதன்பிறகு அவர் கோலிவுட்டுக்கு வர வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்பட்டது.


ஆனால், ராணாவுக்கு ஏற்கனவே அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் இருந்ததால் அவரையே கோச்சடையானுக்கும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டார் செளந்தர்யா.


ஆக, அட்வான்ஸ் என்ற பெயரில் விட்டக்குறை தொட்டக்குறையாக ஒரு உறவு இருந்ததால் கோச்சடையானில் தீபிகா நடிக்க சாத்தியமானது. ஆக, கோலிவுட்டில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகருடன் நடித்து விட்ட பெருமையை பெற்றிருக்கிறார் தீபிகா.


இந்நிலையில, நேற்று கோச்சடையான் ஆடியோ விழாவுக்கு தீபிகா மங்களகரமாக வந்திருந்தார். தலை நிறைய பூ வைத்து புடவை கெட்டப்பில் வந்து அனைவரையும் கவர்ந்த தீபிகாபடுகோனே,


 மேடையில் பேசும்போது, இந்த படத்தில் நான் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். என்றாலும், அவர் என்னை ஒரு மகளைப்போல்தான் பார்த்தார்.


இருப்பினும் ரஜினியின் நாயகி என்ற பெருமையுடன் தமிழக ரசிகர்களை சந்திக்க வருவது எனக்கு பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு தமிழக ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலமை எதிரிக்கும் வரகூடாது.. கண்கலங்கிய ஜெயம்ரவி....!



ஒரு ஹீரோ நடித்த படம் ரிலீஸ் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் போது தான் அவர் எத்தகைய வேதனைக்கு உள்ளாக நேர்கிறது. அப்படி ஒரு நிலையில் தான் ‘நிமிர்ந்து நில்’ படம் ரிலீஸ் சிக்கலில் மாட்டிய போது தான் இருந்ததாக கூறியிருக்கிறார் ஹீரோ ஜெயம்ரவி.

நேற்று ரிலீசாவதாக இருந்த ‘நிமிர்ந்து நில்’ படம் இன்று மாலைக்காட்சி முதல் ரிலீசாகியிருக்கிறது. இது குறித்து ஹீரோ ‘ஜெயம்’ ரவி சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“ஒருத்தரோட சினிமா வாழ்க்கையில, ரொம்ப முக்கியமா நினைக்கிறது படத்தோட ரிலீசும் தான். அந்தப்படம் ரிலீஸ் ஆகலேன்னா அதனால ஏற்படற மன அழுத்தம் எனக்கு மட்டும் இல்லை, யாருக்கு நடந்தாலும் அது ரொம்ப கடினமானது தான்.

இந்த மாதிரி ஒரு கடினமான சூழ்நிலையில, நடப்பது எல்லாமே கஷ்டமாக இருந்தால், அந்த கஷ்டமான நிலையை எதிர்கொள்கிற தைரியம் எனக்குள்ள இருக்கு. இந்த கடினமான சூழ்நிலையிலும் கூட எனக்கு துணையாக இருந்த நண்பர்களுக்கும், டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கும், சக திரையுலக நண்பர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் படத்தோட டைட்டில் ‘நிமிர்ந்து நில்’….மாதிரியே இதோ நாம நிமிர்ந்து நிற்க புறப்பட்டாச்சு…,” இவ்வாறு ஜெயம்ரவி கூறியிருக்கிறார்.

சூப்பர்ஸ்டாருக்கு நா தான் வில்லன்...!



கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்க இருக்கும் படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.


ஏற்கெனவே எந்திரன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரத்தினவேலு இந்த படத்திலும் பணியாற்ற உள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.


அனுஷ்கா நாயகியாக பேசப்பட்டு வரும் நிலையில், அவரால் இப்படத்தில் நடிக்க இயலவில்லை என்றால் பாலிவுட் நடிகையை ஒப்பந்தம் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.


நான் ஈ படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு வந்தவர் கன்னட திரைப்பட நடிகர் சுதீப். தற்போது இந்த படத்திற்கு வில்லனாக சுதீப் நடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரஜினி, ரவிக்குமார் படத்தின் அதிகார பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒரு வேளையை ஒழுங்கா செய்யனும்..இல்லனா இப்படித்தான் நடக்கும்...!



தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்துவரும் ஜி.வி.பிரகாஷ்குமார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளாராம்.


கடந்த 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.


அறிமுகப்படத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்து மிக விரைவில் முன்னணி இசையமைப்பாளராகவும் உயர்ந்தார்.

ஒரு இசையமைப்பாளராக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் தற்பொழுது பென்சில் திரைப்படத்தில் நடித்துவருவதன் மூலம் நடிகராகவும் உருமாறியிருக்கிறார்.


பென்சில் திரைப்படத்தில் நடித்துவரும் இப்பொழுதே நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புக்கள் வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.


தொடர்ந்து நடிப்பில் ஈடுபட்டால் இசையமைப்பில் தனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புக்கள் பாதை மாறிச் சென்றுவிடும் என்பதால் தொடர்ந்து நடிப்பதா அல்லது இசையமைப்பதா என்று ஜி.வி.பிரகாஷ்குமார் குழம்பிவருகிறாராம்.


அதே சமயம் பென்சில் திரைப்படம் வெளியான பிறகே தான் நடிக்கும் அடுத்த படத்திற்குக் கதை கேட்பேன் என்றும் தன்னிடம் கதை கூறவரும் இயக்குனர்களிடம் சொல்லிவருகிறாராம்


விவாகரத்து மனுதாக்கல் செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டியவை..!



1. மனநல ஆலோசகரையோ, குடும்ப நல ஆலோசகரையோ சந்தித்தால் தீர்வு கிடைக்குமா என்று யோசித்தல்.

2. முடிவில் விவாகரத்து அவசியமெனில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்யலாம்.


3. வழக்குக்கான அடிப்படை தஸ்தாவேஜுகள் – அதாவது, திருமண பத்திரிகை, திருமண பதிவு சான்றிதழ், திருமணத்தின் போது எடுத்த புகைப்படம், கணவனும் மனைவியுமாக வாழ்ந்ததற்கான விலாச ஆதாரம், குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ், எதிர்தரப்பினர் செய்யும் தவறினை சுட்டிக்காட்டுவதற்கான ஆதாரங்கள் அனைத்தும் தயாராக உள்ளதா என்று கவனித்தல்.

4. கணவனுக்கோ, மனைவிக்கோ சேரக்கூடிய சொத்துகள், நகை மற்றும் தனிப்பட்ட பொருள்கள், அவருக்குச் சேர வேண்டிய தஸ்தாவேஜுகள், அவருக்குச் சேர வேண்டிய விலையுயர்ந்த ஆபரணங்கள் இருப்பின் அவற்றுக்கான பட்டியல் தயாரிப்பது அவசியம்.

5. விவாகரத்து வழக்கை கையாளும் நல்ல வழக்கறிஞரின் முகவரியை பெற்று அவரிடம் ஆலோசனை பெறுதல்.

- நம் நாட்டில் தன்னிச்சையாக தாக்கல் செய்யப்படும் பெரும்பாலான விவாகரத்து வழக்குகள் நிறைவாக மனமொத்த விவாகரத்து மனுவாக முடிவு பெறும் வாய்ப்புகள் அதிகம். ஒரு நல்ல தாம்பத்ய வாழ்வுக்கு அடிப்படையாக இருக்க வேண்டியது சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து போவது, பரஸ்பர புரிதல், மரியாதை போன்றவை.

எந்த ஒரு தம்பதியும் சிறு சண்டை கூட இல்லாமல் தாம்பத்யம் நடத்துவது கனவிலும் நடைபெறாத ஒன்று. திருமண உறவில் சிறு சிறு பூசல்கள் வரும்போது அவற்றை பெரிய சண்டைகளாக மாற்றி நல்லறமாக இருக்கும் இல்லற வாழ்வை சீர்குலைக்காமல் இருப்பது நலம்.

சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்லும் திருமணங்களை நரகங்களாக்கிக் கொண்டு நீதிமன்ற கதவுகளைத் தட்டுவது போன்ற பேதமை செயல் வேறொன்றும் இல்லை!

வேலைக்கு போகும் பெண்கள், ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்..!



வீட்டையையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் சென்று வரும் இயந்திர கதியான வாழ்க்கை முறை காரணமாக, பெண்களால் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய முயற்சிகள் போன்றவற்றில் சரிவர ஈடுபட முடிவதில்லை. அதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், புலம்பிக் கொண்டே இருப்பதில் ஒரு பயனும் இருக்கப் போவதில்லை.

இவர்கள் தங்கள் வேலை, வீட்டுப் பொறுப்பு போன்றவற்றோடு தங்களது சொந்த ஆரோக்கியத்திற்கும் சற்று கூடுதல் கவனம் மற்றும் அக்கறை எடுத்துக் கொண்டால் ஒழிய நிலைமை மாறப் போவதில்லை. வேலைக்கு போகும் பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய குறிப்புகளை பார்க்கலாம்..

• செல்போன் உரையாடல்களை நடந்தபடியே தொடருங்கள். ‘ஹேன்ட்ஸ்ஃப்ரீ' வசதி இருப்பது இதற்குத்தான். மேலும், மீட்டிங்குகளில் நின்று கொண்டோ அல்லது டைப் பண்ண வேண்டிய தேவை இல்லாத போது நின்றபடி வேலையில் ஈடுபடவோ செய்யலாம். அது உடலை நீண்ட நேரம் ஒரே நிலையில் வைத்திராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

• உங்களுக்கு பொருந்தக்கூடிய சில உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, வாரத்திற்கு இரண்டு முறை 20 நிமிடங்களுக்கு தசை வலுவூட்டும் பயிற்சிகள் சிலவற்றை செய்வது நல்லது அல்லது இடைவேளைப் பயிற்சியாக நடைப்பயிற்சி அல்லது மெது ஓட்டம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவை உடல் ஆரோக்கியத்திற்கும், உடற்கட்டுக்கும் புதுப்பொலிவை அளிக்கும்.

• வேலைக்கு போகும் பெண்களின் ஆரோக்கியத்தை பேணுவதில் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலை உணவில் புதிதான பழ வகைகளை சேர்த்துக் கொள்வது சிறந்தது. இதனால் பழங்களில் உள்ள குளுக்கோஸ் உடலின் இனிப்பு வேட்கையை பூர்த்தி செய்துவிடும். முடிந்த வரை காலை உணவை தவிர்க்க கூடாது.

• உடல் ஆரோக்கியத்திற்கும், சீரான இயக்கத்திற்கும் நீர் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவே அன்றாடம் குறிப்பிட்ட இடைவேளைகளில் நீர் அருந்தும் வழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம். இது உடலில் நீர்ச்சத்து குறைந்து போகாமல் தடுக்கும். மேலும் தினமும் 3 லிட்டா தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம். இதனால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகள் வெளியேறும்.

• மாவுப்பொருள் கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட், இனிப்பு ரொட்டிகள் போன்றவற்றையும், தேன் மற்றும் சாக்லெட்டுகள் போன்றவற்றையும், அதிக அரிசி உணவையும் தவிர்த்திடுங்கள். இவை இரத்த சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்கும் தன்மை கொண்டவை என்பதோடு, இன்சுலின் சுரப்பை தூண்டிவிட்டு, உடலில் கொழுப்பையும் சேர்த்துவிடக்கூடும்.

• பெண்களை பொறுத்தவரையில் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்முறைகள் போதுமானது. எனவே அதிக நேரம் ஜிம்மில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது களைப்பையும், சோர்வையும் ஏற்படுத்திவிடும்.

சிம்பு பிரிந்ததை கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடிய ஹன்சிகா...!



முன்பைவிட இப்போது தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஹன்சிகா.

ஹன்சிகா தற்போது விக்ரமின் ராஸ்கல், ஆர்யாவின் மீகாமன் படங்கள் புக்காகியிருப்பதோடு, அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார்.

இப்படி சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்ட மறுகனமே, ஹன்சிகாவின் கால்சீட் டைரி நிரம்பத் தொடங்கியிருப்பதற்கு முக்கிய காரணமே அவரது தாய்குலம் மோனா மோத்வானிதானாம்.

அதனால்தான், தனது மார்க்கெட் கூடிய சீக்கிரமே கிடுகிடுவென்று உயர்ந்து விடும் என்ற நம்பிக்கை ஹன்சிகாவுக்கு இப்போது வந்துள்ளதாம். அதையடுத்துதான் அவர் முகத்தில் இத்தனை சந்தோசமாம்.

அதனால் காதல் முறிவைப்பற்றி யாராவது துக்கம் விசாரிப்பது போன்று விசாரித்தால், முன்பை விட இப்போதுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று சொல்லி அவர்களின் வாயடைத்து விடுகிறாராம் ஹன்சிகா.

வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி ?



இந்த வருட நிதி ஆண்டு மார்ச் 31ல் முடிகிறது. வருமான வரி பதிவு செய்வதற்கான தருணம் நெருங்கி வருகிறது.

அதனால் இந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.

ஆரம்பத்தில் வருமான வரி கணக்கிடுவது என்பது கடினமாக இருக்கும். இதனால் வருமான வரி பதிவு செய்வதற்கு சில ஏஜெண்ட் மூலம் பதிவு செய்வது வழக்கம். ஆனால் கொஞ்சம் முயன்றால் வருமான வரி தொடர்பான விவரங்கள எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதனால் ஏஜெண்ட் செலவுகளையும் தவிர்க்கலாம். தகுதியான இடங்களில் முதலீடு செய்யவும் முடியும்.

இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் தனி நபர்களுக்கும், பிரிக்கப்படாத இந்து குடும்பங்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது.

இதில் அலுவலகத்தில் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி சம்பளத்தின் போதே TDS (Tax Deducted at Source) என்ற முறையில் பிடிக்கப்படுகிறது. இதற்கு கணக்கீட ஏதுவாக வருட ஆரம்பத்திலே IT declaration என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும். அதன் படி மாத சம்பளத்தில் பிடித்து வருவார்கள்.

உலகில் பல நாடுகளில் வரி விதிப்பு ப்ளாட்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது வருகிற வருமானத்தில் 10% அல்லது 15% என்று பிடித்து விடுவார்கள். ஆனால் இந்தியாவில் slab system என்பது நடைமுறையில் உள்ளது. இது ஒரு நல்ல அணுகுமுறை. அதாவது அதிக வருமானம் வருபவர்களுக்கு அதிக சதவீத வரியும் அதற்கடுத்த நிலைகளில் குறைந்த சதவீதமும் வரியாக செலுத்த வேண்டும்.

தற்போதைய நிலையில் கீழே உள்ள வரம்பு நிலைகள் வருமான வரிக்காக கடைபிடிக்கப்படுகிறது.

~ முதல் இரண்டு லட்சத்துக்கு வரி ஏதும் கிடையாது

~ இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை 10% வரி செலுத்த வேண்டும்.

~ ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை 20% வரி செலுத்த வேண்டும்

~ பத்து லட்சத்துக்கு மேல் 30% வரி செலுத்த வேண்டும்
இந்த வரி வரம்பானது வீட்டு வாடகை, அனுமதிக்கப்பட்ட முதலீடுகள், வீட்டுக் கடன்கள் மற்றும் சில விலக்குகளைத் தவிர்த்துக் கணக்கிட வேண்டும்.

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

கணேசன் என்பவர் வருடத்திற்கு 12 லட்சம் சம்பளம் பெறுகிறார். அதில் அவரது வீடு வாடகை மாதம் 8000 ரூபாய், அவர் 80C விதியில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்கிறார். அப்படி என்றால் அவரது வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?

வருட வருமானம் - 12,00,000

வரி விலக்குகள்:
வீடு வாடகை - 96,000 (12*8000)
80c முதலீடு - 1,00,000

மொத்தம் - 1,96,000

நிகர வரி வருமானம் = வருட வருமானம் - வரி விலக்கு
நிகர வரி வருமானம் = 12,00,000 - 1,96,000 = 10,04,000

இந்த நிகர வரி வருமானம் 10,04,000 என்பதை 2,00,000 + 3,00,000 + 5,00,000 + 4,000 என்று பிரித்துக் கொள்ளுங்கள்
இதனை வரி வரம்பின் படி கணக்கிட்டால்,

~ முதல் இரண்டு லட்சத்துக்கு வரி கிடையாது ..அப்படி என்றால் 2,00,000 தொகைக்கு 0 ரூபாய்

~ 2 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி...அப்படி என்றால் 3,00,000 தொகைக்கு 30,000 ரூபாய்

~ 5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி...அப்படி என்றால் 5,00,000 தொகைக்கு 1,00,000 ரூபாய்

~ 10 லட்சத்துக்கு மேல் 30% வரி...அப்படி என்றால் 4,000 தொகைக்கு 1200 ரூபாய்
ஆக மொத்த வருமான வரி = 0 + 30,000 + 1,00,000 + 1200 = 1,31,200

அதாவது கணேசன் இந்த வருடம் மொத்தம் 1,31,200 ரூபாய் வருமான வரியாக செலுத்த வேண்டும்.

மேலே உள்ள வருமான வரி வரம்பானது பெண்கள், வயதானவர்களுக்கு சிறிது சலுகைகளுடன் மாறுபடும்.

வரியே இல்லாவிட்டாலும் வருமான வரி சான்றிதழ் பெறுவது நல்லது. ஏனென்றால் வங்கிக்கடன் மற்றும் வெளிநாடு செல்லும் போது அதிகம் தேவைப்படும்.