Monday 10 March 2014

இந்த நிலமை எதிரிக்கும் வரகூடாது.. கண்கலங்கிய ஜெயம்ரவி....!



ஒரு ஹீரோ நடித்த படம் ரிலீஸ் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் போது தான் அவர் எத்தகைய வேதனைக்கு உள்ளாக நேர்கிறது. அப்படி ஒரு நிலையில் தான் ‘நிமிர்ந்து நில்’ படம் ரிலீஸ் சிக்கலில் மாட்டிய போது தான் இருந்ததாக கூறியிருக்கிறார் ஹீரோ ஜெயம்ரவி.

நேற்று ரிலீசாவதாக இருந்த ‘நிமிர்ந்து நில்’ படம் இன்று மாலைக்காட்சி முதல் ரிலீசாகியிருக்கிறது. இது குறித்து ஹீரோ ‘ஜெயம்’ ரவி சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“ஒருத்தரோட சினிமா வாழ்க்கையில, ரொம்ப முக்கியமா நினைக்கிறது படத்தோட ரிலீசும் தான். அந்தப்படம் ரிலீஸ் ஆகலேன்னா அதனால ஏற்படற மன அழுத்தம் எனக்கு மட்டும் இல்லை, யாருக்கு நடந்தாலும் அது ரொம்ப கடினமானது தான்.

இந்த மாதிரி ஒரு கடினமான சூழ்நிலையில, நடப்பது எல்லாமே கஷ்டமாக இருந்தால், அந்த கஷ்டமான நிலையை எதிர்கொள்கிற தைரியம் எனக்குள்ள இருக்கு. இந்த கடினமான சூழ்நிலையிலும் கூட எனக்கு துணையாக இருந்த நண்பர்களுக்கும், டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கும், சக திரையுலக நண்பர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் படத்தோட டைட்டில் ‘நிமிர்ந்து நில்’….மாதிரியே இதோ நாம நிமிர்ந்து நிற்க புறப்பட்டாச்சு…,” இவ்வாறு ஜெயம்ரவி கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment