Saturday 15 March 2014

இது தேவை வற்புறுத்திய இயக்குனரால்,மகிழ்ச்சியில் ஹீரோ,மனம் நொந்த நடிகை...!



இலியானாவுக்கு பாலிவுட் ஹீரோ அழுத்தமான லிப் டு லிப் முத்தம் கொடுத்தார். ‘நண்பன்‘, ‘கேடி‘ உள்ளிட்ட தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துவந்தவர் இலியானா.

 கடந்த 2012ம் ஆண்டு ‘பர்பி‘ என்ற படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார். படம் வெற்றி பெற்றாலும் வாய்ப்புகள் குறைவாகவே வந்தன. ‘ஹேப்பி என்டிங்‘, ‘மெயின் தேரா ஹீரோ‘ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

மெயின் தேரா... படத்தில் வருண் தவானுடன் நடித்து வரும் இலியானாவுக்கு அவருடன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தென்னிந்திய படங்களிலேயே லிப் டு லிப் காட்சிகளுக்கு தயாராகி இருந்த இலியானா சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழிக்க பார்த்தார்.


ஆனால் இயக்குனர் டேவிட் தவான் லேசில் விடவில்லை. நிச்சயமாக இது கதைக்கு தேவை என்று வற்புறுத்தியதை அடுத்து ஒப்புக்கொண்டார். ஹீரோவும் சான்ஸை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொண்டார். இலியானாவுக்கு லிப் டு லிப் அடித்து அசத்தினார்.

இதுதான் வருணுக்கு கிடைத்த முதல் முத்தக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இக்காட்சி படமானபோது குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களே ஷூட்டிங் தளத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.

வா ராசா...உன் சேவை நாட்டுக்கு தேவை...!



பாராளுமன்ற தேர்தல் பற்றி நடிகர் மன்சூர் அலிகான், நிருபருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘இந்த பாராளுமன்ற தேர்தலில், மக்களுக்கு அதிக ஆர்வம் இல்லை. எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.கோடி கோடியாக பணம் உள்ளவர்கள் மட்டுமே அரசியல் நடத்த முடியும் என்கிற நிலை உள்ளது.

சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சிலர் அரசியலுக்கு வருகிறார்கள். இந்த மண்ணின் மைந்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யாரும் வரவில்லை. தமிழ்நாட்டில் இருந்து 40 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி போவார்கள்.

அவர்களில், 5 பேர் மந்திரிகளாகி விடுவார்கள். அந்த ஐந்து பேரும் இதற்கு முன்னால் மந்திரிகளாக இருந்தவர்கள் என்ன செய்தார்களோ, அதையே தான் இவர்களும் செய்வார்கள். தமிழர்களின் நலனுக்காக யாரும் உழைக்கப் போவதில்லை. இந்த தேர்தலில், சில நடிகர்நடிகைகள் தேர்தல் பிரசாரத்துக்கு போகிறார்கள்.

சில நடிகர்நடிகைகள் அரசியல் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. வரவேற்கிறேன். நக்மா, நமீதா, சோனா மூன்று பேருக்கும் வாழ்த்துகள். நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வருகிறார்கள்.

முதலில் மிகுந்த கட்டுப்பாட்டோடு கட்சி ஆரம்பிக்கிறார்கள். போகப்போக அந்த கட்சிக்குள்ளும் குடும்ப அரசியல் நுழைந்து விடுகிறது. அப்புறம் ஊழல் என்கிறார்கள். ஊழலை ஒழிப்போம் என்கிறார்கள்.

அந்த ஊழல் எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து சிறந்த இயக்கத்தில் இருந்து அழைப்பு வந்தால், நான் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.’’

இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..!



1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

Husband and wife2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித் தான் நடத்துகின்றனர்.

9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.

10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது. நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்டியவைகள்..!



"எனக்கு நேரமே இல்லை! என்னுடைய கடுமையான பணிச்சுமையில், இதற்கு நேரம் ஒதுக்க வழியே இல்லை" வேலைகளைத் தள்ளிப் போட இது தான் எல்லாரும் எளிதாக கூறும் சாக்கு. அதற்காக, நாம் வேலைகளே இல்லாத மந்தமான வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

உடலும் உள்ளமும் தகுதியாக இருக்க வேண்டுமென்றால், இரண்டுக்கும் போதுமான வேலைகளை உடலுக்கு அளிக்க வேண்டும். நமது பணிச்சுமைகளுக்கிடையில், நமது இயல்பான பணிகளினூடே, நமது உடல்தகுதிக்கான (fitness ) பயிற்சிகளையும், எப்படி சேர்த்துக் கொள்வது என்பது குறித்து இப்போது காணலாம்.

நமது இயல்பான பணிகளைச் செய்யும் போதே, நமது தசைகள், நரம்புகள், எலும்புகள், ஏன், மனதுக்கும் கூட சிறு சிறு பயிற்சிகளைச் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் உடலையும், மனதையும் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள முடியும்.

ஃபிட்னஸ் என்றால் என்ன?

உங்களது அன்றாட உடல் சார்ந்த பணிகளை, களைப்பில்லாமலும், எளிதாகவும், செய்த பிறகும் நீங்கள் களைப்பின்றி உணர்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் உடல் ஃபிட்டாக உள்ளது என்று பொருள். ஆம். உங்களது ஆற்றல் நிலையும், உடல் வலிமையும், போதுமான அளவில் உள்ளது என்று பொருள்.

ஆனால், அன்றாட பணிகளைச் செய்து ஓய்ந்த பிறகு, சக்தியெல்லாம் தீர்ந்து களைப்பாக உணரும் தருணங்களைக் கூட நீங்கள் எதிர்கொண்டிருப்பீர்கள். அப்படியென்றால், உங்களது அன்றாட வேலைகளுக்கிடையில் சிறுசிறு ஃபிட்னஸ் உடற்பயிற்சிகளை நுழைத்து, உங்களை சுறுசுறுப்பாக்கிக் கொள்ளவும், களைப்பின்றி உணர வைக்கவும் நேரம் வந்துவிட்டது.

30 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக நடந்தால்,அது உங்கள் இதயத்துடிப்பு வீதம் அதிகரித்து, அதிகமான கலோரிகளை எரித்து, உடல் மெட்டபாலிசத்தினைத் தூண்டும். உங்கள் ஸ்டாமினாவையும் அதிகரிக்க உதவும்.

மின் தூக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். மாடிப்படிகளைப் பயன்படுத்துவதனால், ஏற்படும் நன்மைகள். - உடல் எடைகுறையும் - ஸ்டாமினா அதிகரிக்கும் - இதய இயக்கத்தை ஊக்குவிக்கும்

உங்களது பிருஷ்டத்தசைகளை உங்கள் கைகளால் பிசையுங்கள். இது அதிகமான கலோரிகளை எரிக்க உதவும். உங்கள் பிருஷ்ட தசைகளை 3 நாள்களுக்கு ஒருமுறை 10-15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வடிவான பின்புறங்களைப் பெறுங்கள். இது போல நிற்கும் போதோ, அமரும் போதோ உங்கள் கைகளால், மசாஜ் செய்துவிடலாம்.

நிற்கும் போது நன்றாக நிமிர்ந்து நில்லுங்கள். அமரும் போது கூன் போடாமல் முதுகினை நன்றாக நிமிர்த்தி அமருங்கள். இப்படி செய்தால் கழுத்திலிருந்து கால் வரை ஏராளமான நரம்புகள் இளகும். நமது அமரும் தோற்றமும் நிற்கும் தோற்றமும் நேராக இருந்தால் நமது தன்னம்பிக்கையும் பெருகும்.

பின்வரும் பயிற்சியைச் செய்து உங்கள் பின்புறத்தசைகளுக்கு வலிமையூட்டுங்கள். உங்கள் முதுகுத்தசைகளுக்கு இடையில் ஒரு பென்சிலை நிறுத்தி தசைகளால் பிடித்துக் கொள்வது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். பென்சில் விழாமல் இறுகப் பிடித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் முதுகுத்தசைகளும், அதனைச் சுற்றியுள்ள தசைகளும் வலிமை பெறும்.

தண்ணீர் பாட்டிலையோ, சூப் கிண்ணத்தையோ தூக்கும் போது உங்கள் கைகளை தரைக்கு இணையாக இருக்குமாறு நீட்டி தூக்குங்கள். அதாவது உங்கள் உடலும் கைகளும் ஆங்கில எழுத்து போல இருக்க வேண்டும். இதன் மூலம் கையிலுள்ள தசைகள் வலிமை பெறும்.

நீங்கள் ஷாப்பிங் செய்துவிட்டு பையுடன் வரும் போது அதனை உங்கள் கையில் பிடித்துக்கொண்டு, டிம்பிள்ஸ் தூக்குவது போல தூக்கவும். பையினை முழங்கையிலிருந்து தோள்பட்டை வரை தூக்கி இறக்குங்கள். உங்கள் இருதலைத்தசைகளுக்கு களைப்பு ஏற்படும் வரை இதனை செய்யுங்கள்.

நீங்கள் மேசையில் அமர்ந்து பணிபுரிபவராக இருந்தால், பணிக்கு இடையில் உங்கள் தசைகளுக்கு தளர்ச்சி அளிக்கும் வண்ணம் இடையிடையே சற்று நேரம் நடப்பது அவசியம். சற்று நேரம் நடப்பதால், தசைகளில் இலகுத்தன்மை ஏற்படும். இரத்த ஓட்டம் சீராகும்.

பாத்திரம் துலக்குதலும், பாத்திரங்களில் பிடித்துள்ள உணவுத்துணுக்குகளை சுரண்டி அகற்றுதலும் உங்கள் கைகளில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சிகளாகும். அதே போல சமையல் செய்தலும் கைகளுக்கு நல்ல பயிற்சிகளாகும். தசைகள் வலிமையுடனும் பொலிவுடனும் திகழ சமையல் செய்யுங்கள்.

உங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொலைபேசியில் பேசுவது குறைந்தபட்சம் 2 நிமிடங்களுக்கு நீடிக்கும். இந்நேரத்தில் நடந்து கொண்டே பேசுங்கள்.

வீட்டினை சுத்தம் செய்வது என்பது உண்மையிலேயே உடலுக்கு மிகவும் சிறப்பான பயிற்சியாகும். தூசு தட்டினாலும், குப்பையைப் பெருக்கினாலும், ஒட்டடை அடித்தாலும், தரையைக் கழுவினாலும், நீட்டி, நிமிர்ந்து, குனிந்து வேலை செய்ய வேண்டியிருக்குமாதலால், அனைத்துமே உடலுக்கு நல்லது. எனவே அடிக்கடி வீட்டை சுத்தப்படுத்துங்கள். வீடும் அழகாகும், உங்கள் உடலும் அழகாகும்.

பாலுறவு கொள்ளுவதால், இயற்கையாகவே, உடல் எடை குறைகிறது. அத்துடன் உடலில் எண்டார்ஃபின் சுரப்பினையும் அதிகரிக்கிறது. அளவோடு பாலுறவு கொள்ளுதல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

நல்ல முழுமையான ஓய்வு என்பது ஆரோக்கியத்துக்கு அறிகுறி. உங்களது மனதையும், உடலையும், புத்துயிர் ஊட்டிக் கொள்ள சிறப்பான வழி தூக்கம். இதன் மூலம், மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.



சிலருக்கு, உடற்பயிற்சியின் சிறப்பினை எடுத்துக் கூறுவதற்கு யாராவது ஒருவர் இருந்தால் தான், உடற்பயிற்சி செய்வார்கள். தூண்டிவிட்டுக் கொண்டேயிருந்தால் தான், அவர்கள் எதனையும் செய்வார்கள். இரவு உணவுக்குப் பிறகு, சேர்ந்து நடப்பதற்கு நண்பர் ஒருவர் அமைந்துவிட்டால், அதுவே வழக்கமாகிவிடும். இதைப் போல சில முறைகளை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், இரவு உணவுக்குப் பிறகு நடப்பதால், உடல் எடை குறைந்து உடல் மெலிவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.

ஸ்டைல் மட்டுமல்ல… நடிப்பும் கூடப் பிறந்ததுதான்..! - நெகிழ வைத்த ரஜினி



கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு தலைவரின் ஆறிலிருந்து 60 வரை படம் பார்த்தேன், இன்று (நவம்பர் 23, திங்கள்). எத்தனையாவது முறை..?
தெரியவில்லை…

அவருடைய படங்களைப் பார்க்க மட்டும்தான் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியும். எத்தனை முறை என்பதை கணக்கில் வைத்துக் கொள்வதில்லை.

ஸ்டைல் இல்லை, நிமிடத்துக்கொரு முறை முடிகோதும் அந்த மேனரிஸம் இல்லை, காற்றில் பறந்து பந்தாடும் சண்டைகள் இல்லை, அறிமுகப் பாடலோ, பஞ்ச் வசனமோ இல்லை… ஆனால் ‘தலைவர்’ வருகிற ஒவ்வொரு காட்சியிலும் மனசு அதிர்ந்து அழுதது.

வாழ்க்கை இத்தனை வலி மிகுந்ததா..! இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் தெரியாத ஒரு உலகத்துக்குப் போய்வந்த உணர்வு.

தன் சொந்த தம்பியிடம் பணம் கேட்கக் கூச்சப்பட்டு ரஜினி தயங்கி நிற்கும் ஒரு காட்சியில் அவரது தன்மானத்துக்கும் வறுமைக்கும் நடக்கிற போராட்டம்…

“அண்ணா… ஒரு 5000 ரூபா பணத்துக்காக உன் வாழ்க்கையை அடகு வச்சிக்கிறது சரிதான்னு எனக்குப் படல…” என்று தம்பி பேசும்போது, தலைவர் ஒரு ஞானி மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சொல்வார்..

“கண்ணா.. மாடு மனை மண்ணு பொன்னு இதெல்லாம் அதுவா அமையறதுப்பா… அதைத் தீர்மானிக்கிறது நாம இல்லை”

தோல்வி மேல் தோல்வி, அடி மேல் அடி விழும்போது, அப்படியே இறுகி இறுகி தன்னையே மறுவார்ப்பு செய்து கொள்ளும் காட்சிகளில்…

“தான் நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்க என்னைச் சுத்தி இருக்காங்க… நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறவங்க வெளியே இருக்காங்க” என உறவுகளுக்கான அர்த்தம் சொல்லும்போதும்…

-நண்பர்களே, இந்தப் படம் வெளியான வருடம் 1979!

ரஜினி அந்தக் காட்சிகளிலெல்லாம் நடித்த மாதிரியே தெரியவில்லை.

பணம் தருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்ட ஆத்திரம் மேலிட முதலிரவில் கோபித்துக் கொண்டுபோய், சில நிமிடங்களில் மனச் சமாதானமடைந்து திரும்பி வந்து மனைவியுடன் அவர் இயல்பாகப் பேசும் காட்சி, ஏனோ மனதில் ஆணியறைந்தது மாதிரி பதிந்துவிட்டது.

படத்தில் ஒரே கமர்ஷியல் விஷயம் கண்மணியே பாட்டு. பெரிய டெக்னிக்கல் உத்தி எதுவும் இல்லாத சாதாரண காட்சியமைப்புதான்.

ஆனால் கேட்கும்போதெல்லாம் நினைவுகளை ஈரப்படுத்தி கண்களைக் கசிய வைக்கிற ஒரு பாடலாகத் தந்துவிட்டார் இசைஞானி. அதுவும் பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கிற அந்த இசை (அது ஒரு அற்புதமான பாஷை மாதிரியே படும் எப்போது கேட்டாலும்!), ‘எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா… பல்சுவையும் சொல்லுதம்மா…’ என்ற வரிகளுக்கு தலைவர் நடித்திருக்கும் அழகு, அந்த இணையில்லாத, முகம் கொள்ளாத மந்தகாச சிரிப்பு… இணையில்லாத பாடல் அது!

தலைவரின் இந்த 60வது பிறந்த நாளுக்கு இந்தப் பாடலையே அவருக்கு டெடிகேட் செய்ய விரும்புகிறேன். இந்தப் பாடலுக்கு ஏதாவது ஸ்டில் அனுப்பணும் என்று நினைத்த போது, அந்தப் பாடலையே ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டால் என்னவென்று தோன்றியது. அதையும் பயன்படுத்துங்கள்.

இறுதியாய் ஒரு வார்த்தை… திரைத்துறை தாண்டி பொதுவாழ்க்கையில் ரஜினி உறுதியாக ஒரு முடிவை எடுக்கவில்லை என்பது போல சிலர் விமர்சனங்கள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ரஜினி தீர்க்கமான மனிதர். தன் கருத்தில் எப்போதும் மாறாத உறுதியுடன் இருக்கும் அசாதாராண நபர். தேடி வந்த முதல்வர் பதவியை வேண்டாம் என்று சொல்ல எத்தனை தன்னம்பிக்கையும், மன உறுதியும் வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

இப்படிப்பட்ட ஒருவர் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்ற விவாதமே இனி வேண்டாம். அவர் விருப்பம் அது. ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, ஒரு குருவாக இருக்க அவரைத் தவிர சிறந்த ஒருவர் தமிழகத்தில் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

ஒரு ரஜினி ரசிகனாக சில நேரங்களில் சிலரது ஏளனத்துக்கு ஆளாகிருக்கிறேன். ஆனால் வருத்தப்பட்டதில்லை. ‘போகட்டும் கண்ணனுக்கே’ என சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன்.
அன்று சொன்னதுதான் இன்றும்… ரஜினி ரசிகன் என்பதில் பெருமையாக இருக்கிறது!

விமான விபத்து பற்றி இதோ சில திடுக்கிடும் உண்மைகள்..!




திடிரென விமானங்கள் நாடு வானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ல் 18 ஆண்டுகள் PILOT டாக பணியாற்றி இப்போது சொந்த தொழில் செய்து வரும் நண்பர் ஒருவர் தெரிவித்த தகவல்களை இங்கு தொகுத்து தந்துள்ளேன்.

1. விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவொரு மார்கதிற்க்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்கம் தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானதிர்ற்கும் நிரந்தர கடல் வழி கப்பலுக்கு கடலில் நிரந்தர வழியும் உண்டு. சர்வதேச விமான கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும் வகுத்துள்ள நிரந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும் கப்பலையும் செலுத்தவேண்டும்.

பறந்து விரிந்த ஆகாயம் தானே என விமானத்தையும் , விரிந்து கிடக்கும் கடல்தானே என கப்பலையும் விருப்பம் போல் ஓட்ட முடியாது.

3. உலகில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பகுதியில் நடு கடல் பகுதியில் புவி ஈர்ப்பு விசை (கோஸ்ட் பிளேஸ் )அதிகமாக உள்ள இடங்கள் என கண்டறிய பட்டுள்ளது. அந்த இடங்களில் மட்டும் சுமார் 60அயிரம் அடிவரை இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கும் . இதன் மேல் எந்த பொருள் பூமிக்கு மேல் சென்றலும் அதை கீழே இழுத்து விடும் சக்தி கொண்டது. அத்தகைய இடங்களில் விமானமும் கப்பலும் செல்ல தடை உள்ளது.

முக்கியமாக இந்தோனேசியா கடல் பகுதியிலும், வங்காள விரிகுடா அந்தமான் பகுதியிலும், வடக்கு கனடா, பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிக இடங்களில் இந்த கோஸ்ட் place என கூற படும் பகுதிகள் உள்ளது. இதுபற்றி அந்ந்தந்த விமான வழி தடங்களில் செயல்படும் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்க பட்டிருக்கும்.

4. வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அந்த விமானம் வானவெளியில் பறக்க குறைந்த பட்ச காற்று அழுத்தம் தேவை. அப்போது தான் வானவெளி அந்தரத்தில் எஞ்சின் கட்டுப்பாட்டில் அதை சீராக கீழே இறங்காமல் நேரே விமானத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்.

5. சில சமயங்களில் மழை புயல் காலங்களில் விமானம் பறக்கும் தடத்தில் VACCUM pocket எனப்படும் நெகடிவ் பிளேஸ் வெற்றிடம் 200 முதல் 500 கிலோமீட்டர் வரை இருக்கும். அதை முன்பே விமானகட்டுபாட்டு அரை கண்டு கொண்டு விமானத்தை வெற்றிடம் இல்லாத தடத்தில் இயக்க விமானிகளுக்கு அறிவுரை வஷங்கபடும். சில சமயங்களில் கட்டுபாட்டு அரை ராடாரில் சிறிய அளவிலான வெற்றிடம் தெரியாது. இது போன்ற சிறிய அளவிலான வெற்றிடங்களுக்கு அருகில் விமானம் வரும் போது தான் விமானத்தின் ராடார் சாதனத்தில் மட்டும் இது தென்படும்.

 அப்போது நீங்கள் விமானத்தில் இருக்கும் போது விமானி நீங்கள் சீட் பெல்ட் அணிந்திராவிடில் உங்களை சீட் பெல்ட் அணிய சொல்லி அதற்க்கான உங்கள் தலைக்கு மேல் உள்ள எச்சரிக்கை சின்ன விளக்கை எரியவிடிவார். அடுத்த ஓரிரு நிமிடங்களில் விமானம் குண்டும் குழியும் இருக்கும் சாலையில் பயணிப்பது போல் ஒரு உணர்வு நமக்கு தெரியும். பொதுவாக விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு எஞ்சின் மட்டும்தான் இயங்கும். மற்றொரு எஞ்சின் spare ராக எமெர்ஜென்சி க்கு பயன்படுத்த இருக்கும். வெற்றிடத்தில் விமானம் நுழையும் பொது இரு விமான எஞ்சின்களும் அதிகபட்ச RPM ல் மானுவலாக விமானி இயக்குவார். இது 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வெற்றிடம் இருந்தால் மட்டும் விமானத்தை பாதுகாப்பாக செலுத்தி வெற்றிடத்தை தாண்டுவது சாத்தியம்.

6. இன்று நடந்த மலேசியன் விமான விபத்து கூட இந்த பாணியில் நடந்திருக்கும் என விமானி நண்பர் கூறுகிறார். முக்கியமாக ஒவொரு விமானத்திலும் இரண்டு விமானிகள் இருப்பார். நீண்ட தூரம் செல்லும் விமானத்தில் 2 மணி நேரத்திற்கு ஒருவர் என விமானத்தை ஒரு விமானி கட்டுபாட்டில் வைத்து விமானத்தை இயக்குவார்கள். அப்போது ஒரு விமானி ஓய்வு எடுப்பார். சில சமயங்களில் விமானம் மேலே பறக்க துவங்கியவுடன் கட்டுபாட்டு அறையிலிருந்து அந்த விமான தடத்திர்கான நிலை குறித்து தகவல் வரும்.

வந்திருக்கும் weather ரிப்போர்ட் normal லாக இருந்தால் பல விமானங்களில் இரு விமானிகளும் AUTO BELT எனப்படும் தானியங்கி விமான இயக்க mode டை ஓட செய்து விட்டு கண்ணை மூடி தூங்கி விடுவார்கள். விமான தடத்தில் திடிரென சிறிய வெற்றிடம் வரும் போது திடிரென விமானம் கட்டுபாட்டை இழந்து சில நொடிகளில் கடலிலோ நிலத்திலோ விழும். இது போல் விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்கு பின் பறக்கும் விமானங்களில் நடக்கும்.

2008ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் 280 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்த இந்தியன் airline விமானமும் வங்காள விரிகுடாவில் பறந்து கொண்டு இருக்கும் போது இதுபோல் ஒரு காற்று இல்லா வெற்றிடத்தில் சிக்கி திடிரென விமானம் இருபத்து ஐந்தாயிரம் அடிக்கு கீழே செங்குத்தாக கீழே இறங்க கடலை தொடும் தருவாயில் விமானியின் சமயோசித தனத்தால் திரும்பவும் விமானத்தை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து விபத்தை தவிர்த்தார் என்பது குறிப்பிடதக்கது .

மிகச் சிறந்த மனிதரைச் சந்தித்தோம் - வீண் வதந்தி வேண்டாம்...!



சென்னை: என் வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த மனிதரை இன்று சந்தித்தேன், என்று ரஜினியுடனான தன் சந்திப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.

தன் தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியுடன் இன்று காலை போயஸ் கார்டன் சென்ற தயாநிதி அழகிரி, சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

மிகச் சிறந்த மனிதரைச் சந்தித்தேன்! - ரஜினியுடனான சந்திப்பு குறித்து தயாநிதி அழகிரி முக அழகிரியுடன் நீண்ட நேரம் ரஜினி பேசிக் கொண்டிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முக அழகிரி, ரஜினியுடன் பேசியது மனதுக்கு நிம்மதியாக இருந்தது என்றார்.

மேலும் தன் மகனுக்கு ரஜினியின் ஆசியைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த தயாநிதி அழகிரி, "என் வாழ்க்கையில் ஒரு மிகச் சிறந்த மனிதரை இன்று சந்தித்தேன்.

இவரைப் போன்ற ஒருவரை இதுவரை சந்தித்ததில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ்க," என்று கூறியுள்ளார்.

மேலும், தான் சிறுவனாக இருந்தபோது, இதே போல தந்தை அழகிரியுடன் போய் ரஜினியைச் சந்தித்த படத்தை வெளியிட்டு, "அன்று.. இன்று.. என்றும் அதே இனிமையான சூப்பர் ஸ்டார்," என்று கூறியுள்ளார்.