Sunday 6 April 2014

20 நாட்களுக்கு ரூ.20 கோடி. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தீபிகா படுகோனே...!



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் ‘கத்தி’ திரைப்படத்தை அடுத்து ‘சிம்புதேவன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ப்ரியங்கா சோப்ராவிடம் முதலில் பேசப்பட்டது. ஆனால் ப்ரியங்கா சோப்ராவிற்கு வரும் 2016ஆம் ஆண்டு வரை கால்ஷீட் நிரம்பியிருப்பதால், விஜய் படத்திற்கு அவரால் கால்ஷிட் கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில் இயக்குனர் சிம்புதேவன், மும்பை சென்று தீபிகா படுகோனேவை நேரில் சந்தித்து பேசியதாக தெரிகிறது. தீபிகா படுகோனேவிடம் கதையை சொன்ன இயக்குனர் சிம்புதேவன், 20 நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்று கூற, அதற்கு தீபிகா கேட்ட சம்பளத்தொகைதான் இயக்குனரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நாள் ஒன்று ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றும் 20 நாட்கள் கால்ஷீட் தேவையென்றால் ரூ.20 கோடி சம்பளம் தேவையென்றும் தீபிகா கூறியதால் சிம்புதேவன் அதிர்ச்சி அடைந்தார். தீபிகாவின் சம்பளத்தை கேள்விப்பட்டு விஜய்யும் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

ஆறுமாத காலம் கால்ஷீட் கொடுக்கும் விஜய்க்கே ரூ.20 கோடி சம்பளம் என்ற நிலையில் 20 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ.20 கோடியா? என்ற அதிர்ச்சியில் உள்ளார் இயக்குனர் சிம்புதேவன்.

பின்னர் தயாரிப்பாளரின் ஆலோசனைப்படி கோலிவுட் கதாநாயகி ஒருவரையே தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமன்னா அல்லது ஹன்சிகாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment