Monday 24 March 2014

மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டாரா யுவன்சங்கர்ராஜா?



இஸ்லாமியராக மதம் மாறிய பிறகு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, சென்னையில் இருப்பதே இல்லை என்றும், பெரும்பாலும் மலேசியாவில்தான் இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். வாய்ஸ் மிக்ஸிங் எனும் பாடல் ஒலிப்பதிவு நடைபெறும்போது மட்டும் சென்னைக்கு வரும் யுவன்சங்கர்ராஜா, ஒன்றிரண்டு நாட்கள் சென்னையில் தங்கிவிட்டு, மீண்டும் மலேசியா கிளம்பி விடுகிறாராம்.


இசையமைக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு பாடல் கம்போஸிங் செய்யும்போது சம்மந்தப்பட்ட படத்தின் இயக்குநரை மலேசியாவுக்கு வரச்சொல்கிறாராம் யுவன்சங்கர்ராஜா.


ஹரி இயக்கத்தில், விஷால் நடிக்க உள்ள புதிய படத்திற்கு யுவன்சங்கர்ராஜாதான் இசையமைப்பாளர். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதால், அதற்கு முன் அத்தனைப் பாடல்களையும் பதிவு செய்துவிட வேண்டும் என்று அவசரப்படுத்தினாராம் ஹரி. உடனே அவரையும்,


படத்தின் நாயகன் கம் தயாரிப்பாளர் விஷாலையும் மலேசியாவுக்கு வரச்சொன்ன யுவன்சங்கர்ராஜா, அங்கேயே மொத்தப் பாடல்களின் கம்போஸிங்கையும் முடித்துக்கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, விரைவில் சென்னைக்கு வந்து அனைத்துப் பாடல்களின் ரெக்கார்டிங்கையும் முடித்துத் தருவதாகவும் சொல்லி அனுப்பினாராம்.


யுவன்சங்கர்ராஜா இஸ்லாமியராக மாறியபோது, மலேசியப் பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தியும் அப்போது அடிபட்டது. அந்த செய்திக்கும், தற்போது மலேசியாவில் யுவன்சங்கர்ராஜா டேரா அடிப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அல்லது மலேசியாவில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டாரா யுவன்சங்கர்ராஜா?

0 comments:

Post a Comment