Monday 3 March 2014

Data Card இன்டர்னெட்டை அன்லாக் செய்வது எப்படி..?




நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.

நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று

http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/

உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும். இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும்.

 சிம்பிள் அவ்வளவுதான். பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர்.

நல்லவனா... கெட்டவனா? தனுஷ் ஆவேசம்..!



நெருக்கமானவர்களின் வார்த்தையால் பாதிக்கப்பட்ட தனுஷ் தான் நல்லவனா, கெட்டவனா என்பதற்கு பதில் அளித்தார்.

 இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மன வருத்தமுடன் தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ள செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என்னைப்பற்றியும் எனது குணத்தைபற்றியும் தனக்கு தானே முடிவு செய்து தீர்மானித்துக் கொள்பவர்களைபற்றி எனக்கு தெரியவந்தது. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான்.

நான் நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. மற்றவர்களைப்போல் சராசரி இயல்புகொண்ட சாதாரண மனிதன்தான்.

மற்றவர்களுக்கு எதனால் கோபம் வருமோ அந்த கோபம் எனக்கும் வரும். ஒரு மனிதனாக மற்றவர்களைப்போல் எனக்கும் சில உணர்வுகள் உள்ளது. ஆனால் உண்மையானவன்.

எனது பணியிலும், ரசிகர்களுக்கும் நம்பிக்கைஉடையவனாக செயலாற்றுபவன். கேமரா முன் என்னால் எவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியுமோ அதை வெளிப்படுத்துகிறேன்.

 நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை. மற்ற விஷயங்களைபற்றி யாருக்கும் கவலை வேண்டாம். நல்லதோ கெட்டதோ, அசிங்கமோ எதுவாக இருந்தாலும் நான் நானாகவே இருக்கிறேன்.

இவ்வாறு தனுஷ் குறிப்பிட்டிருக்கிறார். தனுஷுக்கு நெருக்கமானவர்கள் யாரோ அவரைபற்றி பேசியதை அறிந்தே அவர் இதுபோன்ற கருத்தை வெளியிட்டிருப்பதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டுவிட்டரில் இதுபோல் வெளியிடும் கருத்து, ரசிகர்கள், மீடியாவை சென்றடையும். அதனால் மறைமுகமாக கருத்து சொல்லாமல் யாரை பற்றி சொல்கிறார் என நேரடியாகவே சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே என கோடம்பாக்கத்தார் கிசு கிசுக்கிறார்கள்.

எடை குறைப்பு சம்பந்தமாக ஒழிக்கப்பட வேண்டிய 15 கற்பனைகள்..!



அதிக உடற்பயிற்சியும் குறைவாக உணவு உட்கொள்ளும் பழக்கமும் எடை குறைப்பிற்கு வழிவகுக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! எனினும் உடல் எடையை குறைக்க விரும்பும் ஒருவர், எளிமையான ஆனால் தவறான பழக்கங்களை மேற்கொள்வதில் பொழுதை கழிப்பாரேயானால், அவர் அதே நிலையிலேயே தொடர நேரிடும்.

கட்டுக்கோப்பான உடல்தகுதியை பெற விரும்பும் ஆர்வலர்களான நாம், எடை குறைப்பின் கற்பனைக்கும், எடை குறைப்பின் உண்மைக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டினை புரிந்து கொள்ள வேண்டும்.உடலில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவும் 14 சிறந்த வழிகள்!

ஸ்கெட்ச் க்ளினிக்ஸின் எடை குறைப்பு மேலாண்மை குறித்த ஆலோசகர் ரிட்டேஷ் ஜேனி, எடை குறைப்பு சம்பந்தமான நடை முறையில் நாம் கொண்டிருக்கும் 15 கற்பனைகளை தகர்த்து கருத்து தெரிவிக்கிறார்.



கற்பனை: 1

உணவினை தவிர்ப்பது, எடை குறைப்பிற்கு சிறப்பான டயட் முறையாகும்

உண்மை

உணவினை தவிர்ப்பது நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் போக்கை மெதுவாக்குகிறது. உணவினை தவிர்க்கும் போது அது வளர்ச்சிதை மாற்றத்தின் தேவையை மெதுவாக்குவதன் மூலம் சேமிக்கப்பட்ட கலோரிகளை பாதுகாத்து உடலிலேயே தக்க வைக்கிறது. ஒரு வேளைக்கான உணவினை தவிர்த்து விட்டு, அடுத்த வேளை உணவினை எடுத்து கொள்ளும் போது, அதிக அளவிலான உணவினை உட்கொள்ள வாய்ப்பு அதிகம். ஒரு நாளில் சீரான இடைவெளியில் மூன்று முறை உணவருந்த வேண்டும். எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் உணவினை சிறு சிறு பகுதிகளாக பிரித்து கொண்டு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக உணவருந்துதல் சிறந்தது.


கற்பனை: 2

உடற்பயிற்சி தேவை இல்லை. உணவு கட்டுப்பாடு மட்டும் போதுமானது.

உண்மை

எடையை குறைக்க விரும்பும் ஒருவர் உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியையும் சேர்ப்பது அவசியமாகிறது. நமது பசியையோ அல்லது நமக்கு விருப்பமான அனைத்து உணவினையும் உண்ணும் ஆவலையோ நம்மால் தடை செய்ய முடியாது. ஆனால் உணவினை உண்பதால் கிடைக்கும் கலோரிகளை உடற்பயிற்சி செய்வதன் மூலம் எரிக்க நம்மால் முடியும். நமது தினசரி பழக்கங்களில் உடற்பயிற்சியை சேர்த்து கொள்வதன் மூலம், முயற்சி செய்து அடையக்கூடிய எடை குறைப்பினை நம்மால் பெற முடியும். இதய துடிப்பினை அதிகமாக்கும் வேகமான நடைபயிற்சியை தினமும் 30 நிமிடங்கள் மேற்கொள்வதன் மூலம் வியக்கத்தக்க அளவு எடையினை நம்மால் குறைக்க முடியும். உடற்பயிற்சியை முறையாக தொடர்ந்து மேற்கொள்ளும் போது ,நல்வாழ்வுக்கான சிறந்த உணர்வுகளையும் இதயம் மற்றும் குறைவான இரத்த அழுத்தம் ஆகியவற்றை நாம் கூடுதல் பலன்களாக பெறலாம்.



கற்பனை: 3

கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தீமை செய்வன.

உண்மை

உடல் என்கிற இயந்திரத்திற்கு முதன்மையான எரிபொருள் கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். கொழுப்பை போலவே, கார்போஹைட்ரேட்டுகளும் ஒவ்வொரு கிராமிலும் பாதி அளவு கலோரிகளை கொண்டுள்ளன. மக்களின் இன்றைய உணவு பழக்கத்தில் உள்ள சிக்கல் யாதெனில் அவர்கள் தங்கள் உணவினில், எளிமையான கார்போஹைட்ரேட்டுகளான சர்க்கரை மற்றும் உயர்ந்த ஃபுருக்டோஸ் கொண்ட கார்ன் சிரப் ஆகியவற்றை எடுத்து கொள்கின்றனர். குறைந்த கார்போஹைட்ரேட்கள் கொண்ட உணவினை எடுத்து கொள்ளும் போது, அவை மிக உயர்ந்த கலோரி கார்போஹைட்ரேட்களை அவை குறைக்கின்றன மற்றும் எடை குறைப்பிற்கும் வழி வகுக்கின்றன.

இந்த மாதிரியான எடை குறைப்பு நீடித்து நிலைப்பதில்லை. எனினும் குறைந்த கொழுப்பு மற்றும் பல பகுதிகளை கொண்ட சிக்கலான கார்போஹைட்ரேட்கள் கொண்ட உணவு பொருட்களான முழு தானியங்கள் மற்றும் ஸ்டார்ச் உணவு பொருட்கள் உடலுக்கு நன்மை செய்வன என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.



கற்பனை: 4

குறைவான கொழுப்பு மற்றும் கொழுப்புகளற்ற உணவுகளில் குறைவான கலோரிகள் காணப்படுகின்றன.

உண்மை

குறைவான கொழுப்பு அல்லது கொழுப்புகளற்ற உணவுப்பொருள் குறைந்த அளவு கலோரிகளை கொண்டோ அல்லது கலோரிகளே அல்லாத உணவு பொருளாகவோ தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குறைவான கொழுப்பினை கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிற பல உணவு பொருட்களிலுள்ள, கார்போஹைட்ரேட்கள் மற்றும் சர்க்கரை ஆகியன, கொழுப்புகள் நிறைந்த உணவு பொருட்களிலுள்ள, கலோரிகளையோ அல்லது அதற்கும் அதிகமான கலோரிகளையோ தரலாம். உதாரணமாக ஆப்பிளில் குறைவான கொழுப்பே உள்ளது. எனினும் அது குறைந்த அளவு கலோரிகளை கொண்டிருக்கும் என்று அர்த்தமில்லை. எனவே சாப்பிடும் முன் உணவிலுள்ள கலோரிகளை சோதித்து அறிந்து பின் சாப்பிட வேண்டும்.



கற்பனை: 5

உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது ஒரே நேரத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் பயிற்சி செய்தல் அவசியம்.

உண்மை

வெறும் 30 நிமிட நடைபயிற்சியே கலோரிகளை எரிக்க போதுமானது. தினமும் 30 நிமிடங்கள் பொழுதுபோக்குடன் கூடிய உலாவினை தினமும் 5 முறை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம். உடற்பயிற்சி வேடிக்கையுடன் கூடிய வகையில் அமைந்தால், அதில் ஆனந்தமாக ஈடுபடலாம். நாளடைவில் நேரத்தை அதிகப்படுத்தி, விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.



கற்பனை: 6

இரவில் தாமதமாக உணவருந்துதலோ அல்லது படுக்கைக்கு செல்லும் சற்று முன் உணவருந்துதலோ, எடை அதிகரிப்பை ஏற்படுத்தும்.

உண்மை

கலோரிகள் என்பவை எப்பொழுதும் கலோரிகளே! உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் அதிகமான உணவினை மேற்கொள்ளும் போது எடை அதிகரிப்பு உண்டாகிறது. தாமதமாக உணவினை உட்கொண்ட பின் படுக்கைக்கு செல்வது என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல! நாம் அதிகமாக உணவினை உண்ணும் போது நாம் உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை கொழுப்புகளாக சேமித்து வைக்கும் அற்புத ஆற்றல் படைத்தது. உடலுக்கு தேவைப்படும் கலோரிகளை விட அதிகமான கலோரிகளை உணவாக எடுத்து கொள்ள நேரிடுகிறது என்பதால் தான் பெரும்பாலான மக்கள் இரவில் தாமதமாக உணவருந்தக் கூடாது என்கின்றனர்.




கற்பனை: 7

குறைவான வளர்ச்சிதை மாற்றத்தால் உடல் எடை அதிகரிக்கிறது.

உண்மை

எடை அதிகரிப்பதால் உடலில் கொழுப்பு மட்டுமே அதிகரிப்பதில்லை அந்த கொழுப்பிற்கு உறுதுணையாக தசையும் உடலில் அதிகமாகிறது. உடல் எடையில் தோராயமாக 20% முதல் 30 % வரை வரை தசை ஆகும். தசை திசுக்கள் கலோரிகளை எரிக்கின்றன. எனவே அதிக எடையை கொண்டவரின் உடலில் வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக நடைபெறுகிறது. எனவே அதிக உடல் தசையை கொண்டவர் சிறப்பான வளர்ச்சிதை மாற்றத்தை கொண்டவர் ஆவார். உடலின் இயக்க செயல்பாடுகளால் எரிக்கப்படும் கலோரிகளை இது உள்ளடக்கியது அல்ல.




கற்பனை: 8

ஃபேட் டயட் நிரந்தர எடை இயல்பிற்கு சிறப்பான துணை புரிகிறது.

உண்மை

ஃபேட் டயட்கள் (சௌத் பீச் டயட், ப்ளட் க்ரூப் டயட், அட்கின்ஸ் டயட், கிளிசெமிக் டயட் போன்றவை). எடையை குறைக்கவும் மேலும் அதிகரிக்காமல் தடுக்கவும் சிறந்தது அல்ல. இந்த டயட்களினால் நாம் உடல் எடையை சிறிது இழக்கலாம். எனினும் இந்த வகையான டயட் அட்டவணைகள் கொண்டிருக்கும் குறைவான கலோரிகள் கொண்ட உணவினை தொடர்ந்து பின்பற்றுவது கடினமானதாகும். ஆரம்பத்தில் ஆர்வத்துடன் பின்பற்றும் மக்கள் நாளடைவில் களைப்படைந்து, மீண்டும் தங்கள் பழைய உடல் எடையை பெறுகின்றனர். நாள் ஒன்றுக்கு 800 கலோரிகளுக்கு குறைவான கலோரிகளை கொண்ட உணவினை உட்கொள்ளும் போது, அது இதய துடிப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கலாம். இது அபாயகரமானதாகும். ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து, அவற்றை மிதமான பகுதி உணவாக உண்டு, உடல் இயக்க செயல்பாடுகளை தினசரி வாழ்க்கை முறைக்கு பழக்கப்படுத்துவதன் மூலம் உடல் எடையை வாரத்திற்கு ½-2 கிலோ வரை குறைக்க முயற்சி செய்வதே உடல் எடையை குறைத்து, மேலும் அதை அதிகரிக்காமல் தொடரும் சிறந்த வழி என்று ஆராய்ச்சிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் போது, டைப்-2 நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது.




கற்பனை: 9

அதிக புரதம் கொண்ட உணவு வகைகளை உண்பது, உடல் எடையை குறைக்க சிறந்த வழியாகும்.

உண்மை

தினமும், அதிக புரதங்கள் கொண்ட இறைச்சி, முட்டை, சீஸ் போன்ற உணவு வகைகளிலிருந்து தேவையான கலோரிகளை பெறுவது என்பது சமச்சீரான உணவு திட்டம் அல்ல. அதிகமான கொழுப்பு நிறைந்த உணவினை உட்கொள்ளும் போது, இதய நோய் ஏற்படலாம். மலச்சிக்கலை ஏற்படுத்தும் குறைந்த அளவு நார்ச்சத்தினை கொண்ட சில காய்கறிகளையும், பழங்களையும் நாம் அதிகமாக உண்ணலாம். இதனால் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் குறைபாடு ஏற்படலாம். இதே போல உயர்ந்த அளவு புரதம் கொண்ட டயட் அட்டவணையை நாம் பின்பற்றும் போது, களைப்பு, பலவீனம், குமட்டல் ஆகிய குறைபாடுகள் தோன்றலாம்.




கற்பனை: 10

எடை அதிகரிப்பு மரபு சம்பந்தப்பட்டது, பெற்றோர் வழியாக அது குழந்தைகளை அடைகிறது.

உண்மை

கொழுப்பு ஜீன் என்று எந்த ஒரு ஜீனும் கிடையாது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களை மேற்கொள்ளும் பருமனான பெற்றோரிடமிருந்து. அவர்களின் குழந்தைகளும் அவற்றை கற்கின்றனர். இதனால் ஆரோக்கியமற்ற கேடு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள் குடும்பம் என்கின்ற மரத்தில் கடத்தப்படுகின்றன.




கற்பனை: 11

உடல் எடையயை குறைக்க விரும்புபவர் ஏரோபிக் என்று அழைக்கப்படும் கார்டியோ உடற்பயிற்சியை அதிக அளவு மேற்கொண்டாக வேண்டும்.

உண்மை

எடையை இழக்க முயற்சி செய்யும் போது நாம் உடலுக்கு ஏதேனும் அதிர்ச்சியை தர வேண்டும். அதாவது ஏதேனும் உடற்பயிற்சியை நம் உடல் மேற்கொள்ள வேண்டும். எந்த உடற்பயிற்சியும் செய்திருக்காத நிலையில் தினமும் ஓடுவதன் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் பயிற்சி நிச்சயம் நம் உடலை அதிர்ச்சிக்கு ஆட்படுத்தும். இதன் காரணமாக ஆரம்பத்தில் நாம் எடையையும் இழக்கலாம். எனினும் இழந்த எடையை எத்தனை நாளைக்கு தக்க வைக்க முடியும் என்பது கேள்வி குறியாகிறது. நாளடைவில் நாம் எடை குறைப்பின் உயர்ந்த நிலையை அடைய முடியும். அதன் பின்னர் தொடர்ச்சியான ஒரே மாதிரியான உடற்பயிற்சியின் காரணமாக மீண்டும் நமது பழைய எடையயை நாம் அடைய தொடங்குவோம். இவ்வாறு செய்வதற்கு பதிலாக யோகா, எடை தூக்கும் பயிற்சி மற்றும் கார்டியோ ஆகிய பல வகை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நமது எடை அதிகரிப்பதை கொண்டு, உடற்பயிற்சி செய்யும் முறையை சரி செய்யலாம். அதாவது நீடித்த எடை மேலாண்மையின் பொருட்டு செய்யும் உடற்பயிற்சியில் தேவைப்படும் மாறுதல்களை செய்வது அவசியமாகிறது.




கற்பனை: 12

வறுக்கப்படாத ஆனால் வேக வைத்த சிற்றுண்டிகளை எவ்வளவு வேண்டுமானாலும் விருப்பம் போல உண்ணலாம்.

உண்மை

பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியமானவை என்று சொல்லப்பட்டு, சந்தையில் அவை அளவிற்கு அதிகமாகவே கிடைக்கின்றன. மக்களும் தங்கள் அறியாமையில் எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இன்றி, வறுக்கப்பட்ட உணவு வகைகளை தாங்கள் உண்ணவில்லை என்ற மகிழ்ச்சியில் இந்த வகையான பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுகின்றனர். மேலோட்டமாக பார்க்கும் போது இந்த முறை சரியானதே!

ஆனால் அது எந்த மாதிரியான பேகிங் செய்யப்பட்ட உணவு வகையை நாம் உண்கிறோம் என்பதை பொறுத்தது. உதாரணமாக எண்ணெயில் பொறித்த சிக்கனுக்கு பதில் பேக்கிங் செய்யப்பட்ட சிக்கனை நாம் உண்ணலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அதிகப்படியான எண்ணெயை நம்மால் தவிர்க்க முடிகிறது.

இது ஆரோக்கியமான உணவு தேர்வாகும். ஆனால் மாறாக நாம் பேக்கிங் செய்யப்பட்ட சக்ரீஸ் அல்லது பேக்கிங் செய்யப்பட்ட பக்கர்வாடிஸ் ஆகியவற்றை உண்ணும் போது அவை கொண்டிருக்கும் உயர்ந்த அளவிலான சோடியம் மற்றும் மைதா ஆகியவற்றின் காரணமாகவும், மிக அதிகமாக பதப்படுத்தப்படுவதன் காரணமாகவும் அவை ஆரோக்கியமான உணவுகள் என்று சொல்வதற்கில்லை. நாம் எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கையில் இது போன்ற உணவு வகைகளை எடுத்து கொள்வோமேயானால், இவை நமது உடல் எடையை அதிகப்படுத்தவே செய்யும்.




கற்பனை: 13

எடையை இழக்க விரும்பும் போது, கூடுதல் ஊட்டச்சத்து துணைப் பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

உண்மை

எடையை குறைக்க ஊட்டச்சத்து துணை பொருட்களை எடுத்து கொள்வது பரிந்துரைக்கப்படுவதில்லை. முதலாவதாக எடை இழப்பு துணை பொருட்கள். நமது குடலின் இயக்க அதிர்வுகளை அதிகப்படுத்துகின்றன. இதனால் நம் உடலின் இயல்பான குடல் இயக்கங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் மூலம் நம் உடலில் வறட்சி மற்றும் பிற ஊட்டச்சத்து குறைபாடுகள் தோன்றுகின்றன. இரண்டாவதாக இன்னும் பிற ஊட்டச்சத்து துணை பொருட்கள் மலத்தை வெளியேற்றுவதன் மூலம், நாம் உண்ணும் டயட் உணவிலுள்ள அனைத்து கொழுப்புகளையும் அழிக்கின்றன. நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து கொழுப்பு அமிலங்களையும் நாம் இழக்க நேரிடுவதால், இது பரிந்துரைக்கபடுவதில்லை.



கற்பனை: 14

வாழைப்பழங்கள் எடை குறைப்பில் பங்கு கொள்ள முடியாது.

உண்மை

ஆரோக்கியமான உணவு அட்டவணையில் வாழைப்பழங்களும் இடம் பெறுகின்றன. மேலும் இது எடை குறைப்பில் நாம் ஈடுபட்டிருக்கும் போது கொழுப்பினை குறைக்கவும் செய்கின்றன. எனினும் எந்த ஒரு உணவு பொருளும் தானாகவே ஒருவருக்கு எடையை இழக்க துணை புரிவது இல்லை. எடையை இழக்கக் விரும்பும் ஒருவர் பற்றாக்குறையான கலோரியை கொண்டவராக இருக்க வேண்டும் அதாவது ஒரு நாளைக்கு தேவையான கலோரிகளை விட அதிகமாக பெறப்பட்ட கலோரிகளை எரிக்க வேண்டும். 10% முதல் 15% வரையிலான கலோரி பற்றாக்குறை சிறந்த முறையில் எடை குறைப்பில் செயலாற்றுகிறது. சிறந்த கலோரி பற்றாக்குறையை கொண்டவர், கொழுப்பை இழப்பதை விட தேவைக்கு அதிகமாக உள்ள தசையை இழக்கிறார்.



கற்பனை: 15

போதை உணவு நீக்கப்பட்ட உணவு திட்டமே எடை குறைபிற்கு சிறந்தது.

உண்மை

தொடர்ச்சியாக பல வாரங்கள் இரவில் பணி புரிந்து ஜங்க் ஃபுட், கூடுதலான செயற்கை உணவுகள் என்று சொல்லப்படுகிற உணவு வகைகளை உட்கொள்ளும் போது ஏற்படுகிற களைப்பினால் மனதளவில் நீங்கள் எடையை இழந்து விட்டது போல உணர்வீர்கள். திட்டமிடப்பட்ட சமசீரான போதை நீக்க உணவு திட்டம் உங்களில் தந்திரம் புரிந்திருக்கிறது. இங்கே சமசீரான போதை நீக்க உணவு திட்டம் என்பது வெறும் பழரசமோ அல்லது சிறந்த தூய்மை மற்றும் நீர் போன்ற நம்மை பலவீனமாக்கும் போதை நீக்கும் உணவுகளல்ல. சமசீரான உணவு திட்டம் என்பது பதப்படுத்தப்பட்ட ட்ரான்ஸ்பரண்ட் கொழுப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அடங்கிய உணவு வகைகளை தவிர்ப்பதாகும்

குமுதம் - பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு..!



“குமுதம் பத்திரிகை குறைவான விலையில் அதிகமான பக்கங்களை வெளியிடும்போது, உங்க பத்திரிகை குறைவான பக்கங்களை சற்று அதிக விலையில் விற்பது சரியா?” என்ற கேள்வியை புதிய கலாச்சாரம் பேருந்து விற்பனையின் போது தோழர்கள் அவ்வப்போது சந்திக்க நேரிடும். குமுதத்தின் மலிவு விலை இரகசியம் என்ன?

ஏற்கனவே குண்டுப் பத்திரிகையான குமுதம் தற்போது பெருங்குண்டு பத்திரிகையாக மாறியிருக்கிறது. தனது ‘சைஸ்’ பெருத்ததையே காலத்திற்கேற்ப மாறிக் கொள்வதாய் கூறும் குமுதம், தனது லேட்டஸ்ட் கொள்கைப் பிரகடனத்தைக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறது.

“குமுதம் இனி ஒரு சிலருக்கு மட்டுமல்ல, எல்லொருக்காகவும் வெளிவரும். சமீபத்திய நேஷனல் ரீடர்ஷிப் சர்வேயின்படி குமுதம் படிக்கும் வாசகர்கள் 50 லட்சம். இந்தியாவின் முதல் 10 பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகை குமுதம் மட்டும்தான்”.

“இந்தச் சாதனையின் அடிப்படை வாசகர்களாகிய உங்களின் ஆதரவுதான். அந்த ஆதரவு எங்களை நெகிழச் செய்து, நன்றியுடன் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. இனி, 160 பக்கங்களோடு குமுதம் வெளிவரும். ஒவ்வொரு பக்கமும் புதிதாக இழைத்து, உழைத்து, கவனித்துச் செதுக்கப்படும். விலையையும் அதிகப்படுத்தியிருக்கிறோம். இம்மாற்றம் ஒரு ஆரம்பம்தான். தொடருணும் உங்கள் ஆதரவுதான்.

- அன்புடன் ஆசிரியர்.

ஹிந்து பேப்பர், ஃபில்டர் காபி, பிரஷர் குக்கர், கேஸ் அடுப்பு போன்ற நடுத்தர வர்க்க பட்டியலில் குமுதமும் உண்டு. இரண்டு தலைமுறையாக, படித்த தமிழர்களின் குடும்ப உறுப்பினராக குமுதம் மாறிவிட்டது.

குமுதம் மட்டுமே தனது தோற்றத்திலிருந்து இன்று வரை தனது ஃபார்முலாவை மாற்றாமல் தொடர்கிறது. பழைய கள்ளை பானையிலிருந்து, பாலிதீன் பைக்கு மாற்றியதுதான் குமுதம் காலத்திற்கேற்ப மாறுகிறது என்பதின் பொருள். குமுதம் தனது 50 லட்சம் வாசகர்களுக்காக நன்றியுடன் கடினமாக உழைப்பது என்பதின் பொருள் அந்த ஃபார்முலாவைக் காப்பாற்றுவதுதான். அதைப் புரிந்து கொள்ளும்போது குமுதத்தின் 160 பக்கங்களும் கை நிறையக் கிடைக்கும் கழுதை விட்டைகளே என்பது தெரியவரும்.

ஆசிரியர் குழு ஏனைய செட்டிக் குடும்பங்கள் வட்டி, மளிகை, வியாபாரம் செய்து வந்த போது, 1943 ஆம் ஆண்டு குமுதத்தைத் துவக்கினார் எஸ்.ஏ.பி. செட்டியார். பகவத் கீதையை அடிக்கோடிட்டு படித்து ரசிக்கும் ஆன்மீகவாதியான செட்டியார், நடிகைகளின் அங்கங்களை ஒப்பிட்டு ரசிக்கும் லவுகீகவாதியாகவும் இருந்தார். இவரது பக்தி + செக்ஸ் கலந்த சிட்டுக் குருவி லேகியம்தான் இன்று வரையிலும் குமுதத்தின் இளமையைக் காற்றாற்றுகிறது. கைலாயம் சென்று விட்ட செட்டியாருக்கு லேகியத் தயாரிப்பில் உதவி செய்தவர்கள் ஜ.ரா.சுந்தரேசன், ரா.கி.ரங்கராஜன் ஆகியோர்.
செட்டியாருடன் பங்குதாரராகச் சேர்ந்த பார்த்தசாரதி ஐயங்கார்தான் குமுதத்தின் பதிப்பாளர்.

நெற்றியில் நாமமிடும் தீவிர வைஷ்ணவாளாக இருந்தாலும், துட்டு விசயத்தில் இவரிடம் யாரும் நாமம் போட முடியாத அளவுக்கு கறாரான வியாபாரப் பேர்வழி. 90களின் தமிங்கல யுகத்திற்கேற்ப குமுதத்தை மாற்றியவர்களில் சுஜாதாவும், மாலனும் முக்கியமானவர்கள். ‘என்னால்தான் சர்குலேஷன் உயர்ந்தது’ என்று குமுதத்தின் பங்குதாரர்களாக மாற விரும்பியதால் இந்த முன்னாள் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வெளியாட்களை ஆசிரியராகப் போட்டால்தானே இந்தத் தொல்லை என அமெரிக்காவில் மருத்துவத் தொழில் புரியும் செட்டியாரின் மகன் ஜவகர் பழனியப்பனையே ஆசிரியராக்கியிருக்கிறார்கள்.

குமுதத்தின் ஆசிரியர் குழுவினர் வார இறுதியில் உட்லண்ட்ஸ் ஓட்டலில் டிபன் சாப்பிட்டு மாலையில் மெரினாக் கடற்கரையில் அமர்ந்து  அடுத்த வார இதழின் செய்திகளை விவதிப்பார்களாம். கடந்த 53 ஆண்டுகளாக வெளிவந்த 2809 குமுதக் குட்டிகளைப் பெற்றெடுத்த பாவம் மெரினாக் கடற்கரையையே சாரும்! ஆயினும் இதே அரட்டையைத்தான் கிராமத்தின் பணக்காரப் பண்ணைப் பெரிசுகள், திண்ணையில் தொந்தி புரள, வாயில் குதப்பிய வெற்றிலையுடன், ‘அடுத்தாத்து அம்பு
ஊத்தை கவனிச்சேளா ஓய்’ என்று பல நூற்றாண்டுகளாய்ச் செய்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இலாபமே துணை வாரம் 5 லட்சம் பிரதிகள் என ஆண்டுக்கு 265 இலட்சம் குமுதங்கள் விற்பனையாகின்றன. குமுதத்தின் விலையான 5 ரூபாயில், அதன் அனைத்து விதமான செலவுகளையும் கணக்கிட்டால் அடக்க விலை அதிக பட்சமாக ரூ.3.50 வரும். எனில் ஒரு இதழின் லாபம் 1.50. ஆண்டுக்கு 3 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய். குமுதத்தின் ஓரிதழில் 30 பக்கங்கள் விளம்பரத்திற்காக ஒதுக்கப்படும். அட்டை, வண்ணம், சிறப்பு என எல்லா விளம்பரங்களையும் கணக்கிட்டால் ஒரு பக்கத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் வரலாம். இவ்வகையில் வருடத்திற்கு 11 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என சிறப்பிதழ்களின் கூடுதல் வருமானத்தை சேர்த்தால் மொத்த ஆண்டு வருமானம் 20 கோடியைத் தாண்டும். ரிப்போர்ட்டர், மாலைமதி, பக்தி ஸ்பெஷல் போன்ற குமுதம் குடும்ப பத்திரிகைகளின் வருமானம் தனி.

குமுதத்தின் இட ஒதுக்கீடு விளம்பரங்கள் போக உள்ள 130 பக்கங்களில் சராசரியான இட ஒதுக்கீடு தலைப்பு வாரியாக பின் வருமாறு. சமூகம் - 5, அரசியல் - 15, சினிமா - 19, தொலைக்காட்சி -5, இசை -1.5, விளையாட்டு - 2, மருத்துவம் - 5, வாசகர் கடிதம் - 2, உலகச் செய்தி - 2, ஜோக் - 3, சிறுகதைகள் - 9, ஒரு பக்க கதைகள் - 4, புதிர் போட்டி - 2, தொடர் கதைகள் - 15, உணவு - 2, சுற்றுலா - 4, பேஷன் - 4, வேலை, கல்வி - 3, கவிதை - 2, வியாபாரம் சுய முன்னேற்றம் - 5, நூல் அறிமுகம் - 1, பக்தி ஆன்மீகம் - 5, அரசு கேள்வி பதில் - 2, இதரவை - 12.5 என ஒதுக்கப்படுகிறது. குமுதல் ஒரு ஃபேன்ஸி ஸ்டோரின் மினுமினுப்பைக் கொண்டிருக்கும். இத்தனை சமாச்சாரங்கள் இருந்தாலும் அத்தனையிலும் குமுத்தின் லேகியம் கலந்திருக்கும்.

இட ஒதுக்கீட்டில் எழுத்து ஒதுக்கீடு படங்கள் இல்லாமல் குமுதத்தின் ஒரு பக்கத்தில் 200 வார்த்தைகள் இடம் பெறும். குமுதத்தின் எல்லாக் கட்டுரைகளிலும் செய்தி போன்ற அரட்டை, ரசனை நடை, கிசுகிசு நடை, புகைப்படம், ஓவியம், வடிவமைப்பு இடம் ஆகியவை இடம் பெறும். குமுதத்தின் கதைகளுக்குரிய 30 பக்கங்களை கழித்து மீதியுள்ள 100 பக்கங்களைப் பிரித்துப் பார்ததால்,

செய்தி, அரட்டை = 40 பக்கங்கள், படங்கள் = 36 பக்கங்கள், கிசு கிசு நடை = 23 பக்கங்கள் என வரும். இதில் வாசகர்கள் ஓரளவிற்கேனும் துளியூண்டாவது செய்திகளைத் தெரிந்து கொள்வது 40 பக்கத்தில் மட்டும்தான். அதாவது 8000 வார்த்தைகள். இதைப் புதிய கலாச்சாரத்தின் வார்த்தை - பக்க அளவிற்கு மாற்றினால் 13 பக்கங்கள் வரும்.
இந்த 13 பக்க செய்திகளைத் தேர்வு செய்து, கண்டு, கேட்டு, படித்து, சுட்டு, மொழிமாற்றி, இன்னும் மூளையை கசக்கி எழுதினாலும் - ஒருமனித மூளை உழைக்க வேண்டியது அதிக பட்சம் 24 மணிநேரம் மட்டும்தான். இதையே கிசுகிசு - லேகியம் கலந்து ஊதிப்பெருக்கி எழுத கூடுதலாக ஒரு 24 மணிநேரம் வேண்டும். ஆனால் இதற்காகவே புரசைவாக்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டி, எல்லா நவீன வசதிகளையும் ஏற்படுத்தி, ஒரு பெரும்கூட்டமே வேலை செய்கிறது என்றால் தமிழன் செய்த பாவம்தான் என்ன?

புகைப்படங்கள் குமுதத்தின் கதைகளில் இடம்பெறும் ஓவியங்களைக் கழித்துப் பார்த்தால் சுமார் 35 பக்கங்களை நிரப்பும் அளவுக்கு புகைப்படங்கள் வருகின்றன. இதில் சினிமா மனிதர்கள் - கவர்ச்சிப் படங்கள் 15 பக்கம், பிரபல அரசியல் தலைவர்களின் விதவிதமான கோணங்கள் 6 பக்கம், ஊருக்கு உபதேசம் செய்யும் தமிழக சமூகப் பிரபலங்கள் 6 பக்கம், இயற்கைக் காட்சிகள் 4 பக்கம், பொது மக்கள் 3 பக்கம் எனவும் இடம் பெறுகின்றனர். அதிலும் பொது மக்கள் ஸ்டாம்ப் சைசில் கறுப்பு-வெள்ளையில் தோன்றுவார்கள். சினிமாத்தோல் மட்டும் பளபளப்பு காகிதத்தில் பல வண்ணத்தில் முழு- அரை- கால் பக்க அளவுகளில் இடம்பெறும்.

ஒரு கட்டுரையின் மையமான விசயத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில்தான் புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் வடிவமைப்பு போன்றவை இடம் பெறும். ஆனால் குமுதத்தின் குறிப்பிட்ட கட்டுரைக்குள் நுழைவதற்கு ஆசை காட்டி அழைப்பதற்கே இவை பயன்படுகின்றன. இன்னும் பளிச்சென்று புரிய வேண்டுமானால் தரங்குறைந்த மேக்கப்புடன் தெருவோரத்தில் நிற்கும் விலைமாது ‘வாரியா’ என்றழைப்பதைத்தான் குமுதத்தின் புகைப்படங்களும் உணர்த்துகின்றன.
மேலும் சினிமா, பெண், மேட்டுக்குடி வாழ்க்கை, பேஷன் ஆகியவற்றின் புகைப்படங்கள் ஏற்படுத்தும் அழகு பற்றிய படிமங்கள், குமுதத்திற்கு பிரியாணி போடும் விளம்பங்களுக்கு தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.
விளம்பரங்கள்

‘பெண்களின் கனவு! எல்லா வயதிலும் பெண்களின் கனவு! ஆரோக்கியம்! கட்டுடல்! அழகு! - மெடிமிக்சின் சுந்தரி கேப்சூல் விளம்பரத்தின் வாசகம். குமுதம் உருவாக்க விரும்பும் மனிதர்களின் சாரத்தை ஒரு கவிதை போல 30 பக்க விளம்பரங்களும் தெரிவிக்கின்றன. நுகர்பொருள் நடுத்தர வர்க்கத்தையும் குறிப்பாக பெண்களையும் குறி வைத்து ஏவப்படும் இந்த விளம்பரங்கள் குமுதத்தின் சாரத்தை எளிமையாக புரியவைக்கும். பற்பசை, சோப், தேநீர், ஊறுகாய், காஃபி, பட்டு, பாத்திரங்கள், ஆன்மீகம், அனாதை இல்லம், ஆணுறை, உடலுறவு மாத்திரைகள், பைனான்ஸ், எல்.ஐ.சி. பாலிசி, கம்ப்யூட்டர் கல்வி, கருவளையம், ப்ரா, கூந்தல் தைலம், உடல் மெலிவு மாத்திரைகள், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், கூப்பன் காட்டினால் தள்ளுபடி, மெகா பரிசுப் போட்டி என்று நிலைக்கண்ணாடி முன், தன்னையும், தன் வாழ்க்கையையும் பார்க்க, ரசிக்க, அடைய வாசகர்களை பெண்களைப் பயிற்றுவிக்கின்றன.

குமுதவியல் குமுதம் முதலாளிகள் உருவாக்கியிருக்கும் குமுதவியல் என்ற இரசனைதான் அவர்கள் கட்டிக்காத்து வரும் ஓரே சொத்து. அரசியல், ஆன்மீகம் தொடங்கி, செக்ஸ், சினிமா வரை ஆட்சி செய்யும் அந்த இரசனை, மூளையின் சிந்தனை நரம்புகளை மக்கிப் போகவைக்கிறது.

குமுதத்தின் அட்டையில் 80 சதவீதம் திரைப்பட நடிகைகள் கவர்ச்சியுடன் இடம் பெறுவர். அந்தக் கவர்ச்சியின் பின்னணியில் அரசியல் - சமூகக் கட்டுரைகளின் தலைப்பு பளிச்சென்று தெரியும். வெள்ளை பனியன் அணிந்த சிம்ரனின் இடையில் ஃப்ளோரசன்ட் ஆரஞ்சு வண்ணத்தில் தீண்டாமைக் கிராமங்கள் என்றொரு அட்டை சமீபத்தில் வெளிவந்தது. தீண்டாமைக் கட்டுரைக்கு தாழ்த்தப்பட்ட மக்களையோ, சேரிகளையோ போடுவதற்குப் பதில் சிம்ரனைப் போட்டிருப்பது ஆத்திரமாக அருவருப்பாக இல்லையா? அடுத்த வாரத்தின் வாசகர் கடிதத்தில் “சினிமாவில் கூட சிம்ரன் இத்தனை அழகாக இல்லை” என்று ஒருவர் எழுதுகிறார். இதுதான் குமுதவியலின் சாதனை.

எழுத்தில் குமுதம் செய்வதை காட்சியாக 24 மணிநேரமும் சன்.டி.வி செய்கிறது. அதனால் ஓரளவு முற்போக்கு - அரசியல் ஆர்வலர்களின் வட்டத்தை இழுப்பதற்கு கரூரில் தாலி கட்டிய சிறுமிகள், மதுரையில் விபச்சாரம் செய்யும் சிறுமிகள், வீட்டை விட்டு ஓடிவரும் சிறுவர்கள், மேலவளவு தீண்டாமை போன்ற செய்திகளை குமுதம் வெளியிடுகிறது. இந்தத் தூண்டிலில் சிக்கும் புதியவர்கள் ஏனைய பக்கங்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். குமுதத்தின் ஆன்மீகம், வேலை வாய்ப்பு, கல்விப் பயிற்சி, உடல்நலம் போன்ற பிரிவுகளுக்கும் இது பொருந்தும். தத்தமது நோக்கத்திற்காக குமுதத்தை திறப்பவர்கள், மூடும்போது மூளை மரத்த பிண்டங்களாக மாற்றப்படுவதுதான் குமுதவியலின் மகிமை.

அரசியலையும், சமூகவியலையும் உருவிவிட்டு தலைவர்களது பழக்கவழக்கங்கள், உறவுகள், மோதல்கள் போன்றவற்றைத் தருவதுதான் குமுதத்தின் அரசியல் கட்டுரைகள். “வைரமுத்துவுடன் திடீரென்று மாமல்லபுரம் செல்கிறார் கலைஞர். ரஜினி, கமல், அண்ணா, பெரியார் பற்றி விவாதிக்கும் கலைஞர், பொறித்த மீனை வைரமுத்துவுக்குப் போடச் சொல்லும் கலைஞர், வீட்டு நாயை சமாதானப்படுத்துமாறு செல்போனில் அழைக்கும் தயாளு அம்மாளுடன் பேசும் கலைஞர் - இலையே கலைஞரின் மாமல்லபுரம் விசிட் பற்றிய 4 பக்கக் கட்டுரைச் செய்திகள்.
இப்படி தலைவர்களது சேட்டைகள், பேட்டிகள், சவுடால்கள், சந்தர்ப்பவாதங்கள் அனைத்தையும் மறக்கச் செய்து அவர்கள் பல் தேய்த்து - பழம் தின்ற கதைகளை ரசனையுடன் வெளியிடுவதில் குமுதம் ஒரு முன்னோடி.

காந்தி ஜயந்தியை நினைவு கூறும் குமுதம், பொள்ளாச்சி பூச்சி மருந்து வியாபாரி ஒருவர் காந்தி தபால் தலைகளைச் சேகரித்திருப்பதை தெரிவிக்கிறது. பொங்கல் சிறப்பிதழ் ஒன்றில், தமிழே தெரியாத பம்பாய் நடிகை பொங்கலிடுவதையும், கோலமிடுவதையும், பொங்கல் பற்றிய அவரது தத்துவங்களையும் வெளியிடுகிறது. காதல் சிறப்பிதழ் ஒன்றில், சேலம் அருகே உள்ள கிராமத்தினர், ஓடிப்போகும் காதலர்களை மீட்டு வந்து சுடுகாட்டில் தாலிகட்ட வைப்பதாக ஒரு செய்தி. இங்கே காந்தியும், காதலும், பொங்கலும் கீழான ரசனையில் ஜொலிப்பதுதான் குமுதவியலின் புதுமை.

முன்அட்டை முதல் பின் அட்டை வரை எல்லா பக்கங்களிலும் சினிமா விரவியிருக்கும். நடுத்தர வர்க்கத்து பெண்மணிகள் சமைத்து ஓய்ந்த நேரங்களில் பேசிக் கொள்ளும் ஒரே சமூக விசயம் குமுதத்தின் சினிமா செய்திகள்தான். அரசியல் தலைவர்களை விட சினிமா நாயகிகளின் பழக்க வழக்கங்கள் நுணுக்கமாகப் பதியப்படும். சினிமாக் குமுதம்தான் வாசகர்களின் ரசனை, படிப்பு, கண்ணோட்டம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது.

மோனிகா லிவின்ஸ்கி குண்டான செய்தியும், டென்னிஸ் நட்சத்திரங்கள் அகாஸி - ஸ்டெபிகிராப் காதல் படங்களும் அயல்நாட்டு செய்திகளாய் அணி வகுக்கும். ‘குடும்ப விழாவில் உங்களை ரகசியமாக பெண் பார்க்கும் போதும்’, விருந்திற்கு வந்த இளைஞர் கூட்டம் உங்கள் மார்பிலிருந்து கண்ணை அகற்றாமல் இருப்பதற்கும் போட வேண்டிய உடைகள், அழகுக் குறிப்புகள் ‘பேஷன் வாட்ச் பகுதியில் இடம் பெறும். இவையெல்லாம் விபச்சாரத்திற்கான வழிமுறைகள் என்பது படிக்கும் பெண்களுக்கு தோன்றாது.

பக்திக் கட்டுரையில் தஞ்சாவூர்க் கோவில்களின் புராண புரட்டுக் கதைகள் குமுதவியலின் திரைக்கதை வடிவில் வெளிவரும். சென்று வரும் செலவு, பாவ - பரிகார பட்டியல், கதை சொல்லும் நீதி, குறிப்பிட்ட கடவுள் எந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார் என்று குறிப்பும் உண்டு. ‘இந்து’ உணர்வை எழுப்பப் போராடும் இந்து முன்னணி கூட இவ்விசயத்தில் குமுதத்திடம் பிச்சை எடுக்க வேண்டும்.

பக்திக்குப் பிறகு வியாபாரம், சுய முன்னேற்றம், இரண்டரை லட்சம் முதல் போட்டு 73,000 கோடியில் நிற்கும் திருபாய் அம்பானியின் கதை ஆங்கிலப் படத்தின் டிரெய்லர் போல வரும். மோசடியால் முன்னேறிய இத்தகைய ‘பிசினஸ் மகாராஜாக்கள்’ குமுதத்தில் கைபட்டு உழைப்பால் உயர்ந்த உத்தமர்களாக காட்சியளிப்பார்கள்.

பாலுறுவு இச்சையைத் தூண்டிவிட்டு வேறு ஒன்றில் முடியும் 1 பக்க கதைகள், கள்ள உறவு தத்துவப் புகழ் பாலகுமாரன் போன்றோரின் தொடர்கதைகள் போன்றவை குமுதவியலின் கதை இலாகாவில் தவறாமல் இடம் பெறும்.


இப்படித்தான் குமுதத்தின் ஒவ்வொரு பக்கமும் உழைத்து, இழைத்து , செதுக்கி உருவாக்கப்படுகிறது. சர்ரியலிசம், மாஜிகல் ரியலிசம், போஸ்ட் மாடர்னிசம் போன்ற, சிறு பத்திரிகைகள் மண்டை பிளக்க விவாதிக்கும் இசங்களின் நடைமுறை உதாரணம் குமுதம் மட்டும்தான்.

வாழ்க்கையை விளையாட்டாக, வேடிக்கையாக, ரசனையாகப் பார்க்க வைக்கும் குமுதவியல், வாழ்க்கையைத் தீவிரமாகப் பார்க்க விடாமலும் வினையாற்றுகிறது. நினைவில் நிற்காத குமுதத்தின் பக்கங்கள், நினைவில் நிறுத்த வேண்டிய பிரச்சினைகளை மறப்பதற்கும் கற்றுக் கொடுக்கிறது. குமுதத்தின் நொறுக்குத் தீனி ரசனை, வாழ்க்கை பற்றிய சமூக மதிப்பீடுகளை நொறுக்குகிறது.

தமிழ் சினிமாவிற்கு முன்பு விதிக்கப்பட்ட கேளிக்கை வரி குமுதத்திற்கு கிடையாது. குமுதத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் தபால் இரயில் சலுகைக் கட்டணங்களின் மதிப்பு பல கோடியிருக்கும். பொதுத் துறைகள் நட்டமடைய குமுதமும் ஒரு காரணம் என்பதை தொழிலாளிகள் உணர வேண்டும்.

மரங்களை வெட்டிக் கூழாக்கித்தான் செய்திக்காகிதம் தயாரிக்கப்படுகிறது. ஒரு வருட குமுதத்திற்கு தேவைப்படும் காகிதம் பல லட்சம் மெட்ரிக் டன்னாகும். குமுதத்திற்காக உலகெங்கும் லட்சக்கணக்கான மரங்கள் ஆண்டு தோறும் அழிக்கப்படுகின்றன.

குமுதத்திடமிருந்து காட்டின் இயற்கை வளத்தையும், நாட்டின் சிந்தனை வளத்தையும் காப்பாற்றுங்கள் !

ஆபாசப் படங்களை பார்த்துப் பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...!




[ படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும் வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும் உதவும்; உயிரை கொல்லவும் உதவும்.

ஆபாச படங்களுக்கு அடிமையான பலரும், பிரச்னை நம்மை கை மீறி போய்விட்டது; ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே பிரச்னையை கூறி தீர்வு காண முன்வருகின்றனர்.

ஆபாசமான வலைதளங்களுக்குள் ஒரு சிறுவன், சிறுமி கூட உள்ளே புகுந்து விட முடியும் என்பது சர்வதேசத்துக்குமான சவால் என்றாலும், நம்முடைய கலாசாரத்துக்கு எதிராக நடத்தப்படும் மாபெரும் யுத்தம் என்பதை மறுக்கவே முடியாது. ஆபாச படங்களை அடிக்கடி பார்க்கும்போது, அதற்கு அடிமையாவதுடன் ஆண், பெண் நட்புக்கு இடையே எல்லை மீறவும், தூண்டுதலாக இருக்கும்.

மும்பை, டில்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மாணவர்களுடன், கல்வி, விளையாட்டு, பொது அறிவு போன்ற விஷயங்களில் போட்டி போட வேண்டிய மாணவ சமுதாயம், இத்தகைய விஷயங்களில் பெருநகரத்து மாணவர்களுக்குப் போட்டியாக வளர்வதற்கு முழு முதற்காரணம், பெற்றோர்கள்; அடுத்ததாக, பள்ளி வளாகம்; இறுதியாக வெளிச்சூழல். பெற்றோர் தரும் அதீத சுதந்திரம், பள்ளி நிர்வாகங்களின் பண வேட்டை, "டிவி' போன்ற ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றுடன், சமுதாய ரீதியான கட்டுப்பாடுகள் தளர்ந்து போயிருப்பதும் ஒரு காரணம்.

  ஆபாசப் படங்களை பார்த்துப் பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...!

""டாக்டர்! நாங்க நாலு பேரும், கொஞ்ச நாளைக்கு முன்னால, கேரளா போய் "ஜாலியா' இருந்துட்டு வந்தோம்;

இப்போ, எங்களுக்குப் பயமா இருக்கு சார், எங்களுக்கு எச்.ஐ.வி., டெஸ்ட் பண்ணணும்...''வார்த்தையை முடிப்பதற்குள் சொன்னவனை ஓங்கி அறைந்தார் அந்த டாக்டர்; மற்ற மூன்று பேரும் ஓரடி பின் வாங்கினர். காரணம், அவர்கள் நால்வரும் கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். நகரின் முக்கிய மருத்துவமனையில் பணியாற்றும் பாலியல் மருத்துவரின் அறையில் நடந்தது இந்த நிகழ்வு. இதற்கு மேல்தான் காத்திருக்கிறது அதிர்ச்சி.

மாணவர்கள் ஏதோ பயத்தில் வந்திருக்கின்றனர் என்று நினைத்து, அவர்களை பரிசோதித்துப் பார்த்த போது, அவர்களில் ஒரு மாணவனுக்கு எச்.ஐ.வி., பாசிட்டிவ் என்று தெரியவந்தது.""எத்தனையோ எச்.ஐ.வி., பேஷன்ட்களுக்கு நான் "ட்ரீட்மென்ட்' கொடுத்திருக்கேன். இந்த வயசுல, இப்பிடி வந்து நின்ன பசங்க இவங்க மட்டும்தான். நம்ம கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் எங்கே போகுதுன்னு நினைச்சப்ப, எனக்கு நாலு நாளா தூக்கமே வரலை,'' என்று முடித்தார் அந்த டாக்டர்.

கோவையிலுள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மேல் தட்டு மாணவர்கள் பலரிடம், அதி நவீன மொபைல் போன்கள் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன. அவற்றில், அதிவேக இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கிறது. இல்லாவிட்டால், இன்டர்நெட்டில் இருந்து அவர்களே, இறக்கி வைத்துக்கொள்கின்றனர். காசைக் கொட்டுவதற்கு, இவர்களின் பெற்றோர் தயங்குவதே இல்லை.இந்த வாழ்க்கை முறைதான், இந்த மாணவர்களை மரணத்தின் விளிம்பு வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது.

கலாசாரத்தின் ஆணிவேர்களில் அமிலத்தை ஊற்றும் இந்த தகவல் தொடர்பு சாதனங்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, இந்த தேசத்தின் நாளைய மன்னர்களுக்கு சவக்குழிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றன.பல மாதங்களாக ஆபாச படங்களை காட்சிகளாகப் பார்த்துப் பழகி, அதற்கு அடிமையாகி விட்ட நிலையில்தான், இந்த மாணவர்கள் அடுத்த கட்ட முயற்சிக்குப் போயிருக்கின்றனர். இவர்களைப் போலவே, இன்றைக்கு ஏராளமான மாணவர்கள் பிரவுசிங் சென்டர்களுக்குள் புகுந்து, வாழ்வுக்கான அழிவைத் தேடிக் கொள்கின்றனர்.

விளையாட்டாக "வீடியோ கேம்ஸ்'களை மட்டுமே ரசித்த பள்ளி மாணவர்கள், ஆபாச வலைதளங்களையும் அடிக்கடி நலம் விசாரிக்கின்றனர். சர்வதேச அளவில் மென்பொருள் உருவாக்கத்தில் சாதனை படைத்து இந்திய இளைய சமுதாயம்தான், மற்றொரு புறத்தில் இப்படி ஆபாசங்களில் அழிந்து போவது வேதனைக்குரிய விஷயம்.

மும்பை, டில்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மாணவர்களுடன், கல்வி, விளையாட்டு, பொது அறிவு போன்ற விஷயங்களில் போட்டி போட வேண்டிய மாணவ சமுதாயம், இத்தகைய விஷயங்களில் பெருநகரத்து மாணவர்களுக்குப் போட்டியாக வளர்வதற்கு முழு முதற்காரணம், பெற்றோர்கள்; அடுத்ததாக, பள்ளி வளாகம்; இறுதியாக வெளிச்சூழல்.பெற்றோர் தரும் அதீத சுதந்திரம், பள்ளி நிர்வாகங்களின் பண வேட்டை, "டிவி' போன்ற ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றுடன், சமுதாய ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்ந்து போயிருப்பதும் ஒரு காரணம்.

குறிப்பாக, பிரவுசிங் சென்டர்களுக்கு எந்தவித கண்காணிப்பும் இல்லை. விபசாரத்தில் பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.

ஆபாசமான வலைதளங்களுக்குள் ஒரு சிறுவன், சிறுமி கூட உள்ளே புகுந்து விட முடியும் என்பது சர்வதேசத்துக்குமான சவால் என்றாலும், நம்முடைய கலாசாரத்துக்கு எதிராக நடத்தப்படும் மாபெரும் யுத்தம் என்பதை மறுக்கவே முடியாது. ஆபாச படங்களை அடிக்கடி பார்க்கும்போது, அதற்கு அடிமையாவதுடன் ஆண், பெண் நட்புக்கு இடையே எல்லை மீறவும், தூண்டுதலாக இருக்கும்.

இந்நிலையில், இலவச லேப்-டாப்களை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அப்போது, நிலைமை இன்னமும் விபரீதமாகிவிடும். எனவே, மாணவர்கள் தேவையில்லாத வலைத்தளங்களுக்குள் நுழையும்போது, இணைப்பு கிடைக்காதவாறு செய்ய வேண்டும்; மெமரி கார்டு, பென்டிரைவ் கூடாது. வளர் இளம் பருவத்திலுள்ள குழந்தைகள் லேப்-டாப், மொபைல் போனுடன் அதிக நேரம் செலவிடுகிறார்களா என கண்காணித்து மாற்றம் கொண்டு வர பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.ஆபாச படங்களை மெமரி கார்டுகளில் டவுன்லோடு செய்து தர தடை விதிக்க வேண்டும். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும். குறிப்பிட்ட வலைத்தளங்களையும் கண்காணித்து தடை விதிக்க வேண்டும் என்பது உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

பிஞ்சிலே பழுக்கும் அவலம் :பெயர் வெளியிடவிரும்பாத பால்வினை நோய் சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், "தற்போது 12 வயது நிரம்பாத மாணவர்கள் கூட, ஆபாச படங்களை பார்ப்பது மட்டுமின்றி செயல்ரீதியாகவும் முயற்சிக்கும் அவலம் உள்ளது. பலரும் ஆபாசபடங்களுக்கு அடிமையாகிவிட்டு தவறு செய்வது அதிகரித்து வருகிறது; பயம் மற்றும் சந்தேகம் காரணமாக எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்க வருகின்றனர். மாதந்தோறும் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் குறைந்தபட்சமாக 15 பேராவது என்னிடம் பரிசோதனைக்கு வருகின்றனர். இதேநிலை நீடித்தால், ஆரோக்கியமான இளைஞர்களை பார்க்கவே முடியாது' என்றார்.

கோவையை சேர்ந்த மனநல டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ""முன்பு குறிப்பிட்ட காட்சிகள் எழுத்து, போட்டோ வடிவில் மட்டுமே பார்க்க முடிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நேரிடையாக பார்க்கும் நிலை தற்போதுள்ளது. ஊடகங்களால் ஆபாச காட்சிகள் சாதாரணமாகி விட்டன; இது தவறானது, கூடாது என்ற மனநிலை மாறிவிட்டது.

படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும் வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும் உதவும்; உயிரை கொல்லவும் உதவும். ஆபாச படங்களுக்கு அடிமையான பலரும், பிரச்னை நம்மை கை மீறி போய்விட்டது; ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே பிரச்னையை கூறி தீர்வு காண முன்வருகின்றனர்,'' என்றார்.

மெமரி கார்டு பார்மேட் ஆகலையா...? - இதப்படிங்க..!



இன்றைக்கு மொபைல் போன்கள், கேமராக்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் நாம் அனைவரும் பயன்படுத்துவது எஸ்.டி. கார்ட்களே. மிகச் சிறிய இந்த கார்ட்களில் நாம் பல ஜிபி டேட்டாக்களைப் பதிந்து எடுத்துச் செல்லலாம்.

மேலே கூறப்பட்ட சாதனங்களில் வைத்து, தகவல்களை எளிதாகப் பதியலாம். தொல்லை அற்ற இந்த கார்டுகள், சில வேளைகளில் நாம் எதிர்பார்த்த செயல்பாட்டினை மேற்கொள்ளாது.

அந்த வேளைகளில் நாம் சற்றுப் பொறுமையினை இழந்து, கார்டினைக் குறை கூறத் தொடங்குவோம்.

இந்த கார்ட் பயன்படுத்துவதில் நாம் சந்திக்கும் பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் இங்கு காணலாம்.

பலரின் மனதில் தோன்றும் ஒரு கேள்வியை முதலில் காணலாம். இந்த கார்டுகளில் உள்ள டேட்டாவினைக் காந்தக் கதிர்கள் அழிக்குமா? அல்லது சிதைக்குமா? என்பதுதான்.

காந்தக் கதிர்கள் எளிதில் அழிக்கும் அளவிற்கு ப்ளாஷ் மெமரி கார்டுகள் செயல்படுவதில்லை.

காந்தக் கதிர்கள் டேட்டாவினை அழிக்கும். ஆனால், அதனைச் சாதாரணமாக நாம் வீடுகளில், அலுவலகங்களில் பயன்படுத்தும் காந்தங்கள் அழிப்பதில்லை.

மிக மிக சக்தி வாய்ந்த காந்தத் தகடுகளால் மட்டுமே, இந்தக் கார்டுகளில் உள்ள டேட்டாவினைச் சிதைக்க முடியும்.

எனவே, காந்தம் அருகே கொண்டுபோனதால், நம் எஸ்.டி. கார்ட் கெட்டுப் போய்விட்டது என்ற மாயையிலிருந்து விடுபடுவோம்.

இருப்பினும், பல்வேறு காரணங்களினால், நம்மால் சில வேளைகளில் எஸ்.டி. கார்டினைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும்.

கீழே இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவோர் சந்திக்கும் ஆறு வகையான சூழ்நிலை குறித்து விளக்கப்படுகிறது.


இதுவரை சிம்புவின் காதல் வலையில் விழுந்தவர்கள் யார் யார்..? பகீர் தகவல்களுடன்…



கோலிவுட்டை பொறுத்தவரை இப்போதைக்கு கலக்கி கொண்டிருக்கும் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ் என்றால் அது சிம்பு–ஹன்சிகா காதல் முறிவு விவகாரம்தான்.

இன்றைய கோலிவுட்டில் பல மன்மதன்கள் இருந்தாலும் சில பேர் மட்டுமே மன்மதன் சீட்டில் பட்டா போட்டு அமர்ந்து உள்ளனர். அந்த வரிசையில் படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் மன்மதன் தான் சிம்பு. பல முன்னணி கதாநாயகிகளை தன் காதல் வலையில் விழ வைத்தவர்.

முன்பு, பிரபல நடிகரின் மகளை சிம்பு காதலித்ததாகவும், பிறகு அந்த காதல் பிரேக் அப் ஆனதாகவும் பல வருடங்களுக்கு திரையுலகில் ஒரு பேச்சு இருந்தது. அது பின்னாட்களில் உண்மைதான் என உறுதியானது. காரணம் இணையத்திலும், செல்போன் வழியாகவும் உலா வந்த ஒரு தொலைபேசி உரையாடல்.

அந்த உரையாடலில் சிம்புவும், பிரபல நடிகரின் மகளும் காரசாரமாக உரையாடுகிறார்கள். பின்னர் அப்பெண்ணின் அம்மா, அதாவது பிரபல நடிகரின் மனைவி சிம்புவிடம் பேசுகிறார். மிக அந்தரங்கமான இந்த உரையாடல் வெளியே வந்தது எப்படி? யார் இதை பதிவு செய்தார்கள்? யார் இதை இணையத்திலும், செல்போன் வழியாகவும் பரப்பினார்கள்?

சில காலம், ரொம்பவும் நல்ல பிள்ளையாக அடக்கி வாசித்த சிம்பு, பிறகு நயன்தாரா உடன் காதல்வயப்பட்டார். ஆனால் அவர்கள் உறவில் திடீர் விரிசல் ஏற்பட்டது. சில மாதங்களில் நயன்தாரா சிம்புவை வெட்டிவிட்டார். வழக்கம்போல் உக்கிரமானார் சிம்பு. சில நாட்களில், நயன்தாரா உடன் சிம்பு உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அந்த புகைப்படங்களில் நயன்தாராவின் உதட்டை கவ்விக்கொண்டிருந்தார் சிம்பு.

இந்தப் புகைப்படங்கள் நயன்தாராவும் சிம்புவும் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இந்த புகைப்படங்கள் வெளியே வந்தது எப்படி? யார் இதை எடுத்தார்கள்? யார் இதை மீடியாவுக்குக் கொடுத்தார்கள்?

நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் சிம்பு, ஹன்சிகாவை காதலித்து வந்தார். இருவரும் காதலிப்பதை மறைத்து வைக்காமல் அறிவிப்பு வெளியிட்டனர். இதன் பின்பு ஹன்சிகாவின் பிறந்தநாளுக்கு கேக் ஒன்றை பரிசாக அளித்தார், இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களும் வெளியானது. இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஆறே மாதங்களில் சிம்புவும் ஹன்சிகாவும் தங்கள் காதலை முறித்துக் கொண்டதாக தனித்தனியாக அறிவித்துள்ளனர்.

பிரபல நடிகரின் மகளுடனும், நயன்தாரா உடனும் காதல் பிரிவு ஏற்பட்டபோது அந்தரங்கமான விஷயங்கள் எப்படி வெளியே விடப்பட்டதோ, அதுபோலவே இதோ இப்போதும் ஹன்சிகா உடனான காதல் முடிவுக்கு வந்துவிட்டநிலையில் சிம்பு ஹன்சிகா காதல் முறிந்துபோனதற்கான காரணம் என்று, ஹன்சிகா பற்றிய ஒரு பகீர் தகவலை படு வேகமாக படத்துறையில் பரப்பி வருகிறார்கள்.

அது என்ன காரணம்னா?

இந்த முறிவுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். ஒன்று தன் பழைய காதலி நயன்தாராவும் சிம்புவும் மீண்டும் நெருக்கமாகிவிட்டது ஒரு காரணம் என்கிறார்கள். இன்னொன்று, சிம்புவைக் காதலிப்பதாகச் சொன்ன ஹன்சிகா, இன்னொரு பக்கம், தெலுங்கு நடிகர் ஒருவருடன் அந்தரங்கமாக இருந்தார் என்றும், இதனால்தான் சிம்புவுக்கும் அவருக்கும் சண்டை வந்ததாகவும் சொல்கிறார்கள்.

சிம்புவின் காதல்களையும், காதல் பிரிவுகளையும் தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு ஒரு விஷயம் புரியும். உருகி உருகி காதலிக்கும் சிம்பு, காதல் முறிந்த பிறகு உக்கிரமாக மாறிவிடுகிறார். காதலித்த பெண்ணைப் பற்றியும், காதலித்தக் காலத்தில் அப்பெண்ணுக்கும் தனக்குமான அந்தரங்க விஷயங்கள் பற்றியும் வெளியே பரப்பி விடுவார்.

சிம்பு வெளிப்படையாக அறிவித்த காதல்கள் மட்டும்தான் இதெல்லாம். ஆனால் அவர் பற்றி வந்த காதல் அல்லது கசமுசா கிசுகிசுக்களுக்கு அளவே இல்லை. குறிப்பாக தன்னைவிட சீனியர் நடிகைகள் மூன்று பேருடன் அவர் ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

என் பெயர் சிம்பு

நான் எத்தனையோ பேருக்கு விட்டிருக்கேன் காதல் அம்பு

அதில் மாட்டியவர்கள் வாழ்க்கையோ ஆனது கிளின் போல்டு ஸ்டெம்பு

அதனால என்கிட்ட வைச்சுக்காத வீண் வம்பு

ஏ, டன்டனக்கா, டனுக்குனக்கா

ஆஸ்கார் விருதுகள் – 2014 பட்டியல் - இம்முறை இந்தியருக்கு நோ சான்ஸ்..!

உலகத் திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பை திரையரங்கிளல் மார்ச் 2ம் தேதி 86வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.இம்முறை இந்த விருதுக்காக இந்திய கலைஞர்கள் யாரும் பரிந்துரைக்கப்படவில்லை என்பதால் இந்தியருக்கு எந்த சான்ஸும் இல்லாமல் போய்விட்டது.அதே சமயம் பலராலும் பாராட்டப்பட்ட கிராவிட்டி படம் 7 விருதுகளை தட்டிச் சென்றது.

oscars_redcarpet_

உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விழாவாக ஆஸ்கார் விழா இருக்கிறது. இது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படங்களுக்கு இணைந்து வழங்கபடுகிறது. முதலில் எந்தெந்த படங்கள் இறுதி சுற்று வரை செல்ல வேண்டும் என்பது நடுவர்கள் தீர்மானிப்பார்கள். பின்பு இறுதி சுற்றில் ஒவ்வொரு விருதிற்கும் 5 திரைப்படங்கள் போட்டியிடும், இறுதியில் எந்த படத்திற்கு விருது என்பதை நடுவர் குழுவும் ஆஸ்கார் குழுவும் தீர்மானிக்கும்.

இதனிடையே உலக திரைப்பட பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் கலந்து கொண்டுள்ள இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை மேத்திவ் மெக்கோனஹே (Matthew McConaughey ), ’Dallas Buyers Club’ என்ற படத்தில் நடித்ததற்காகப் பெற்றுள்ளார்.இந்த படத்தில் ‘எச்ஐவி’ நோயாளியாக நடிக்க 40 பவுண்டு எடை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

சிறந்த நடிகைக்கான விருதை கேட் பிளான்செட் (Cate Blanchett) புளூ ஜாஸ்மின் (Blue Jasmine) படத்தில் நடித்ததற்காகப் பெற்றுள்ளார்.இவ்வாண்டின் சிறந்த படமாக ஆஸ்கார் விருத்துக்கு தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் படம் எது என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கும் வேளையில், சிறந்த படத்திற்கான விருது ’12 ஆண்டுகள் அடிமை – 12 Years A Slave) படத்திற்குக் கிடைத்துள்ளது.சிறந்த இயக்குநருக்கான விருதை அல்போன்ஸோ குவாரான்( Alfonso Cuaron) கிராவிட்டி படத்திற்காகப் பெற்றுள்ளார்.

oscars_gravity

 மேலும் . டால்லஸ் பயர் கிளப் என்ற படத்தில் நடித்த துணை நடிகர் ஜார்டு லெட்டோவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

* சிறந்த துணைநடிகர் – ஜார்டு லெடோ

* சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – கேத்ரின்

* ஒப்பனை கலைஞர்கள் – மாத்யூஸ் மற்றும் லீ தேர்வு

* சிறந்த குறும்படம் – ஹீலியம்

* சிறந்த அனிமேஷன் திரைப்படம் – ஃப்ரோஸன்

* சிறந்த சவுண்ட் எடிட்டிங் – கிராவிட்டி

* சிறந்த ஒலிக்கலவை – கிராவிட்டி

* சிறந்த திரைப்பட எடிட்டிங் – கிராவிட்டி

* சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் – கிராவிட்டி

* சிறந்த ஒளிப்பதிவு- கிராவிட்டி

* சிறந்த துணை நடிகை – லுபிடா நியாங்

* சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – தி கிரேட் ப்யூட்டி

* சிறந்த அனிமேஷன் குறும்படம் – Mr.Hublot

* சிறந்த திரைக்கதை – ஸ்பைக் ஜோன்ஸ்

* சிறந்த தழுவல் திரைக்கதை – 12 Years A Slave


“ஆடி” கார் வாங்கிய சிவகார்த்திகேயன்: பொறாமையில் பொசுங்கும் திரையுலகம்..!





விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற காமெடி போட்டி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பின், டான்ஸ் புரோகிராமில் போட்டியாளராக கலந்து கொண்டார், அதன் பின் விஜய் டிவியில் நிகழ்ச்சி கேம்பயரிங் செய்தவர். மீடியா, சினிமா பின்னணி எதுவுமின்றி கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி முன்னேறினார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் தந்தையும் தாயும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள், காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். மாமாவின் அரவணைப்பில் வளர்ந்த சிவகார்த்திகேயன் எம்.பி.ஏ படித்துக்கொண்டிருந்த போது கிடைத்த வாய்ப்பு தான் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் தன்னுடைய மிமிக்ரி திறமையை காட்டி வென்றார், அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியவரை மெரினா படத்தில் இயக்குனர் பாண்டியராஜன் நடிக்க வைத்தார், மூன்று படத்தில் காமெடி ஆக்டராக தனுஷ் உடன் சப்போர்ட்டிங்காக வந்தவர். சினிமாவில் வாய்ப்புகள் ஆரம்பிக்கும் நேரத்திலேயே மாமா பெண்ணை கல்யாணம் கட்டி சட்டுபுட்டென குடும்பஸ்தராகவும் ஆகிவிட்டார்.

மெரினா தோல்வியைடைந்தாலும் எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா இரண்டும் கை கொடுக்க அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்தார், அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக இன்று நட்சத்திர நடிகராகிவிட்டார். பிந்து மாதவி உடன் கிசு கிசுக்கப்பட்டார், தற்போது தான் சிவகார்த்திகேயனுக்கு அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

சத்யம் தியேட்டர் வாசலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட ரிலீசின் போது சிவகார்த்திகேயன் பேனர் 60 அடிக்கு மேலே இருக்க, நடிகர் விஜய்யின் சிறிய பேனர் கீழே இருந்தது. ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த, சராசரி மனிதராக நம்மிடையே சுற்றிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் திடீரென பெரிய ஹீரோவாகிவிட்டார் என்னும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கே பொறாமை வரும் போது, சினிமாவில் பல ஆண்டுகளாக ஊறிக்கிடப்பவர்களுக்கு பொறாமை எழாமலா இருக்கும்.

சில நாட்களுக்கு முன் ஒரு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி எங்க காலத்தில் செட்டில் ஆகனும்னா ஒரு 15 படங்களிலாவது ஹீரோவாக நடிக்க வேண்டும், இப்போதெல்லாம் ஐந்து ஆறு படங்களில் நடித்துவிட்டாலே செட்டில் ஆகிவிட முடிகிறது என்று பேசியுள்ளார், இது சிவ கார்த்திகேயனை மனதில் வைத்தே என்கிறார்கள். தனுஷ் என்ற புளியங்கொம்பை பிடித்தவர் தனக்கு எது சரியாக வருமோ அந்த காமெடியை கணக்கு பண்ணி படங்களில் நடித்து வெற்றி ஹீரோகிவிட்டார். சிவகார்த்திகேயன் காசு விசயத்தில் மட்டும் படு கெட்டியாம், தனது சம்பளத்தை அது போனமாசம் இது இந்த மாசம் என்ற ரேஞ்சில் மாதா மாதாம் ஏற்றியவர் தற்போது வந்து நிற்பது 5 கோடியாம். காசு விசயத்தில் படு கெட்டியாம் இந்த ஹீரோ.

சினிமாவில் வாரிசுகளும் பழம் தின்று கொட்டை போட்டவர்களும் மட்டுமே வெற்றியை சுவைத்து தாக்குபிடிக்க முடிந்த கோலிவுட்டில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சந்தானம், பரோட்டா சூரி போன்ற சினிமா பின்புலம் எதுவும் இல்லாத எளிய‌வர்களும் வெற்றி பெறுவது சினிமா உலகம் ஒரு ஆரோக்கியமான போக்கில் சென்றுகொண்டுள்ளதை காட்டுகிறது.

வாழ்த்துகள் சிவகார்த்திகேயன், உங்களுக்கு கிடைத்துள்ளது மிகப்பெரிய வெற்றியும் வாய்ப்பும், இந்த வெற்றியும் அது தரும் புகழும் பணமும் உலகத்தையே தன் காலுக்கு கீழ் தான் என்ற மிதப்பை தரும், குடும்பம், பணம், புகழ் அனைத்தையும் காப்பாற்றிக்கொள்வது உங்கள் கையில் மட்டுமே உள்ளது.

வித்யாபாலன் ஏற்று நடித்த ரோலில் தமிழில் லட்சுமிராய்..!



தென்னிந்திய சினிமாக்காரர்களுக்கு பெருந்தன்மை இல்லை என்று ஆவேசமாக கூறினார் லட்சுமிராய்.  

 இது பற்றி அவர் அளித்த பேட்டி: வித்யாபாலன் நடித்த இஷ்கியா இந்தி படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் வித்யாபாலன் ஏற்று நடித்த ரோலை தமிழில் நான் ஏற்பேன். அதை ஏற்று நடிக்க ஆசைப்படுகிறேன்.

இதுவரை சவாலான அப்படியொரு கேரக்டர் நான் செய்ததில்லை. மலையாள படங்களில் எனக்கு ராசியான நடிகை என்று பெயர் இருக்கிறது.

 அங்கு நடித்தபிறகுதான் என் சினிமா வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ், தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கின.

எப்போதுமே, படத்தில் நீண்ட நேரம் வருகிற வேடமா என்று பார்த்து ஏற்பதில்லை. வலுவான வேடமா என்றுதான் பார்க்கிறேன்.

குத்து பாடலுக்கு நடனம் ஆடுவது ஏன் என்கிறார்கள். எனது நடனத்தை பார்க்க ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

அதனால்தான் அந்த வாய்ப்பை ஏற்கிறேன். ஆனால் தென்னிந்திய சினிமாக்காரர்கள் பெருந்தன்மையாக ஏற்காமல் உடனே குத்து நடிகை என்று முத்திரை குத்திவிடுவார்கள்.

பாலிவுட்டில் அப்படி இல்லை. நெருக்கமான காட்சிகளில் நடிப்பது பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை ஆனால் அது மசாலாவுக்காக திணிக்கப்பட்டதாக இருக்காமல் காட்சிக்கு தேவை என்ற கட்டாயம் இருந்தால் மட்டுமே ஏற்பேன். இவ்வாறு லட்சுமிராய் கூறினார். 

5 வது முறையாக கமல்ஹாசன் படத்திற்கு இளையராஜா இசை...!



கடந்த 2005ஆம் ஆண்டு ரிலீஸான் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் படத்தில் இளையராஜா பணிபுரியவில்லை.


 ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் படத்தில் பணிபுரிய இளையராஜா இசைந்துள்ளார்.


என்னுடைய இசை இல்லாமல் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் படங்கள் முழுமை பெறாது.


அவர்கள் இருவரும் என்னிடம் ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் என இளையராஜா சமீபத்தில் ஒரு விழாவில் கூறியிருந்தார்.


அவர் கூறியது இன்று உண்மையாகியுள்ளது.


கமல்ஹாசன் அடுத்து நடிக்கவிருக்கும் த்ரிஷ்யம் ரீமேக் படத்தில் இளையராஜா இசையமைக்கிறார் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.


இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன்ஷங்கர் ராஜா பரிசீலனையில் இருந்தார்.

ஆனால் கமல்ஹாசனின் பரிந்துரையின்பேரில் இளையராஜாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.


 கமல்ஹாசன் சமீப காலமாக தன்னுடைய படங்களில் இளையராஜாவை பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மும்பை எக்ஸ்பிரஸ் படத்திற்கு முன் 2004ஆம் ஆண்டு விருமாண்டி, 2000ஆம் ஆண்டில் ஹேராம், 1995 ஆம் ஆண்டில் சதிலீலாவதி என கடந்த 20 வருடங்களில் 4 படங்களுக்கு மட்டும்தான் இளையாராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுளிடம் மனைவியுடன் சரண்டைந்த பிரபல டைரக்டர்..!



பிரபல மலையாள டைரக்டர் பிரியதர்சன். இவர் தமிழில் நடிகர் கார்த்திக் நடித்த ‘கோபுர வாசலியே’, நடிகை ஜோதிகா நடித்த ‘சினேகிதியே’, நடிகர் ஷாம் நடித்த ‘லேசா...லேசா’ போன்ற படங்களையும் இயக்கி உள்ளார்.

இவரது மனைவி பிரபல மலையாள நடிகை லிசி. இவர் நடிகர் கமலஹாசனுடன் தமிழில் ‘விக்ரம்’, பிரபுவுடன் ‘மனசுக்குள்ள மத்தாப்பு’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர்கள் மண வாழ்க்கையில் புயல் வீசியது. பிரியதர்சனும், லிசியும் விவாகரத்து பெறப்போவதாகவும் தகவல்கள் பரவியது. அவர்கள் இருவரையும் நடிகர் கமலஹாசன் சந்தித்து சமரசப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து பிரியதர்சனும், லிசியும் விவாகரத்து எண்ணத்தை கைவிட்டனர். இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மன்னார்சாலை நாகராஜா கோவிலுக்கு டைரக்டர் பிரியதர்சன், தனது மனைவி லிசியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

நாகராஜாவுக்கு அவர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அதன்பிறகு கோவில் வளாகத்தில் உள்ள மன்னார்சாலை வீடு என்ற ஆசிரமத்திற்கு அவர்கள் சென்றனர். அங்குள்ள பெண் சாமியார் மன்னார்சாலை அம்மா என்றழைக்கப்படும் உமாதேவி அந்தர்ஜனத்தை சந்தித்து ஆசி பெற்றனர்.

மேலும் அவரிடம் பிரியதர்சனும், லிசியும் குறி கேட்டனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.