Sunday 23 March 2014

திரிசாவின் நிறைவேறாத ஆசை...!



தென்னிந்தியத் திரைப்படங்களில் ஒரு நடிகையின் ஆயுள்காலம் சுமாராக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள்தான். அதன்பிறகு அவர்களை ஹீரோயினாகப் படங்களில் பார்ப்பது என்பது அரிது. ஹீரோயினாக அறிமுகமான நடிகைகளை, ஆறேழு வருடங்களுக்குப் பின்னர் மெஹா சீரியல்களிலும், அதன்பின்னர் அண்ணி,அம்மா போன்ற வேடங்களிலுமே பார்க்கமுடியும்.


ஓரிரு நடிகைகள் மட்டுமே மேற்கூறிய இந்த வரம்புகளை உடைத்தெறிந்து தொடர்ந்து ஹீரோயினாக நிலைத்து நிற்கின்றனர். அந்த நடிகைகளின் பட்டியலில் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பிடித்துவருபவர் நடிகை திரிசா.


தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் ஹீரோயினாக நடித்துவரும் திரிசா 1999 ஆம் ஆண்டே தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். அறிமுகமாகி சுமார் 14 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து ஹீரோயினாக நடித்துவரும் திரிசா, மற்ற நடிகைகளுடன் ஒப்பிடுகையில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.


தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் அனைவருடனும் நடித்துள்ள திரிசா நடிப்பில் சமீபமாக வெளியான திரைப்படம் என்றென்றும் புன்னகை. இப்படமும் மெஹா ஹிட். இன்றைய இளம் நடிகைகளுடன் தொடர்ந்து போட்டியிட்டுவரும் திரிசா,


சமீபமாக அளித்திருக்கும் பேட்டியொன்றில் இளம் தலைமுறை நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதியுடன் நடிக்கவிரும்புவதாகத் தெரிவித்துள்ளாராம். மேலும் இவ்விரு நடிகர்களும் தங்களுக்குப் பொருத்தமான வேடங்களைச் சாதுர்யமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிபெற்றுவதையும் பாராட்டியுள்ளார்.


ஒருவேளை விரைவிலேயே விஜய்சேதுபதியுடனோ, சிவகார்த்திகேயனுடனோ திரிசா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment