Sunday 16 March 2014

ஹிப்னாடிஸம் உங்களுக்கும் உதவலாம்...! - இதைப்படிங்க...



நண்பன் ஒருவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.
ஹிப்னாடிஸம்,மெஸ்மரிசம் என்று நிறைய புத்தகங்கள் வைத்திருப்பான். அதில் அவனுக்கு பெரும் ஆர்வம்.யாரை வசியம் செய்வதற்கு என்று தெரியவில்லை.அவன் வசியம் செய்ய கற்றுக்கொண்டானா என்பது தெரியவில்லை.ஒரு பெண் அவனை வசியம் செய்து இழுத்த இழுப்புக்கு ஓடிக்கொண்டிருந்தான்.கடைசியில் அதேபெண்ணை திருமணம் செய்ய வேண்டிய கஷ்டமும் நேர்ந்த்து.

                            புத்தகம் படித்தெல்லாம் கற்றுக்கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்பதே உண்மை.சரி ஹிப்னாடிஸம் என்றால் என்ன? தூக்கம் போன்ற நிலையில் ஒரு நிபுணருக்கு கட்டுப்பட்டு இருக்கும் நிலை.மன நல சிகிச்சைகளில் அபூர்வமாக பயன்படுத்தப்படுவது.

                             உண்மையில் இது மிகப்பழமையான விஷயம்.மேஜிக்,மாய வித்தை போன்றவை எல்லாம் இதற்கு முன்னோடிகள்.பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்பவரால் புகழ் பெற்றது.புகழ்பெற்ற உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்ட் ஆழ் மனதை வெளிக்கொணர இம்முறையை பயன்படுத்தினார்.

                              ஹிப்னாடிஸம் சிகிச்சை முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அறிதுயிலில் ஆழ்த்தவும்,தேவையற்ற,விரும்பாத சில பழக்க வழக்கங்களை மாற்றவும்,ஆழ் மனதில் அமுக்கப்பட்ட நினைவுகளை வெளிக்கொணரவும் இது பெருமளவில் உதவுகிறது.தாழ்வு மனப்பான்மை ,பதட்டம் போன்ற சிக்கல்களுக்கும் நல்ல தீர்வு கிடைக்கலாம்.

                               பொதுவாக கதைகளில் காணப்படுவது போன்றோ,சினிமாவில் காட்டப்படுவது போன்றோ யாரையும் கட்டாயப்படுத்தி வசியம் செய்வது சாத்தியமில்லை என்பதே உண்மை.சிகிச்சைக்கு உட்படுபவர் முழுமையாக ஒத்துழைக்கவேண்டும்.அதே போல கட்டாயப்படுத்தி தவறான எண்ணங்களையும் விதைக்க முடியாது.

                               உதாரணமாக சிறு வயதில் ஏற்பட்ட சம்பவத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பார்.இப்போது நடைமுறை வாழ்க்கையில் அது பிரச்சினையாக இருக்கும்.அதெல்லாம் வசியத்தில் வெளிக்கொண்டு வரலாம்.அதே சமயம் வெளியே சொல்ல நினைக்கும் விஷயம் மட்டுமே வெளிவரும்.எல்லா ரகசியத்தையும் வெளியே கொட்டிவிட மாட்டார்கள்.

                                சுய வசியத்தின்(self hypnosis) மூலம் அனைவரும் பயன் பெற முடியும்.உங்களுக்கு நீங்களே சில கட்டளைகளை மனதிற்கு கொடுப்பது மூலம் நீங்கள் விரும்புவதை அடையலாம்.சாதனை செய்யலாம்.

அமைதியான சூழலில் உடலை தளர்வாக வைத்துக்கொண்டு “நான் தொழிலதிபர் ஆவேன்” என்று மனதிற்கு சொல்லிக்கொண்டு வந்தால் ஒரு நாள் ஆகிவிடுவதும் சாத்தியமே!

நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அப்படி ஆவீர்கள் என்பார்களே அதுதான்.ஆழ்மனதில் கட்டளைகள் ஆழமாக பதிந்து போனால் அது செயல்பட ஆரம்பித்துவிடும்.இதற்கெல்லாம் உரிய நிபுணர் உதவி இருந்தால்தான் நல்லது.


லிப் லாக் காட்சிகளில் நடிப்பதில் எனக்கு ஒன்றும் கவலை இல்லை..!



குடும்பப்பாங்கான நடிகையாக அடையாளம் காணப்பட்ட தான் ‘நான் சிகப்பு மனிதன்' படத்தில் விஷாலுடன் லிப் லாக் காட்சியில் நடித்தது, கதைக்கு தேவைப்பட்டதால் தான் என விளக்கமளித்துள்ளார் லட்சுமிமேனன்.

கும்கி, குட்டி புலி, சுந்தரபாண்டியன்,பாண்டிய நாடு என லட்சுமிமேனன் நடிப்பில் வெளி வந்தது என்னவோ நான்கே படங்கள் தான். ஆனால், அதற்குள் ரசிகர்கள் அவரை முன்னணி நடிகைகளுள் ஒருவராக்கி விட்டனர்.

தற்போது நான் சிகப்பு மனிதன் படத்தில் மீண்டும் விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார் லட்சுமிமேனன். இப்படத்தில் விஷாலுடன் லிப்லாக் காட்சியில் நடித்தது பற்றியும், தனது அனுபவங்களை செய்தியாளார்களுடன் பகிர்ந்து கொண்டார் லட்சுமிமேனன். அப்போது அவர் கூறியதாவது :-

நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் உதட்டுடன் உதடு முத்தம் கொடுப்பது போன்று காட்சி படமாக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் திரு சார் இந்த காட்சி படத்தின் கதைக்கு மிகவும் தேவைபடுவதால் அவசியம் நடிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

நானும் தொழில்முறையில் தான் இதை ஏற்றுக்கொண்டேன்.அதனால் எந்த பிரச்சனையும் இல்லை நான் இது போன்ற காட்சிகளில் நடிப்பது பற்றி எனக்கு ஒன்றும் கவலை இல்லை.

சுந்தரபாண்டியன், குட்டிபுலி பாண்டிய நாடு போன்ற திரைபடங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. என் வாழ்வில் இது ஒரு முக்கிய பகுதியாகும்.

திரை உலகில் நேர்மறையான எதிர்மறையான கருத்துகள் வந்து கொண்டுதான் இருக்கும்.இது போன்ற கருத்துகளை நாம் எடுத்துகொள்ள கூடாது எல்லாம் பாசிடிவ்வாக எடுத்துகொண்டால் நல்லது.

படபிடிப்பில் சில வேடிக்கையான விஷயங்கள் கூட நடந்து இருக்கிறது.கும்பகோணம் படபிடிப்பில் இருந்தபோது தமிழ் ரசிகர்கள் என்னை பார்த்து ஆரவாரம் செயதனர் சிலர் என்னிடம் வந்து கைகுலுக்கி தங்களது மகிச்சியை தெரிவித்தனர்.

சென்னையில் நான் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த போது பொறியாளர் ஒருவர் வந்து நான் தீவிர ரசிகன் என்னுடைய வீட்டில் உங்களது போட்டவை தான் மாற்றி வைத்துள்ளேன் என்று கூறினார் என்னுடைய செல்போனிலில் கூட உங்களது புகைபடத்தைத் தான் வைத்து உள்ளேன் என்று கூறினார்.

இதை பார்த்த நான் வியந்துபோனேன்.எனக்கு இவ்வளவு ரசிகர்களா என பார்த்து மெய்சிலிர்த்து போனேன்.

நான் தமிழ் படங்களில் நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் இது ஒரு வெற்றியாக கருதுகிறேன் இது போன்ற ரசிகர்கள் எனக்கு கிடைத்துள்ளதால் நான் தற்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்' என இவ்வாறு லட்சுமிமேனன் தெரிவித்துள்ளார்.

மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள் - கட்டாயம் படிக்கவும்..!



இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு (தனி ஈழம்) கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும் போராடி வந்தார்கள். உண்மையிலேயே இலங்கை யாருக்குச் சொந்தமானது..?!

சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள்.

வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேட்கிறார்கள். சிங்களவர்களின் கோவம் நியாந்தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேட்கலாமா? இது சரியா? தவறா என்பது தான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல் பிரச்சனையாக இருக்கின்றது.

கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டிப் பார்த்தால்
இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர்.

 இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன.

இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது.

தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர்.

இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. தமிழர்கள் பூர்வ குடி மக்கள்... என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார்

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா? என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிட தக்கது . 

புத்த பெருமானின் அனுபவ மொழிகள் - உங்களுக்காக...!



* போர்க்களத்தில் வெற்றி பெற்ற வீரனைக் காட்டிலும் தன்னைத் தானே வென்றவனே சிறந்த வீரன்.

* வாழ்வில் அறநெறிகளை கடைப்பிடியுங்கள். இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை அடைய இதுவே வழி.

* அறிஞனோடு வாழ்ந்தாலும், முட்டாளால் அறிவைப் பெற முடியாது. குழம்பின் ருசியை ஒருபோதும் கரண்டியால் அறிய முடிவதில்லை.

* உண்மையைப் பேசுங்கள். கோபத்தை தவிர்க்க முயலுங்கள். கையில் இருப்பதைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

* நரை, திரை தோன்றினால் மட்டும் ஒருவர் பெரியவர் ஆக முடியாது. அறிவால் முதிர்ந்திருப்பவரே உண்மையில் பெரியவர்.

* பிரார்த்தனைகளுக்குள் மிகவும் உயர்ந்தது பொறுமையே. அதுவே மேலான தவம்.

* பிறருக்குத் தீங்கு நினைப்பவனைத் துறவி என்று சொல்ல முடியாது.

* மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதி விலக்கு அல்ல.

சூப்பர் ஸ்டாருக்கு நான் வில்லனா..? யாருமே இதுவரை கூப்பிடளங்க..!



ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வரவில்லை என்றார் சுதீப். ‘நான் ஈ‘ படத்தில் நடித்தவர் சுதீப். தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக சுதீப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

 இதுகுறித்து சுதீப் கூறியதாவது: டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் புதிய ஸ்கிரிப்டுடன் என்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகியது உண்மைதான்.

 நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு முன்பே ரஜினியை வைத்து படம் இயக்க ரவிகுமார் முடிவு செய்துள்ளார்.

 ரஜினியின் உடல்நலன் கருதி நான் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு முன்பாகவே ரஜினி படத்தை தொடங்க உள்ளதாக கூறினார்.

 ஓ.கே சொல்லிவிட்டேன். இப்படத்தில் நான் ரஜினியின் வில்லனாக நடிக்க உள்ளதாக என்னுடைய பெயர் இணைய தளங்களில் வெளியான வண்ணம் உள்ளது.

ஆனால் ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று இதுவரை யாரும் என்னிடம் கேட்கவில்லை.

ரவிகுமாருடன் எனது பட ஷூட்டிங் மே அல்லது ஜூனில் தொடங்கும். முன்னதாக ரஜினி படத்தை தொடங்குகிறார் ரவிகுமார்.

 இவ்வாறு சுதீப் கூறினார் 

தனுஷை பழிக்கு பழி வாங்கிய ஹீரோயின்..!



காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் தற்போது வாயை மூடி பேசவும் என்ற படத்தை எடுத்துமுடித்துவிட்டார்.

அடுத்ததாக ஒரு ஜாலியான காதல் கதை ஒன்றை தயார் செய்து தனுஷிடம் சென்று கதையை சொல்லி கால்ஷிட் கேட்டுள்ளார்.

கதையை கேட்டதும் மிகவும் ஆர்வமான தனுஷ், இதுமாதிரியான கதையைத்தான் நான் தேடிக்கொண்டிருக்கிறேன். திரைக்கதையை தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் மிகவும் குஷியான பாலாஜி மோகன் தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக இருக்கின்றார்.

இந்நிலையில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை அணுகியிருக்கிறார் பாலாஜி மோகன்.

கதையையும், ஹீரோவையும் கேட்ட காஜல் அகர்வால் தன்னுடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது. ஆனால் தனுஷுக்கு ஜோடியாக நான் நடித்தால் கெமிஸ்ட்ரி செட் ஆகாது.

தனுஷையும் என்னையும் அருகில் வைத்து பார்த்தால் தனுஷ் என் தம்பி மாதிரி இருபார். அதனால் ஹீரோவை மாற்றிவிடுங்கள். அப்படி மாற்றினால் கண்டிபாக இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது காஜல் அகர்வால்தான் என்றும் திடீரென அப்போது காஜலை அந்த படத்தில் இருந்து தூக்கிவிட்டதற்கு தனுஷ்தான் காரணம் என்று சொல்லப்பட்டது.

அதற்கு பழிவாங்கவே இவ்வாறு சொன்னாரா காஜல் அகர்வால்..?

இதனால் அதிர்ச்சி அடைந்த பாலாஜி மோகன் செய்வதறியாது திகைத்து உள்ளார்.

 தனுஷ் அல்லது காஜல் இவர்களில் யாரையாவது ஒருவரை மட்டும் ஏற்றுக்கொண்டு இன்னொருவரை படத்தில் இருந்து நீக்கவேண்டும்.

 என்ன செய்யப்போகிறார் பாலாஜி மோகன் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நம்ம கவுண்டரின் கலகலப்பான பேட்டி - உங்களுக்காக...!



பேட்டி’ என்றாலே விலகிச்செல்லும் அல்லது விரட்டிவிடும் நம்ம கவுண்டரேதான். ”ஒரு ஃப்ரெண்டா வா… ரசிகனா வா… எவ்வளவு நேரம் வேணும்னாலும் எது வேணும்னாலும் பேசலாம். ஆனா, பத்திரிகைக்காரனா வராத!” என்று அன்பாக அதட்டும் அதே கவுண்டமணி. ‘இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கிறது’ முதல் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ வரை சாகாவரம் பெற்ற பன்ச்களின் நாயகன் இதோ என் முன் அமர்ந்திருக்கிறார்.

பல மாதத் துரத்தல், வற்புறுத்தல், ஏகப்பட்ட உரையாடல்களுக்குப் பிறகு நிகழ்ந்த பேட்டி இது. அரியலூர் அருகே அங்கராயநல்லூர் கிராமத்தின் ’49ஓ’ படத்தின் படப்பிடிப்பு இடைவேளைகளில் கவுண்டமணியிடம் பேசியது அப்படியே இங்கே…

”தம்பி… பேட்டினு உக்காந்துட்டேன். ஆனா, நீ பாட்டுக்குக் கேள்வி கேட்டுட்டே இருந்தா எனக்குப் பிடிக்காது. நானா மனசுல தோணுறதைச் சொல்றேன். நீ குறிச்சுக்க. அதுல குறுக்குக் கேள்விலாம் கேட்டா, நான் எனி செகண்டு எந்திரிச்சுப் போயிடுவேன் ஓ.கே-வா!” – அவரின் அதே அக்மார்க் அதட்டல்!

”ரொம்ப வருஷம் கழிச்சு நடிக்கிறீங்க. இந்தக் கதையை எப்படி…” (கேள்வியை முடிக்கவிடாமல்)

”பார்த்தியா… பத்திரிகைகாரன் வேலையைக் காட்டுற. ரொம்ப வருஷம் கழிச்சுலாம் இல்லைப்பா. ரெண்டு, மூணு வருஷம் இருக்கும். அவ்ளோதான்! இது ஒரு சின்ன கேப். இதுக்கே, ‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு’னு நீட்டி முழக்கி பில்ட்-அப் குடுத்துருவீங்களே! ஏதோ 14 வருஷம் ராமர் வனவாசம் போன மாதிரி ஃபீல் பண்ணாதீங்க.

2010-ல ‘ஜக்குபாய்’, ‘பொள்ளாச்சி மாப்ள’னு நான் நடிச்ச படங்கள் ரிலீஸ் ஆச்சு. இப்போ ’49ஓ’ல நடிக்கிறேன். ஒரு நடிகன்னு இருந்தா நடுவுல திடீர்னு கொஞ்சம் கேப் விடுவான். பிறகு, சரசரனு நடிப்பான். அவ்வளவுதான். இதை ஏதோ உலக கின்னஸ் சாதனை கணக்கா விளக்கம் கேட்டுக்கிட்டு இருக்கிறதா?

அப்புறம் இந்தப் படத்துல நடிக்கணும்னு ஏன் முடிவெடுத்தேன்னு கேக்க வந்தீங்கள்ல! இந்தப் பட டைரக்டர் தம்பி ஆரோக்கியதாஸ் விடாமத் துரத்தித் துரத்திக் கதை சொன்னார். ‘உங்களை மனசுல வெச்சுதான் எழுதினேன்’னு சொல்லி ஒவ்வொரு சீனையும் விளக்கினார். பன்ச், காமெடி, டயலாக் டெலிவரினு யோசிச்சா, எனக்கும் அப்படித்தான் தோணுச்சு. அதுவும்போக படத்தோட சப்ஜெக்ட் விவசாயம். இப்பவும் நமக்குள்ள ஒரு விவசாயி ஒளிஞ்சிட்டு இருக்கான். அதான் உடனே நடிக்கச் சம்மதிச்சுட்டேன்!”

”ரீ-என்ட்ரில காமெடி ஸ்கோப் உள்ள படம் நடிப்பீங்கனு நினைச்சா, விவசாயம்னு எதிர்பார்க்காத கோல் அடிக்கிறீங்களே?”

”நல்லா இருந்துச்சேனு போன தீபாவளிக்கு பண்ண அதிரசத்தை இன்னைக்குத் திங்க முடியுமா? அப்போ பண்ணது நல்லா இருந்தா, அதை ரசிச்சுக்கலாம். அதே மாதிரி திரும்ப நடிக்கணும்னு என்ன கட்டாயம்?

’49ஓ’ படத்துல விவசாயம்தான் கதை. கதிர் அறுக்கலாம்னு நினைச்சா, மழை பெஞ்சி கெடுத்திருக்கும். நடவு நடலாம்னு நினைச்சா, வெயில் காய்ஞ்சு கெடுத்திருக்கும். வட்டிக்கு மேல வட்டி வாங்கிப் போட்ட காசை கடைசிவரைக்கும் எடுக்க முடியாமப்போனாலும், அவன் விவசாயத்தை விட மாட்டேங்கிறான். ஏன்? என்னைக்காவது நல்லது நடக்கும்னு காத்திருக்கான். ஆனா, நல்லது நடக்கிற சூழ்நிலையா இங்கே இருக்கு?” என்று நிறுத்திவிட்டு இளநீர் ஒன்றை வாங்கி அண்ணாந்து குடிக்கிறார்.

சட்டென்று பாதியில் நிறுத்திவிட்டு, ”ஏய்ய்… இரப்பா! நான் சொன்னதை வெச்சு அரசாங்கத்தைக் குத்தம் சொல்ற படம்னு வம்பு கொளுத்திப்போட்டுராதீங்க. இயற்கை விவசாயத் துக்கு ஆதரவா நிறைய விஷயம் பேசும் படம். மத்தபடி அரசையோ, அரசியல்வாதியையோ குத்தம் சொல்றது கதையோட நோக்கம் கிடையாது. இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்குப் படத்துல மரியாதை பண்ணியிருக்கோம்!”

”நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் ’49ஓ’-னு தலைப்பு வெச்சு, ‘யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை’னு சொல்றீங்களா?”

”பார்த்தியா… மறுபடி மறுபடி பத்திரிகைக்காரன் வேலையைக் காட்டுற! இதை ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கணும்? இந்தக் கேள்வியில இருந்து தப்பிக்கணுமேனு இதைச் சொல்லலை. விவசாயம் பாதிக்கப்படுறது மட்டும்தான் படத்தோட மையம். அதுல நிறைய காமெடியும் கொஞ்சம் சென்ட்டிமென்ட்டும் சேர்த்திருக்கோம். அவ்வளவுதான். கொஞ்சம் வெயிட் பண்ணு… நான் ஒரு ஷாட் நடிச்சுட்டு வர்றேன்” என்று எழுந்து செல்கிறார்.

தான் தேர்தலில் நிற்கவைக்கும் சுயேட்சை வேட்பாளருக்காக சங்கு சின்னத்தில் கவுண்டமணி ஆதரவு திரட்டுவது போன்ற காட்சி. அப்போது குவியும் பத்திரிகையாளர்களிடம் சரமாரியாகப் பேட்டி அளிக்கிறார் கவுண்டர். அந்தக் காட்சி நான்கைந்து டேக்குகள் கடக்க, வேடிக்கை பார்க்கும் கூட்டத்தைப் பார்த்து, ”பார்த்தீங்களா… இப்படித்தான் ஒரே சீனை நாள் பூரா எடுத்துட்டு இருப்போம். இப்பவே பார்த்துப் போரடிச்சுட்டா, அப்புறம் படம் பார்க்க வர மாட்டீங்க. கிளம்புங்க… கிளம்புங்க” என்று கவுண்டமணி செல்லமாக அதட்ட, ‘அட… சினிமால இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று ‘கவுன்டர்’ கொடுக்கிறது கூட்டம்.

”ஏ ஆத்தி… எமகாதப் பயலுகளா இருக்கானுங்கப்பு!” என்று சிரித்துக்கொள்கிறார் கவுண்டமணி.

”நீங்க ஹீரோ மாதிரி படம் முழுக்க வருவீங்களா?”

”மாதிரி என்ன மாதிரி… ஹீரோவே நான்தான்! ஆனா, தொடர்ந்து இப்படியே நடிப்பேன்னு சொல்ல முடியாது. இந்தப் படத்தோட கதைக்கு நான் ஹீரோ. அவ்வளவுதான்!”

”ஒருத்தருக்குப் பட்டப் பேர் வெச்சுக் கலாய்ச்சு காமெடி பண்ணி, கிண்டல் அடிக்கிற உங்க ஸ்டைலைத்தான் இப்போ எல்லாருமே காப்பி அடிக்கிறாங்க!”

”பண்ணிட்டுப் போகட்டுமே! ‘நான் மட்டும்தான் மத்தவங்களைக் கிண்டல் அடிப்பேன்’னு உரிமை வாங்கி வெச்சிருக்கேனா என்ன? எல்லாரும் எல்லாரையும் கலாய்க்கட்டும்!”

” ‘ஜூனியர் கவுண்டர்’னு பேர் வாங்கிட்டார் சந்தானம். ‘கவுண்டரைச் சந்திப்பது உண்டு’னு அவர் பேட்டிகள்ல சொல்லிட்டு வர்றார்!”

”உண்டுனு சொன்னார்னா உண்டுனு போட்டுக்கங்க. அவர் என்ன பொய்யா சொல்லப்போறார்?”

”வடிவேலு, சந்தானத்தைச் சந்திச்சா என்ன பேசிப்பீங்க?”

”எல்லா நடிகர்களுமே நமக்கு ஃப்ரெண்டுதான். அதனால அப்பப்ப எப்பயாச்சும் போன்ல பேசிப்போம். அதுல விசேஷமா சொல்ல என்ன இருக்கு?”

”எண்பதுகளில் மணிவண்ணன், சத்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன்னு ஒரு டீம்ல வேலை பார்த்ததுக்கும், இப்போ இளைய தலைமுறை இயக்குநர்களோட வேலை பார்க்கிறதுக்கும் என்ன வித்தியாசம்?”

”எல்லாமே சினிமாதானே. எல்லா படத்தையும் தியேட்டர்லதானே போடுறாங்க. அப்புறம் என்ன வித்தியாசம் இருந்துடப்போகுது. நான் எப்பவும் வசனங்களை ஸ்பாட்லகூட இம்ப்ரூவ் பண்ணுவேன். பேப்பர்ல இருக்கிறதைவிட சமயங்கள்ல ஸ்பாட்ல பளிச்னு ஏதாவது தோணும். அதைச் சேர்த்துக்குவோம். அந்தச் சுதந்திரம் இப்பவும் இருக்கு!”

”சமீபத்துல பார்த்ததுல என்ன படம்லாம் பிடிச்சது?”

”உண்மையைச் சொல்றேனே… தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம்னு எந்த இந்திய மொழிப் படங்களையும் பார்க்கிறதே இல்லை. படம் பார்க்கணும்னு நினைச்சா ஹாலிவுட் படங்கள்தான் பார்ப்பேன்!”

”தமிழ் படங்களைக்கூட பார்க்காம இருக்க என்ன காரணம்?”

”நான் ஏன் பார்க்கணும்னு நீங்க காரணம் சொல்லுங்க. நான் ஏன் பார்க்கிறதில்லைனு அப்புறம் பதில் சொல்றேன்!”

”நீங்க நடிச்ச படங்களைக்கூட பார்க்க மாட்டீங்களா?”

”பார்க்க மாட்டேன்! நாம பேட்டி கொடுத்தாலும் கொடுக்காட்டியும் நம்ம படங்கள் டி.வி-ல ஓடுது. காமெடி சேனல்லயும் அதுதான் ஓடுது. அதைத் தாண்டி நான் பேட்டில என்னத்தைச் சொல்லிடப்போறேன். ஒரு நடிகர் சும்மா இருக்கார்னா சும்மா இருக்கார்னு எழுதிடுவீங்க. நடிக்கிறார்னா நடிக்கிறார்னு எழுதிடுவீங்க. இப்படி நீங்களே எல்லாத்தையும் எழுதின பிறகு, தனியா நான் எதுக்குப் பேசணும்? இப்பவே ரொம்ப பேசிட்டேன்னு நினைக்கிறேன். போதும்!”

சொகுசு பங்களாவில் ஜோவின் அக்கா வி.ஐ.பிக்களுடன் விபரீத ஆசையில்...!



பாட்ஷா, காதலன், சிட்டிசன், வில்லாதி வில்லன், போன்ற பல படங்களில் நடித்த நடிகை நக்மா தீவிர அரசியலில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.


காங்கிரஸ் கட்சியின் மூலம் தனது சேவையை செய்து வரும் நக்மா, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பு கேட்டிருந்தார். நேற்று வெளியிட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பட்டியலில் நக்மாவுக்கு மீரட் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.


நக்மா காங்கிரஸ் தலைமையிடம் ராஞ்சி தொகுதியைத்தான் கேட்டிருந்தார். ராஞ்சி தொகுதியில் தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளபடியால் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று அந்த தொகுதியை குறிவைத்திருந்தார்.


ஆனால் காங்கிரஸ் தலைமை அவருக்கு மீரட் தொகுதியை அளித்துள்ளது.


மீரட் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு குறைவாக இருந்த போதிலும் நக்மா தனது அதிரடி பிரச்சாரத்தின் மூலம் தொகுதியை கைப்பற்றிவிடுவார் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.



 நக்மா பிரச்சார வேலையை இப்பொழுதே ஆரம்பித்துவிட்டாரம். மீரட் நகரில் ஒரு சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்துள்ளாராம்.


 அந்த பங்களாவிற்கு நகரத்தில் உள்ள முக்கிய வி.ஐ.பிக்களை அழைத்து தேர்தலில் வெற்றி பெறும் வியூகங்கள் குறித்து டிஸ்கஸ் செய்கிறாராம்.


 அவருடன் டிஸ்கஸ் செய்ய தினந்தோறும் முக்கிய வி.ஐ.பிக்கள் அவருடைய பங்களாவை நோக்கி படையெடுத்தவண்ணம் இருக்கின்றார்கள். இந்த டிஸ்கஷன் எந்த அளவுக்கு பயன் கொடுக்கும் என்பதை தேர்தல் முடிவின்போதுதான் தெரியும்.

அஞ்சலியின் திருமணம் - திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின...!



சித்தி பாரதிதேவியுடன் பிரச்சனை ஏற்பட்டு ஆந்திராவில் செட்டிலான அஞ்சலி இப்போது எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லையாம். இதனால் அவர் எங்கே போனார் என்பது மர்மமாகவே உள்ளது.

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அஞ்சலி திடீரென்று ஒருநாள் தனது சித்தி பாரதிதேவி கொடுமைப்படுத்துவதாக பரபரப்பு புகார் கூறினார். உடனே தனது சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு எஸ்கேப் ஆனார்.

சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஹைதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஹைதராபாத்திலேயே தங்கி இருந்தார். முன்பு போல் பட வாய்ப்புகளும் கிடைக்காததால் நடிக்காமல் இருந்தார். அவர் கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு மசாலா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

அவர் உடல் எடை கூடிப்போய் விட்டதால் தொடர்ந்து நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும் சொன்னார்கள். மேலும் தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின.

இந்த நிலையில் சமீபகாலமாக அஞ்சலியை ஹைதராபாத்திலும் காணவில்லை. மீண்டும் அவர் மாயமாகி விட்டதாக செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன.

அவருடைய இரண்டு மொபைல் போன்களுக்கு தொடர்பு கொண்டால் எப்போதும் பார்த்தாலும் அது சுவிட்ஸ்-ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. இதனால் தெலுங்கு திரையுலகினர் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள்.

ஆனால் அஞ்சலிக்கு ஹைதராபாத்தில் இருக்க பிடிக்கவில்லை என்றும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம் மேற்படி தகவல்கள் எதுவுமே நம்பும்படியான தகவல்களாக இல்லாததால் அஞ்சலியை தேடித்திரியும் அவரது நெருங்கிய நண்பர்கள் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள்

எவர்கிரீன் உலகநாயகனின் 'குணா' - திரை விமர்சனம்



ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன், எப்போதும் அபிராமி அந்தாதியை பாடிக்கொண்டே இருக்கிறான். காரணம் கேட்டால் 'அபிராமி' என்று வானத்தை நோக்கி கை காட்டுகிறான். தன்னை காக்கவும், தன்னோடு வாழவும் அபிராமி வருவாள் என்று நம்புகிறான்.

அதே போல ஒரு பெண்ணை கோவிலில் சந்திக்கிறான். அவள் தான் 'அபிராமி' என்று நினைத்து, சந்தர்ப்பவசத்தால் அந்த பெண்ணை கடத்திக் கொண்டு போய் ஒரு மலை உச்சியில் தங்க வைக்கிறான். அந்தப்பெண் இவனை வெறுத்தாலும், பின்னர் இவன் தன் மேல் வைத்திருக்கும் ஒரு பக்தி கலந்த காதலை புரிந்து இவளும் இவனை காதலிக்கிறாள். இவர்கள் வாழ்வில் ஒன்று சேர்ந்தார்களா? என்ன தான் ஆனது கடைசியில்? என்பதே இந்த படம்.

படத்தின் ஆரம்ப காட்சியில் கமலின் அறிமுகமே வித்தியாசமாக இருக்கும். ஒரு பெரிய பாறையின் மீது ஒற்றைக் காலில் நின்று கொண்டிருப்பார். ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் என்றாலும், 'அவனும் ஒரு மனிதன் தான்' என்று மிக அழகாக சொல்லியிருப்பார் கமல். 'உன் மொகரகட்டைக்கு எங்கள விட்டா யாருடா வருவா?' என்று அவரின் தாய் கோபத்துடன் கேட்டு கமலை அடிக்க, அந்த ஆத்திரத்தில் ஆட்டுக்கல்லை எடுத்து தன் அம்மா மீது போடப் பார்த்து, பிறகு அதை அப்படியே தன் நெஞ்சில் வைத்து இடித்துக்கொண்டு அழும் காட்சி செம.

 தன் கண் முன்னே காதலி இறந்ததை பார்த்து, அதை நம்பாமல் 'இல்ல, இல்ல. இது பொய்' என்று உரக்க சொல்லுமிடத்தில் 'Iam the one & only' என்று திரும்பவும் நிருபித்திருக்கிறார் கமல் என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் கதாநாயகியாக புதுமுகம் ரோஷினி. இவரை கமல் பார்த்தவுடன் 'பார்த்த விழி, பார்த்தபடி பூத்து இருக்க' என்ற பாடலுக்கு மெய் மறந்தபடி ஒரு மூமென்ட் கொடுப்பார். அந்த மூமென்ட், இந்த பெண்ணின் அழகால் அது நம்மையும் தொற்றிக்கொள்ளும். அவ்வளவு அழகு. இவருக்கு இதுவே முதல் படம்.

அதற்குப் பிறகு ஹிந்தியில் மூன்று படங்கள் நடித்து விட்டு காணாமல் போய் விட்டார். இவர் மட்டும் தொடர்ந்து நடித்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வந்திருப்பார். இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது கமலுக்கு மட்டுமே தெரியும் என்றே நினைக்கிறேன். இந்த படத்தில் கமல் மட்டுமே பிரதானமானதால், இவர் வரும் காட்சிகளில் கொஞ்சம் சுமாராகவே நடித்திருக்கிறார். இவருக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பது நடிகை சரிதா.

கமல், ரோஷினி தவிர்த்து இந்த படத்தில் நடித்திருக்கும் பழம் பெரும் நடிகை எஸ்.வரலக்ஷ்மி, 'காகா ராதா கிருஷ்ணன், ஜனகராஜ், எஸ்.பி.பால சுப்பிரமணியம், கிரீஸ் கர்னாட், ரேகா, அஜய் ரத்னம் போன்ற அனைவரும் தங்களது கதாபத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்கள். படத்தை தயாரித்தது அலமேலு சுப்பிரமணியம். படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஜான் எடதட்டில். ஒளிப்பதிவு - வேணு, படத்தொகுப்பு - பி.லெனின் & வி.டி. விஜயன், படத்தை இயக்கியது சந்தான பாரதி. படம் வெளியான ஆண்டு 1992.

இந்த படத்தில் இசை ஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள் அனைத்தும் அருமை. அப்பனென்றும், உன்னை நானறிவேன், கண்மணி அன்போடு, பார்த்த விழி என்று எல்லாமே எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் தான். படம் வெற்றி பெறாததற்கு காரணம் என்னவென்று நான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்.

'மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதர் காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது' என்ற வசனம் இன்றைய தேதி வரை பிரபலம். இது தான் இந்த படத்தின் மூலக் கருவும் கூட. இந்தப் படம் வெளிவந்த போது கூடவே வெளியான படம் தான் சூப்பர் ஸ்டாரின் 'தளபதி'. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அபிராமி திரையரங்கில் இந்த இரு படங்களின் கட் அவுட் தொடர்பான பிரச்சனையில் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள்.

அன்றிலிருந்து இன்று வரை அபிராமி திரையரங்கில் ஹீரோவுக்கான தனி கட் அவுட் வைக்க தியேட்டர் நிர்வாகம் அனுமதி அளிப்பதில்லை.

தலையில் முடிவளர,முடி உதிர்வதைத் தடுக்க, இளநரை மறைய...!



1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

அஇஅதிமுக'வின் ராஜதந்திரம் இந்த முறை எடுபடவில்லை..- பாவம்...!

ஆயிரத்தில் ஒருவன் 'பிளாப்'... அதிர வைத்த மதுரை....3 பேரே பார்க்க வந்த பரிதாபம்..!

மதுரை: பெரும் எதிர்பார்ப்புடன் மறு வெளியீடு செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மதுரையில் தோல்வி அடைந்துள்ளதாம். படத்தைத் திரையிட்ட தியேட்டர்களில் தற்போது அவற்றை எடுத்து வருகின்றனராம்.

தேர்தல் ஆணையத்தின் கடும் கெடுபிடிகளுக்கிடையே நேற்று முன்தினம் வெளியானது டிஜிட்டலில் புதுப்பிக்கப் பட்ட ‘ஆயிரத்தில் ஒருவன்' படம். இப்படத்தை ஒருமுறைப் பார்ப்பதென்பது பத்து பொதுக்கூட்டங்களைப் பார்ப்பதற்குச் சமம் என அதிமுக தொண்டர்கள் தெரிவித்து வந்தனர்.

வார இறுதியில் கூட்டம் குவியும் என எதிர்பார்த்த தியேட்டர் ஓனர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளதாம். காரணம் படம் ரிலீசான பெரும்பான்மையான தியேட்டர்கள் ஈயோடிக் கிடக்கின்றனவாம்.

1965ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்தை தற்போது டிஜிட்டல் முறையில் புதுப்பித்து வெ்ளியிட்டுள்ளனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த இப்படம் மதுரையில் தோல்வி அடைந்துள்ளது. இது திரையுலகினருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

காரணம், பாக்ஸ் ஆபீஸில் ஒரு படம் ஹிட்டாகுமா இல்லையா என்பதை நிர்ணயம் செய்யும் முக்கிய மார்க்கெட் தளமான மதுரையிலேயே, அதுவும் எம்.ஜிஆருக்கும், அதிமுகவுக்கும் பெரும் திரளான ரசிகர் பட்டாளம் உள்ள ஊரில் இப்படம் தோல்வி அடைந்திருப்பதால் தியேட்டர்காரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.

மதுரையில் இந்தப் படம் ஐந்து தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் வந்ததோ விரல் விட்டு எண்ணும் அளவில்தானாம்.

இதில் ஒரு தியேட்டரில் படம் மறு வெளியீடு செய்யப்பட்ட அடுத்த நாளே ஒரு காட்சிக்கு போதிய அளவில் ஆட்கள் வராததால் அந்த ஷோவையே ரத்து செய்யும் நிலை ஏற்பட்டதாம்.

இதுகுறித்து தமிழ் ஜெயா தியேட்டரின் மேலாளர் பாண்டியன் கூறுகையில், நூன் ஷோவுக்கு வெறும் 3 பேர் வந்திருந்தனர். சரி, தொடர்ந்து வருவார்கள் என்ற நம்பிக்கையில் படத்தைப் போட்டோம். ஆனால் யாருமே வரவில்லை. இதனால் அரை மணிநேரத்திலேயே படத்தை நிறுத்தி விட்டு ஷோவைக் கேன்சல் செய்து 3 பேரிடமும் பணத்தைத் திரும்பக் கொடுத்து அனுப்பி விட்டோம்.

பழம்பெரும் இயக்குநர் பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் உருவான படம்தான் ஆயிரத்தில் ஒருவன். இதில் சர்வாதிகார முதலாளியை எதிர்த்துப் போராடி கொத்தடிமைகளை மீட்கும் கதாபாத்திரத்தில் எம்.ஜிஆர். நடித்திருப்பார். நம்பியார்தான் வில்லன்.

இந்தப் படம்தான் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமும் ஆகும். எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் இது. மேலும் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஜோடி முதல் படத்திலேயே ஹிட் ஆனதும் இதில்தான்.

தமிழகம் முழுவதும் இந்தப் படம் 120 தியேட்டர்களில் போடப்பட்டுள்ளது. ஆனால் அதில் எத்தனை தியேட்டர்களில் தற்போது இது ஓடி வருகிறது என்பது தெரியவில்லை.

இந்தப் படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்ததும் நினைவிருக்கலாம். எனவே அதிமுகவினர் பெருமளவில் படத்தைப் பார்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் மதுரைக்காரர்கள் கைவிட்டு விட்டது திரையரங்குகளை அதிர வைத்துள்ளது.

மற்ற ஊர்களின் நிலவரம் தெரியவில்லை. ஆனால் நிலைமை சரியில்லை என்றே செய்திகள் வருகின்றன.

ஆன்லைன் கிரேடிட் கார்டு கொள்ளையில் இருந்து தப்புவது எப்படி..!



இண்டர்நெட்டில் அதிகரித்து வரும் கிரெடிட் கார்டு மோசடிகளால், நிதித்துறை பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இன்றைய நாட்களில், சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் இணைய வழி மோசடி நடக்காமலிருக்கும் என உறுதிமொழியையும் மற்றும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களையும் தங்களுடைய அட்டைகளுக்கு கொடுத்து வருகின்றன.

என்னதான் அவர்கள் உறுதி கூறினாலும் இது போன்ற திருட்டுகள் இன்னும் குறைந்தபாடு இல்லைய, தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே நமது பணத்தை நாம் தான் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனால் பாதுகாப்பு அம்சங்களை சரி வர பயன்படுத்தி கிரெடிட் கார்டு மோசடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வது நல்லது. இது பற்றி மேலும் அறிய பின்வரும் 8 டிப்ஸ்களை படியுங்கள்.

வருமுன் காப்பதே நல்லது' என்பது இந்த பிரச்சனைக்கு பொருத்தமான பழமொழியாகும். இணைய வழி வைரஸ்களில் இருந்து உங்களுடைய கம்ப்யூட்டரை பாதுகாக்க நினைத்தால், ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளை நிறுவுவது நல்லது.

விண்டோஸ் மெயில் மற்றும் அவுட்லுக் போன்ற வெப் பிரௌஸர்கள் மற்றும் ஈமெயில் முகவர்கள் ஆகியவற்றை அப்டேட் ஆக வைத்திருப்பது அவசியமாகும். பிஷ்ஷிங் (Phishing) மற்றும் மால்வேர் (Malware) போன்றவற்றில் இருந்து உங்களுடைய கணிணியை பாதுகாக்கக் கூடிய முழுமையான ஆன்ட்டி-வைரஸை தேர்ந்தெடுப்பது நல்லது.

நீங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கும் இணைய தளங்கள் வழியாக பணம் செலுத்துவது நல்லது. அவர்களுடைய அஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் பிற ஆவணங்களை சேகரித்து அவர்களைப் பற்றி உறுதி செய்து கொள்வது அடுத்த படியாகும்.

ஏதாவதொரு தளம் நம்பிக்கையை தரவில்லையென்றால், அதை உபயோகிக்க வேண்டாம். PayPal மற்றும் AlertPay ஆகிய தளங்கள் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கையானதாக உள்ளது. eBay போன்ற இணைய வழியாக பெருமளவு வணிகம் செய்யும் தளங்கள் பைசா பே வழிமுறை (paisa pay option) போன்ற மிகவும் பாதுகாப்பான வழிமுறையை கொடுத்து, நீங்கள் பொருட்களை வாங்க உதவுகின்றன.

பாதுகாப்பான தளங்களில் மட்டுமே உங்களுடைய கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் பதிவிடப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பிரௌசர் விண்டோவின் கீழ் வலதுபக்கத்தில் பேட்லாக் குறியீட்டை (Padlock Symbol) எப்பொழுதும் கவனித்து வாருங்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் இணைய தளம் 'https:\' என்று தொடங்குவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இது மிகவும் முக்கியமான விஷயமாகும்! ஊங்களுக்கு சொந்தமான எலக்ட்ரானிக் பொருட்களான டேப்லட்ஸ் மற்றும் மொபைல்களை பயன்படுத்தி நிதி பரிமாற்றங்களை செய்து வாருங்கள். பொது இடங்களில் இருக்கும் கணிணிகள் பொது நூலகங்களைப் போன்றவை, யார் வேண்டுமானாலும் அவற்றைப் பார்க்கலாம், படிக்கலாம். பொது இடங்களில் உள்ள பெரும்பாலான கணிணிகள் நமது பயன்பாட்டு பெயர் மற்றும் கடவுச் சொற்களை சேமித்து வைக்கும் குக்கிகளை கொண்டுள்ளன. இதனால் நமது இரகசியமான தகவல்கள் எளிதில் அம்பலமாகி விடுகின்றன.

மேலும், பாதுகாப்பான வை-ஃபை இணைப்பு மற்றும் கடவுச் சொல் வழியாக உங்களுடைய இணைய சேவை இணைக்கப்படுவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிஷ்ஷிங் தளங்கள் ஜாக்கிரதை! இணைய வழியில் பரிமாற்றங்கள் செய்யும் போது அந்த தளத்தின் ஆவணங்களை சரி பார்க்கவும். இந்த ஆவணங்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் இந்த ஆவணங்கள் இருப்பதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்க முடியும். வெள்ளை மற்றும் பச்சை நிற கொடியுடைய தளங்களை எப்பொழுதும் தேர்ந்தெடுக்கவும். பச்சை நிற ஆவணங்கள் கொண்ட தளங்கள் அதிகமான பாதுகாப்பையும், உரிமையை உறுதிப்படுத்தம் தன்மையும் கொண்ட தளமாகவும் உள்ளன.

நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயம் மின்னஞ்சலுக்கு வரும் பிஷ்ஷிங் மெயில்கள். இது போன்ற மெயில்களை உங்களுடைய இன்பாக்ஸில் வைத்திருக்க வேண்டாம். இந்த வகை இமெயில்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையோ அல்லது கிரெடிட் கார்டு விபரங்கள் அல்லது ஒரு கிளிக் செய்து நீங்கள் செல்லும் இணைய தளத்தில் உங்களுடைய பயன்பாட்டு பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல்லை (Password) சரி பார்க்க சொல்லவோ அல்லது பிற விபரங்களை கேட்கும் வகையில் இருக்கின்றன. இவற்றை முடிந்த வரையிலும் தவிர்த்து விடுவதும், அழித்து விடுவதும் பாதுகாப்பை உறுதி செய்யும்.

உங்களுடைய பாஸ்வேர்ட் அல்லது கடவுச் சொல்தான் உங்களைப் பற்றி விபரங்களுக்கான சாவியாகும். இன்றைய நாட்களில் அனைத்து வங்கிகளும் மிகவும் உறுதியான மற்றும் பாதுகாப்பான தற்காலிக கடவுச் சொற்களை (Instant passwords) உங்களுடைய மொபைலுக்கு அனுப்பி அதன் வழியாக தங்களுடைய இணைய வழி பரிமாற்றங்களை நடத்தச் செய்கின்றன. இந்த வசதியை உங்களுடைய கணக்கிற்கும் ஏற்படுத்த நீங்கள் உறுதி செய்யுங்கள்.

இறுதியான தகவலாக இருந்தாலும், மிகவும் உறுதியான தகவலாக இருப்பது உங்களுடைய கணக்கினை நீங்கள் அவ்வப்போது பரிசோதித்து கவனித்து வருவதாகும். இவ்வாறு செய்யும் போது உங்களுடைய அட்டையை கடைசியாக எப்பொழுது பயன்படுத்தினோம் என்பதை கவனித்து வர வேண்டும். இவ்வாறு பரிசோதிக்கும் போது, உங்களுக்கு பரிச்சயமில்லாத பரிமாற்றங்கள் ஏதேனும் இருந்தால் அது புலனாகி விடும். இவ்வாறு தவறான பரிமாற்றங்கள் ஏதும்இருந்தால் உடனடியாக உங்களுடைய கிரெடிட் கார்டு நிறுவனத்தை அணுகி தகவல் தரவும்.

நீங்கள் இவ்வாறாக உங்களுடைய அட்டை, இரகசிய எண் அல்லது இணைய வழி கடவுச் சொற்கள் ஆகிய மோசடிகளுக்குள்ளான பின்னர், உடனடியாக தகவல்களை கொடுத்து விட்டால் கூட, உங்களுடைய வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனம் பணத்தை திரும்ப கொடுக்க வாய்ப்புகள் உள்ளன.

உத்தமமான கமல் இவர் தாங்க...!



'உத்தம வில்லன்' படத்தில் கமல் டபுள் ரோலில் நடிக்கிறார்.

உத்தமன் என்ற எட்டாம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கேரக்டரிலும்,

மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரம் கேரக்டரிலும் நடிக்கிறார்.


மனோரஞ்சனின் குருவாக இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார்.

மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசி நடிக்கிறார்.


எட்டாம் நூற்றாண்டில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கிறார்.

 21ம் நூற்றாண்டில் சினிமா ஸ்டார் கமலின் காதலியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.


சர்வாதிகாரி கேரக்டரில் நாசரும், ஜேகப் ஜக்காரியா கேரக்டரில் ஜெயராமும், ஜேயராம் வளர்ப்பு மகளாக பார்வதி மேனனும் நடிக்கிறார்கள்.


எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ஹன்சிகாவால் வாலு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு...!



வாலு படத்தினை எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை. தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்னைகளாக வந்து கொண்டிருக்கிறது.


 எல்லா பிரச்னைகளையும் சமாளித்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புக்களில் ஹன்சிகா ஒரு பிரச்னையைக் கிளப்பியுள்ளதாகப் பேசப்ப்படுகிறது.


சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தின் மூலமே இணைந்து நடிக்கும் வாய்ப்பினையும், அதன் மூலம் சினிமாவில் மட்டுமல்லாது நிஜத்திலும்
காதலர்களாக மாறினர்.


எவ்வளவு வேகத்தில் காதல் வந்ததோ அதை விட வேகமாக காதல் முறிவும் ஏற்பட்டது.

இந்நிலையில் வாலு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு, இறுதியாக ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறது.


 இப்பாடல் காட்சியினை வெளிநாட்டில் படமாக்க இயக்குனர் விஜய் சந்தர் முடிவெடுத்து, அதனை ஹன்சிகாவிடம் கூற, ஹன்சிகா தான் வெளிநாட்டுப் படப்பிடிப்பிற்கெல்லாம் வரமாட்டேன் என்று கூறுகிறாராம்.


 அப்பாடல் காட்சியினை உள்ளூரிலேயே படம்பிடிக்குமாறும் வற்புறுத்துகிறாராம்.

வெளிநாடு வந்தால் எங்கே சிம்பு மீண்டும் தன்னை வற்புறுத்துவாரோ என்ற பயம்தான் ஹன்சிகாவின் இந்த முடிவிற்குக் காரணம் என்று கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.

அம்மாவான முத்தழகி - அதிர்ச்சியில் ஆழ்ந்த திரையுலகம் - கதறும் நடிகை..!




‘பருத்தி வீரன்’ மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்ற பிரியாமணியை சமீபகாலமாக தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை.

கன்னடத்தில் ஓரிரு படங்களில் நடிக்கிறார்.

மலையாள படமொன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால், சமந்தா, காஜல் அகர்வால் போன்றோர் தமிழ் பட உலகை நிலையாக ஆக்கிரமித்து கொண்டதால் பிரியாமணிக்கு படங்கள் குறைந்து விட்டது.

இந்த நிலையில் பிரியாமணி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–

என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன.

மனம் போன போக்கில் எழுதுகிறார்கள். கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவது இல்லை.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக நடிக்கவில்லை.

நிறைய வாய்ப்புகள் வந்தன.

ஆனால் கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை.

 நல்ல கேரக்டர்கள் அமைந்தால் நடிப்பேன்.

எதிர்காலத்தில் படங்கள் டைரக்டு செய்ய ஆர்வம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈரல் சாப்பிடலாமா..? கூடாதா..? - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..



ஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி அறுத்தால் ஒரு துண்டு ஈரல் கிடைக்கும்.சிலர் சுட்டு தின்பார்கள்.குழம்பில் போட்டால் தனியாக மிதக்கும். கறி  வெந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து போட .வேண்டும்.


ஆட்டு ஈரல் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும்.இப்போது சிக்கன் கடைகள் முளைத்தபின்பு கோழி ஈரலும் எங்கும் கிடைக்கிறது.நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்,'' கோழி ஈரல் சாப்பிடக்கூடாது பாஸ் " ஆட்டு ஈரல் சாப்பிடலாம் என்றார்.ஆனால் அவரால்  காரணத்தைச்  சொல்லி விளக்க  முடியவில்லை. 

வீதிதோறும் அசைவக் கடைகள் பரவிவிட்ட நிலையில் இப்போது ஈரல் கிடைப்பது  சுலபம்.ஆனால் நண்பர் சொன்னது போல பலருக்கு குழப்பம் இருப்பதை கவனித்திருக்கிறேன்.உயிர்ச்சத்துக்களை சேமித்து வைத்து தேவையானபோது வழங்குவது ஈரலின் முக்கிய பணி.முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது ஈரல்.


அனைத்து உயிர்ச்சத்துக்களும் இதில் உண்டு..குறைந்த அளவில் முழுமையான சத்துக்களை கொடுக்கும் வேறு உணவைக் குறிப்பிட   முடியாது.இரும்பு,செலினியம்,துத்தநாகம் என்று பயனுள்ளவை அதிகம் இருக்கிறது.ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உணவு.போலிக் அமிலமும்,பி 12 உயிர்ச்சத்தும்  இதன் சிறப்பு.

அதிக ஏ வைட்டமின் காரணமாக கர்ப்பிணிகள் தவிர்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.ஆனால் ஊட்டச் சத்து பற்றாக்குறை உள்ள நம் நாட்டில் மிகு விட்டமின் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஈரல் சாப்பிடும் அன்று ஏதேனும் காரணங்களுக்காக விட்டமின் மாத்திரை எடுப்பவர்கள் அன்று தவிர்த்துவிடலாம்.


எதிரான விஷயம் என்று பார்த்தால் கொலஸ்ட்ராலை குறிப்பிடலாம்.ஆட்டு  ஈரலில் கொஞ்சம் அதிகம். கொலஸ்ட்ரால்  பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.மற்றவர்களும் ஒரு முழு பூண்டை தட்டி உடன் சேர்த்துக்கொள்ளலாம்.பூண்டு  கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

பொதுவாக கலர் பவுடர் தூவப்பட்ட சிக்கன் கடைகளில் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல! சாலையோரக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது.உணவகங்களில் பதப்படுத்தப்பட்ட ஈரல் இருக்க வாய்ப்புண்டு.ஈரல் மட்டுமல்ல,அசைவ உணவுகளை வீட்டில் தயாரிப்பதே மிகச் சரி.


முழு திரைப்படத்தையும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்க புதிய தொழில்­நுட்­ப­ம் உங்களுக்கு வேணுமா..?



தென் கொரியாவானது முழுமையான திரைப்படமொன்றை ஒரு செக்கனில்

பதிவிறக்கம் செய்யக்கூடிய 5 ஆம் தலமுறை கையடக்கத்தொலைபேசி

இணையத்தள  சேவையை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது.

இதன் பிரகாரம் மேற்படி ’5 ஜி’ என்ற ஐந்தாம் தலைமுறை கையடக்கத்
தொலைபேசி

சேவைகளில் 900 மில்லியன் ஸ்ரேலிங் பவுணை தென் கொரியா முதலீடு

செய்துள்ளது.

இந்த சேவையை பரீட்சார்த்தமாக 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும்

அதனை 2020 ஆம்  ஆண்டு டிசம்பருக்குள் வர்த்தக ரீதியாக செயற்படுத்தவும்

திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்படி தொழில்நுட்பமானது ஒரு செக்கனில் 800 மெகா பைட் அளவான

திரைப்பட கோப்பை பதிவிறக்கம் செய்வதற்கு பயன்பாட்டாளருக்கு

அனுமதிக்கிறது.

இது 4 ஆம் தலைமுறை கணனிகளை விட 1000 மடங்கு வேகமானதாகும்.

முக்கிய சாலைகளில் ஸ்ருதிஹாசனின் ஆபாசப்படம் - படுஜோர்...!



அல்லு அர்ஜுன், ஸ்ருதிஹாசன் நடித்த Race Gurram” என்ற படத்தின் ஹாட் போஸ்டர் ஒன்று, இன்று ஆந்திர தலைநகர் ஐதராபாத் முழுவதிலும் சுவரில் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போஸ்டரை ஐதராபாத்தின் பல சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பார்த்துக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Race Gurram” படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று நடப்பதாக இருந்தது.

ஆனால் திடீரென நாளை இந்த விழா நடக்கும் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது.

இந்த படத்தில் அல்லு அர்ஜூன், ஸ்ருதிஹாசனோடு சலோனி என்ற நடிகை முக்கிய கவர்ச்சி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சுரேந்திர ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தை Nallamalupu Sreenivas என்பவர் தனது லட்சுமி நரசிம்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இதுபோன்ற மிகவும் கவர்ச்சியான போஸ்டர்களை போக்குவரத்து மிகுந்த சாலையோரத்தில் ஒட்டி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், பெண்களை ஆபாசமாக காட்டியிருப்பதாகவும், இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது ஐதராபாத்தில் உள்ள மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது