Sunday 9 March 2014

ஷூட்டிங்கில் திருட வந்த சிறுவனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புத்தந்த இயக்குனர்..!



ஷூட்டிங்கில் உணவு திருட வந்தவனை பிடித்து நடிகனாக்கிய ருசிகர சம்பவம் இந்தி பட உலகில்  நடந்துள்ளது.

இந்தியில் தயாராகும் புதிய படம் ச்சார்பியுடியா சுக்ரே. இப்படத்தை மணீஷ் ஹரிசங்கர் இயக்குகிறார். கரீனா கபூரின் நாத்தனாரும், சயீப் அலிகானின் தங்கையுமான சோஹா அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங்  மும்பையில் நடந்தது. அப்போது 13 வயது சிறுவன் சங்கர் மண்டேல் என்பவன் பசிக்காக உணவு திருடினான். இதை கவனித்த இயக்குனரின் உதவியாளர்கள் அவனை இழுத்துவந்து இயக்குனர் எதிரில் நிறுத்தினர்.

தர்மஅடி விழப்போகிறது என்று சிறுவன் அழத் தொடங்கினான். ஆனால் இயக்குனரோ உனக்கு நடிக்க இஷ்டமா என்றார்.

அழுகையை நிறுத்திவிட்டு நல்லா நடிப்பேன் சார் என்று நடித்துக் காட்டினான்.

அவனது ஆர்வத்தை புரிந்துகொண்ட இயக்குனர் தன் படத்திலேயே அவனை நடிக்கச் சொன்னார்.

 குழந்தை குற்றவாளிகள் (சைல்ட் கிரிமினல்ஸ்)பற்றிய கதையாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கரின் தந்தையை அழைத்து அவரிடம் அனுமதி கேட்டபோது போலீசில் மகனை மாட்டிவிடத்தான் விசாரிக்கிறார்கள் என்று பயந்தார். அவரிடம் விளக்கி கூறியபின் சந்தோஷம் அடைந்தார்.

திருட வந்த சிறுவனுக்கு அடித்த யோகத்தைபார்த்து பட குழுவில் இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

அவனுக்கு திருப்தி ஏற்படும் வரை  சாப்பாடு கொடுத்தனர். 2 மாதம் அவனுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

 இப்போது அவனுடன் சேர்ந்து அவனது நண்பர்கள் சிலரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment